அரசியல் நெருக்கடி: தீர்வுக்காக ஏங்கும் சாபா

அரசியல் நெருக்கடி: தீர்வுக்காக ஏங்கும் சாபா

1 mins read

மலே­சி­யா­வின் சாபா மாநி­லத்­தில் அடிக்­கடி ஏற்­படும் அர­சி­யல் நெருக்­க­டி­க­ளால் அம்­மா­நி­லத்­தைச் சேர்ந்த மக்­கள் அதி­ருப்தி அடைந்­தி­ருப்­ப­தாக சாபா

அம்­னோ­வின் மூத்த தலை­வர் அப்­துல் ரஹ்­மான் டாலான் தெரி­வித்­துள்­ளார்.

நிலை­யான அர­சி­யல் சூழ­லை­யும் மாநில அர­சை­யும் பெற, நிரந்­தர தீர்­வு வேண்டும் என அவர்­கள் ஏங்­கு­வ­தாக அவர் கூறி­னார்.

அண்­மை­யில், சாபா முதல்­வர் திரு ஹஜிஜி நூருக்கு இனி ஆத­ரவு தரப்­போ­வ­தில்லை என்று கூறி, அம்­மா­நி­லத்­தைக் கடந்த 27 மாதங்­க­ளாக ஆட்சி செய்­யும் கூட்­ட­ணி­யி­லி­ருந்து தேசிய முன்­னணி வில­கி­யது.

இத­னால் மாநில அரசு கவிழ்ந்­தது. இதற்கு சாபா தேசிய முன்­ன­ணித் தலை­வர் புங் மொக்­தார் ராடின் முக்கிய கார­ண­மாக இருந்­தார்.

இருப்­பி­னும், திரு ஹஜி­ஜிக்­குத் தொடர்ந்து ஆத­ரவு அளிப்­ப­தாக தேசிய முன்­ன­ணி­யைச் சேர்ந்த ஐந்து சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் தெரி­வித்­

துள்­ள­னர்.

இந்­நி­லை­யில், இந்­தோ­னீ­சி­யா­வில் அதி­கா­ரத்­து­வப் பய­ணம் மேற்­கொண்­டுள்ள மலே­சி­யப் பிர­த­மர் அன்­வார் இப்­ரா­கிம், நாடு திரும்­பி­யதும் சாபா­வுக்­குச் சென்று நிலை­மை­யைச் சரி­செய்ய இருப்­ப­தா­கக் கூறி­யுள்­ளார்.

சாபா­வில் நிலைமை தற்­போது சீராக, அமை­தி­யாக இருப்­ப­தாக அவர் கூறி­னார்.

சாபா அர­சாங்­கத்­தில் எவ்­வித மாற்­ற­மும் இருக்­காது என்­றும் உறுதி அளித்தார்.

சாபா உட்­பட ஒட்டுமொத்த மலே­சி­யா­வின் பொரு­ளி­யல் வளர்ச்­சிக்­கும் மக்­க­ளின் நல­னுக்­கும் தமது அர­சாங்­கம் முன்­னு­ரிமை வழங்­கு­வதாக திரு அன்­வார் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் தெரி­வித்­தார்.