20 ஆண்டுகளில் 42 தேசிய சேவையாளர்கள் மரணம்

20 ஆண்டுகளில் 42 தேசிய சேவையாளர்கள் மரணம்

2 mins read

சேவையிலிருந்தபோது 52 பேருக்கு நிரந்தர உடற்குறை

கடந்த 20 ஆண்­டு­களில் 42 தேசிய சேவை­யா­ளர்­கள், சேவை­யில் இருந்­த­போது உயி­ரி­ழந்­து­விட்­ட­தா­கத் தற்­காப்பு அமைச்­சர் இங் எங் ஹென் நாடாளு மன்றத்தில் தெரி­வித்­துள்­ளார்.

அவர்­களில் 35 தேசிய சேவையாளர் கள் சிங்­கப்­பூர் ஆயு­தப்­ப­டை­யைச் சேர்ந்­த­வர்­கள்; நால்­வர் சிங்­கப்­பூர் காவல்­து­றை­யி­னர்; மூவர் சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை­யி­னர்.

தொகு­தி­யில்லா நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஹேஸல் புவா எழுப்­பிய கேள்­விக்கு அமைச்­சர் இங் நேற்று முன்தினம் எழுத்து­ வழி அளித்த பதி­லில் இவ்­வி­வ­ரம் இடம்­பெற்­றிருந்தது.

மர­ண­ம­டைந்­தோ­ரில் அறு­வர் வேலைக்­குச் செல்­லும்­போதோ வேலை­யி­லி­ருந்து வரும்­போதோ ஏற்­பட்ட விபத்­து­களில் அல்­லது அலு­வ­ல­கக் கட­மை­களில் ஈடு­பட்­டி­ருக்­கை­யில் உயி­ரி­ழந்­த­தாக அமைச்­சர் கூறி­னார். இவர்களில் இரு­வர் சிங்­கப்­பூர் ஆயு­தப் படை, மூவர் சிங்­கப்­பூர் காவல்­துறை மற்­றும் ஒரு­வர் சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை­யி­னர் என்ற விவ­ரங்­க­ளை­யும் அவர் தமது பதிலில் குறிப்பிட்டார்.

20 ஆண்டுகளில் சிங்­கப்­பூர் ஆயு­தப் படை, காவற்படை, குடி­மைத் தற்­காப்­புப் படை ஆகி­யவற்றில் சேவை­யிலிருந்­த­போது உயி­ரி­ழந்­தோர், நிரந்­தர உடற்

­கு­றைக்கு ஆளா­னோர் எத்தனை பேர் என திரு­வாட்டி புவா கேட்டிருந்தார்.

அதற்­குப் பதி­ல­ளித்த திரு இங், காயம் கார­ண­மாக 52 பேருக்கு நிரந்­தர உடற்­குறை ஏற்­பட்­ட­தாகக் கூறி­னார். கட­மை­யில் ஈடு­பட்­டி­ருந்­த­போது ஏற்­பட்ட கடு­மை­யான காயங்­க­ளால் மூளை, முது­குத்­தண்டு, கண்­கள் மற்­றும் கை கால்­களில் நிரந்­தர உடற்­குறை ஏற்­பட்­டது.

இவர்­களில் ஆக அதி­க­மாக சிங்­கப்­பூர் ஆயு­தப் படை­யைச் சேர்ந்த 43 பேருக்கு நிரந்­தர உடற்­குறை ஏற்­பட்­டது. எஞ்சி யோரில் நால்­வர் சிங்­கப்­பூர் காவல்­து­றை­யை­யும் ஐவர் சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை­யை­யும் சேர்ந்­த­வர்­கள். மேலும் உடற்­குறை ஏற்­பட்­டோ­ரில் 11 பேர் சேவையில் ஈடுபட்டிருந்தபோது போக்­கு­வ­ரத்து விபத்­து­களில் சிக்­கி­ய­வர்­கள் என்ற விவ­ரத்­தை­யும் அவர் அளித்­தார்.

ஒவ்­வோர் ஆண்­டும் சிங்­கப்­பூர் குடி­யு­ரிமை, நிரந்­த­ர­வா­சத் தகு­தி­யு­டைய ஏறத்­தாழ 300,000 ஆண்­கள் இந்த மூன்று படை­களிலும் இணைந்து தேசிய சேவை­யாற்­று­கின்­ற­னர் என திரு இங் குறிப்­பிட்­டார்.

"இப்படைகளில் தேசிய சேவை­யாற்­றும்­போது ஏற்­படும் மரண, நிரந்­தர உடற்­குறை விகி­தங்­கள் முறையே 0.001%, 0.001%, 0.002%ஆகப் பதி­வா­கி­யுள்­ளன," என்று அவர் விளக்­கி­னார். தேசிய சேவை­யின்­போது உயி­ரி­ழப்பே நிக­ழக்­கூ­டாது எனும் நிலையை எட்ட சிங்­கப்­பூர் ஆயு­தப்­ப­டை­யும் உள்­து­றைக் குழு­வும் தொடர்ந்து பாடு­பட்டு வரு­வ­தா­க­வும் அவர் சொன்­னார்.

நடப்பு ஜன­வரி 1ஆம் தேதி­யி­லி­ருந்து அனைத்து தேசிய சேவை­யா­ளர்­க­ளுக்­கு­மான ஆயுள் காப்­பு­றுதி அதி­க­பட்­சம் $300,000 என்­றும் காயங்­க­ளுக்­கான காப்­பு­றுதி அதி­க­பட்­சம் $150,000 என்­றும் இரட்­டிப்­பாக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த டிசம்­பர் மாதம் ஹெண்­டர்­சன் ரோட்­டில் உள்ள வாடகை வீட்­டில் தீயை அணைக்­கப் போரா­டி­ய­போது எட்­வர்ட் ஹெச் கோ என்­னும் 19 வயது முழு­நேர தேசிய சேவை­யா­ளர் உயி­ரி­ழந்­தார்.