முதற்கட்டமாக தென்கொரிய, ஜப்பானியப் பயணிகளுக்குத் தடை
தனது நாட்டைச் சேர்ந்தோருக்கு கொவிட்-19 கட்டுப்பாடுகள் விதித்த நாடுகள்மீதான பழிதீர்க்கும் நடவடிக்கையை சீனா தொடங்கி உள்ளது. முதற்கட்டமாக தென்கொரியாவையும் ஜப்பானையும் சேர்ந்த சுற்றுப் பயணிகளுக்கான குறுகிய கால அனுமதிக்கான விசாரவை அது தற்காலி கமாக நிறுத்தியுள்ளது.
சுற்றுப் பயணம், வர்த்தகப் பயணம், மருத்துவப் பயணம், இடைவழி மாறுதல் பயணம் மற்றும் தனிப்பட்ட பயணங்
களுக்கு குறுகிய கால விசா வழங்குவதை தென்கொரியாவில் உள்ள சீனத் தூதரகம் நேற்று (செவ்வாய்க்கிழமை) முதல் நிறுத்தத் தொடங்கியதாக தலை
நகர் சோலில் உள்ள சீனத் தூதரக அலுவலகம் கூறியது. சீனாவைக் குறி வைத்து பாரபட்சமான முறையில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தென்கொரியா தளர்த்தினால் குறுகிய கால விசா தடை நீக்கப்படும் என்றும் அது தெரிவித்தது.
தென்கொரிய வெளியுறவு அமைச்சர் பார்க் ஜின்னை தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்ட சீன வெளியுறவு அமைச்சர் குய்ன் காங், கட்டுப்பாடுகள் தொடர்பாக தமது கவலையை வெளியிட்டார். இச்சம்பவம் நடைபெற்ற மறுநாளே தென்கொரியப் பயணிகளுக்கான தடையை சீனா அறிவித்துள்ளது.
ஆனால், சீனாவிலிருந்து வருவோருக்கான கட்டுப்பாடுகளை தமது அரசாங்கம் கடுமையாக்கியது அறிவியல் அடிப்படையிலானது என்று தென்கொரிய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் கூறினார்.
சீனாவிலிருந்து வருவோர் 'பிசிஆர்' பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாட்டை தென்கொரியா கடந்த வாரம் அறிமுகப்படுத்தியது. சீனாவுக்கான விமான எண்ணிக்கையைக் குறைத்ததோடு தற்போதைய விமானங்கள் அனைத்தும் ஒரே விமான நிலையத்தில் சேவையாற்றும் வகையில் மாற்றங்களை தென்கொரியா செயல்படுத்தியது.
இதற்கிடையே, ஜப்பானியர்களுக்கும் விசா வழங்குவதை சீனா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக கியோடோ செய்தி குறிப்பிட்டது. சுற்றுப்பயணத் துறையைச் சேர்ந்த அடையாளம் தெரியாத சிலரை மேற்கோள் காட்டி அது இந்தத் தகவலை வெளியிட்டது.
சீனாவிலிருந்து வருவோருக்கு தொற்றில்லை சான்றிதழ் அளிப்பது போன்ற கட்டுப்பாடுகளை அண்மைய நாள்களாக உலகின் பல நாடுகள் அறிமுகப்படுத்தி வருவதற்குப் பழிவாங்கத் தொடங்கி இருப்பதையே இந்தத் தடைகள் உணர்த்துகின்றன. இது 'பாரபட்சமான செயல்' என்று சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளரான வாங் வென்பின் தெரிவித்தார்.
"இதேபோன்ற நடவடிக்கையை நாங்களும் எடுப்போம்," என்று கூறிய அவர் அதுபற்றி தெளிவாகத் தெரிவிக்கவில்லை.
சீனா பழிதீர்க்க எந்தவொரு காரணமும் இல்லை என்றும் சுகாதார நிபுணர்
களின் ஆலோசனைப்படியே கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருப்பதாகவும் கடந்த வாரம் அமெரிக்கா தெரிவித்து இருந்தது.
மலேசியாவில்
சிறப்பு வரிசை
சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு சிறப்பு வரிசைப் பகுதியை குடிநுழைவுத் துறை ஏற்படுத்தும் என மலேசிய சுகாதார அமைச்சு நேற்று கூறியது. கிருமித்தொற்று அறிகுறி இருப்போர் சுகாதார அதிகாரிகளிடம் கொண்டு செல்லப்பட்டு அவர்களுக்கு ஆர்டிகே-ஆன்டிஜென் கொவிட்-19 பரிசோதனை நடத்தப்படும் என்றும் அது கூறியது.
இந்தியாவில் குறைவு
சீனாவில் கிருமிப் பரவல் அதிகரிப்பதைக் காரணம் காட்டி 3 வாரங்களுக்கு முன்னால் சீனப் பயணி களுக்குக் கட்டுப்பாடு விதித்த இந்தியாவில் கொவிட்-19 பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க வில்லை. மாறாக, அது குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் நாடு முழுவதும் 121 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டனர்.

