ஹொக்காய்டோ விபத்தில் சிங்கப்பூர் மாதும் நான்கு மாதக் குழந்தையும் உயிரிழப்பு

ஜப்­பா­னின் ஹொக்­காய்டோ மாநிலத்­தில் நடந்த கார் விபத்­தில் 41 வய­தான சிங்­கப்­பூர் மாது ஒருவரும் அவ­ரின் நான்கு மாதப் பெண் குழந்­தை­யும் உயி­ரி­ழந்­ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கமி­ஃபு­ரானோ நக­ரில் நேற்று முற்­ப­கல் 11.30 மணி­ய­ள­வில் இவ்­வி­ரு­வ­ரும் பய­ணம் செய்த கார், லாரி ஒன்­று­டன் நேருக்கு நேர் மோதி­ய­தாக சீன­மொழி நாளே­டான சாவ்­பாவ் தெரி­வித்­தது.

காரை மாதின் 44 வயதுக் கணவர் ஓட்டிச்சென்றதாகவும் விபத்தில் அந்த ஆடவரும் தம்­ப­தி­யின் மூன்று வய­து மூத்த மகளும் காய­ம் அடைந்­த­தாகவும் ஜப்­பா­னிய ஊட­கங்­கள் தெரிவித்துள்­ளன. இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். அவர்களின் உடல் நிலை சீராக இருப்பதாகக் காவல்துறையினரை மேற்கோள்காட்டி சாவ்பாவ் தக­வல் வெளி­யிட்­டு உள்ளது,

கிளைச் சாலையிலிருந்து பனி நிறைந்த முக்கியச் சாலைக்குத் திரும்பியபோது கார், அந்த லாரியுடன் மோதியதாக ஏஎன்என் நியூஸ் செய்தி நிறுவனம் கூறியது.

விபத்துக்கான காரணம் குறித்த விசாரணை தொடர்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!