பிரிட்டனில் புதிய நெருக்கடி; மீண்டும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம்

பிரிட்டனில் புதிய நெருக்கடி; மீண்டும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம்

2 mins read
fbe99083-1a75-4a8e-be19-62ae7a981178
படம்: ராய்ட்டர்ஸ் -

பிரிட்­ட­னில் ஆம்­பு­லன்ஸ் ஓட்­டு­நர்­கள் மீண்­டும் வேலைநிறுத்­தத்­தில் ஈடு­ப­டு­வ­தால் பொது­மக்­கள் அவ­ச­ரச் சேவை­க­ளுக்கு நீண்ட நேரம் காத்­தி­ருக்க நேரி­ட­லாம் என்று எச்­ச­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

நாட்­டின் சுகா­தா­ரத் துறை மற்­றொரு நெருக்­க­டியை எதிர்­கொள்­ளக்­கூ­டும் என்று கரு­தப்­படு­கிறது.

தேசி­ய சுகா­தா­ரச் சேவை ஊழி­யர்­க­ளின் சம்­ப­ளக் குறைப்பு தொடர்­பில் இரண்டு தொழிற்­சங்­கங்­கள் வேலைநிறுத்­தத்­தில் ஈடு­பட்­டுள்­ளன.

இதன் தொடர்­பில் அமைச்­சர்­க­ளு­டன் சென்ற திங்­கட்­கிழமை நடை­பெற்ற பேச்­சு­வார்த்தை தோல்­வி­யில் முடிந்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

குறை­வான அவ­சர மருத்­துவ உதவி வாக­னங்­கள் மட்­டுமே (ஆம்­பு­லன்ஸ்) சேவை­யில் ஈடு­படும் என்­றும் அவ­சர மருத்­துவ உத­வியை நாடும் தொலை­பேசி அழைப்­பு­க­ளுக்­குப் பதி­ல­ளிக்க குறை­வான ஊழி­யர்­களே பணி­யில் இருப்­பர் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

முன்­ன­தாக, அண்­மைய கிறிஸ்­து­மஸ் பண்­டி­கைக் காலத்­தி­லும் இதே­போன்ற வேலை நிறுத்­தம் நடை­பெற்­றது. கிட்­டத்­தட்ட 30 ஆண்­டு­களில் நடை­பெற்ற இத்­த­கைய முதல் வேலை­நி­றுத்­தம் அது.

உயி­ருக்கு ஆபத்­தான சூழல்­களில் மட்­டுமே அவ­சர மருத்­துவ வாக­னச் சேவையை நாடும்­ப­டி பொது­மக்­கள் கேட்­டுக்­கொள்­ளப்­பட்­ட­னர்.

இம்­மா­தப் பிற்­ப­கு­தி­யில் தாதி­யர், இள­நிலை மருத்­து­வர்­கள், உட­லி­யக்க சிகிச்சை வல்­லு­நர்­கள் ஆகி­யோ­ரும் வேலை­நி­றுத்­தம் செய்­யத் திட்­ட­மிட்­டுள்­ள­னர்.

பல்­வேறு துறை­கள் பாதிக்­கப்­ப­டு­வ­தால் நிலை­மை­யைச் சமா­ளிக்க, வர்த்­தக அமைச்­சர் கிராண்ட் ஷாப்ஸ் வேலை­நி­றுத்­தத் தடுப்­புச் சட்­டத்தை நாடா­ளு­மன்­றத்­தில் பரிந்­து­ரைத்­தார்.

நேற்று முன்­தி­னம் பரிந்­து­ரைக்­கப்­பட்ட இந்­தச் சட்­டத்­தின்­கீழ், வேலை­நி­றுத்த நாள்­க­ளி­லும் தீய­ணைப்பு, ஆம்­பு­லன்ஸ், ரயில் சேவை ஆகிய அத்­தி­யா­வ­சி­யச் சேவைத் துறை­கள் குறைந்­த­பட்ச சேவை வழங்­கு­வது கட்­டா­யம்.

குறைந்­த­பட்ச சேவை­யின் அளவு குறித்து அர­சாங்­கத்­து­டன் கலந்­தா­லோ­சித்த பிறகு முடிவு எடுக்­கப்­படும்.

பிரான்ஸ், ஜெர்­மனி உள்­ளிட்ட ஐரோப்­பிய நாடு­க­ளைப் பின்­பற்றி பிரிட்­டன் இவ்­வாறு நட­வ­டிக்கை எடுப்­ப­தாக அமைச்­சர் ஷாப்ஸ் கூறி­னார்.

"வேலை­நி­றுத்­தம் செய்­யும் உரி­மையை அர­சாங்­கம் பிரிட்­டிஷ் மக்­க­ளி­ட­மி­ருந்து பறிக்­காது. ஆனால் போராட்­டம் நடக்­கும் நாள்­க­ளி­லும் உடல்­ந­லக் குறை­வால் துன்­பு­று­வோர் சிகிச்சை பெறு­வ­தற்­கு முன்­னு­ரி­மை­அ­ளிக்­கப்­பட வேண்­டும். அதை உறு­தி­செய்­யும் பொருட்டு குறைந்­த­பட்ச பாது­காப்­புத் தர­நி­லையை அமல்­ப­டுத்த வேண்­டி­யது முக்­கி­யம்," என்று அமைச்­சர் ஷாப்ஸ் கூறி­னார்.

ஆனால் இது மனித உரி­மை­கள், குடி­மக்­க­ளின் சுதந்­தி­ரம் ஆகி­ய­வற்­றின் மீதான தாக்­கு­தல் என்று தொழிற்­சங்­கங்­கள் குறை­கூ­று­கின்­றன. சுகா­தா­ரத்­து­றைக்­கு இது புதிய நெருக்­க­டி­யாக விளங்­கு­மெ­னக் கரு­தப்­ப­டு­கிறது.