இலங்கையின் முன்னைய அதிபர் மைத்திரிபால சிரிசேனாவும் இன்னும் நான்கு அதிகாரிகளும் செயல்படத் தவறியதால்தான் 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை அன்று தேவாலயங்களில் வெடிகுண்டுத் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டதாக அந்நாட்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பயங்கரவாதத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு திரு சிரிசேனா தமது பணத்திலிருந்து 100 மில்லியன் இலங்கை ரூபாயை (S$361,496) இழப்பீடாகத் தரவேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மாண்டவர்கள் மற்றும் அவர் களின் குடும்பத்தாரின் அடிப்படை மனித உரிமைகளை திரு சிரிசேனாவும் நான்கு உயர் அதிகாரிகளும் மீறினர் என்று அது தெரிவித்தது.
அப்போதைய காவல்துறைத் தலைவர், உளவுத் துறை மூத்த அதிகாரிகள், தற்காப்பு அமைச்சு செயலாளர் ஆகியோர் அந்த மற்ற நான்கு அதிகாரிகள் ஆவர். அவர்கள் இழப்பீடாக 210 மில்லியன் இலங்கை ரூபாய் (S$758,962) செலுத்தவேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது. தற்காப்பு அமைச்சராகவும் அப்போது பொறுப்பு வகித்த திரு சிரிசேனாவுக்கும் அப்போதைய பிரதமருக்கும் இடையே தொடர்பில்லை. மேலும் உளவுத் துறை தகவல்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று உச்சநீதிமன்றம் கூறியது.
மூன்று தேவாலயங்களிலும் மூன்று ஹோட்டல்களிலும் ஏறத்தாழ ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட ஆறு தாக்குல்களில் கிட்டத்தட்ட 270 பேர் மடிந்தனர்.

