அயலகத் தமிழர் தின மாநாட்டில் கூடிய உலகத் தமிழர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புகழாரம் உழைப்பால் உயர்ந்த உலகத் தமிழர்கள்

அயலகத் தமிழர் தின மாநாட்டில் கூடிய உலகத் தமிழர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புகழாரம் உழைப்பால் உயர்ந்த உலகத் தமிழர்கள்

2 mins read
33d6d204-796b-4116-9b18-92674dd776a1
-
multi-img1 of 2

தமி­ழர்­கள் பல நாடு­க­ளி­லும் தவிர்க்க முடி­யாத சக்­தி­யாக விளங்­கு­வ­தா­க­வும் உழைப்­பால் தங்­களை மட்­டு­மின்றி தங்­கள் நாடு­க­ளை­யும் அவர்­கள் உயர்த்­தி­யுள்­ள­தா­க­வும் தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டா­லின் கூறி­யுள்­ளார்.

அய­லக தமி­ழர்­க­ளின் ஆற்­ற­லும் ஆராய்ச்சி திற­னும் தனிப்­பெ­ரும் வர­லா­றாக உரு­வாகி வரு­கிறது என்றார் திரு ஸ்டா­லின். தமி­ழர்­கள் எந்­தெந்த நாடு­க­ளுக்கு சென்­றார்­களோ அவற்­றை­யெல்­லாம் செழிக்க செய்­துள்­ள­னர் என்று அவர் குறிப்­பிட்­டார்.

கட­லும் கண்­டங்­களும் நம்மை பிரித்து வைத்­தி­ருந்­தா­லும் உல­கில் வாழும் தமி­ழர்­களை இணைக்­கும் என்­றும் அவர் கூறினார். நேற்று நிறை­வ­டைந்த இரண்டு நாள் அய­ல­கத் தமி­ழர் தின விழா­வில் நிறை­வில் திரு ஸ்டா­லின் பேசி­னார்.

தமி­ழர்­க­ள் ஈரா­யி­ரம் ஆண்­டு­க­ளுக்கு முன்­னரே உல­கில் பர­வத் தொடங்­கி­ய­தை­யும் அவர்­கள் பல நாடு­க­ளு­டன் நல்­லு­றவு காத்­த­தை­யும் திரு ஸ்டா­லின் சுட்­டி­னார்.

தென்­கி­ழக்­கா­சிய வட்­டா­ரத்­தில் தமி­ழர்­கள் முன்பே கால் பதித்­த­தை­யும் அவர்­கள் இங்கு பல நூறு ஆண்­டு­க­ளாக வேரூன்­றி­ய­தை­யும் சுட்­டிக்­காட்­டும் வகை­யில், கடற்­படை கொண்­டி­ருந்த சோழ மன்­னர்­கள் மேற்­கொண்ட பய­ணங்­கள் பண்­பாட்டு உற­வு­க­ளாக வளர்ந்­தி­ருப்­ப­தாக அவர் கூறி­னார்.

அத்­தொ­டர்­பு­களை வலுப் ­ப­டுத்­தும் நோக்­கில், புலம் பெயர் தமி­ழர்­கள் குறித்து விரி­வாக ஆவ­ணப்­ப­டுத்­தப்­படும்.

மேலும், வெளி­நாடு செல்­லும் தமி­ழர்­கள் குறித்து தர­வுத் தளம் உரு­வாக்­கப்­படும் என்று தெரி­வித்­தார்.

வேலைக்­காக வெளி­நாடு சென்று எதிர்­பா­ராமல் உயி­ர் இ­ழந்­த­வர்­க­ளின் குடும்­பத்­துக்கு மாத ஓய்­வூ­திய திட்­டம் அறி­ முகப்­ப­டுத்­தப்­படும். அத்­து­டன் புலம் பெயர்ந்து வாழும் தமி­ழர் ­க­ளின் பிள்­ளை­கள், இளை­யர் என 200 பேர் ஒவ்­வோர் ஆண்­டும் தேர்வு செய்­யப்­பட்டு பண்­பாட்டுச் சுற்­று­லா­வுக்­காக தமிழ்­நாடு அழைத்­துச் செல்­லப்­ப­டு­வர் என்று திரு ஸ்டா­லின் கூறினார்.

திரு ஸ்டா­லின் தலை­மை­யி­லான தமிழ்­நாடு அர­சாங்­கம், பன்­னாட்­டுத் தமி­ழர்­க­ளு­ட­னான உறவை வலுப்படுத்த கூடு­தல் முயற்­சி­களை எடுத்து வரு­கிறது. வெளி­நாடு வாழ் தமி­ழர்களுக்­காக தனி அமைச்சை உரு­வாக்­கி­ய­து­டன் ஒவ்­வோர் ஜன­வரி 12ம் தேதி­யும் அய­லகத் தமி­ழர் நாளாக கொண்­டா­டப்­படும் என்­றும் தெரி­வித்­தது.

தமிழ்­நாட்­டில் புதி­தா­கத் தொடங்­கப்­பட்ட இளம் நிறு­வ­னங்­களில் பொரு­ளா­தார பலம் பொருந்­திய உல­கத் தமி­ழர்­கள்­மு­த­லீடு செய்ய வழி­வ­குக்­கும் இணை­யத்­த­ளத்தை திரு ஸ்டா­லின் இரண்டு நாள்­க­ளுக்கு முன்­னர் தொடங்கி வைத்­தார்.