மண்ணில் புதையுண்டு வரும் ஜோஷிமத்; கிழக்கு, மேற்குத் தொடர்ச்சிமலைகளுக்கும் ஆபத்து

மண்ணில் புதையுண்டு வரும் ஜோஷிமத்; கிழக்கு, மேற்குத் தொடர்ச்சிமலைகளுக்கும் ஆபத்து

2 mins read

இந்­தி­யா­வின் உத்­த­ரா­கண்ட் மா

நிலத்­தில் உள்ள ஜோஷி­மத் நக­ரம் மெது மெது­வாக மண்­ணில் புதை­யுண்டு வரு­வ­தைக் காட்­டும் செயற்­கைக்­கோள் படங்­களை இந்­திய விண்­வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்‌ரோ) வெளி

யிட்­டுள்­ளது.

இம­ய­மலை நக­ர­மான ஜோஷி­மத் வெறும் 12 நாள்­களில் 5.4 சென்­டி­மீட்­டர் அள­வில்

மண்­ணுக்­குள் இறங்­கி­யி­ருப்­பதை அது காட்­டு­வ­தாக நிபு­ணர்­கள் தெரி­வித்­த­னர்.

ஜோஷி­மத் நக­ரம் வாயி­லாக இந்­துக்­க­ளின் புனிதத்தலமான பத்­ரி­நாத்­துக்­கும் சீக்­கி­யர்­க­ளின் புனி­தத்தலமான ஹெம்­குந்த் சாஹிப் குருத்­வா­ரா­வுக்­கும்

பிர­சித்தி பெற்ற அனைத்­து­ல­கப் பனிச்­ச­றுக்­குத் தல­மான ஔலி ஆகி­ய­வற்­றுக்­கும் செல்­ல­லாம்.

ஆனால் தற்­போது அந்த

நக­ரம் மண்­ணில் புதை­யுண்டு வரு­வ­தால் அங்­குள்ள மக்­கள் துய­ரில் ஆழ்ந்­துள்­ள­னர்.

இந்­நி­லை­யில், ஜோஷி­மத்­தில் நில­வும் அபா­ய­க­ர­மான சூழல் குறித்து இந்­திய உள்­துறை அமைச்­சர் அமித் ஷா ஆய்வு நடத்­தி­யுள்­ளார்.

அங்­குள்ள மக்­கள் எதிர்­கொள்­ளும் சிர­மத்­துக்கு உட­னடி யாகத் தீர்­வு­காண்­பது குறித்து அமைச்­சர்­கள், நிதின் கட்­கரி, ஆர்.கே. சிங், புபேந்­திரா யாதவ், கஜேந்­திரா சிங் ஆகி­யோ­ரு­ட­னும் உயர் அதி­கா­ரி­க­ளு­ட­னும் அவர் அவ­ச­ரக் கூட்­டம் நடத்­தி­யுள்­ளார்.

இது­வரை ஜோஷி­மத் நக­ரைச் சேர்ந்த 169 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 589 பேர் துயர்­து­டைப்பு மையங்­க­ளுக்கு அற்புறப்படுத்தப்

பட்­டுள்­ள­னர்.

ஜோஷி­மத்­தி­லும் பிபல்­கோட்டி யிலும் உள்ள துயர்­து­டைப்பு மையங்­களில் 835 அறை­கள் இருப்­ப­தா­க­வும் அங்கு மொத்­தம் 3,630 பேர் தங்­க­லாம் என்­றும் அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

இதற்­கி­டையே, ஜோஷி­மத் நக­ரம் மண்­ணில் புதை­யுண்டு வரு­வது போல கிழக்கு, மேற்கு தொடர்ச்­சி­ம­லை­க­ளி­லும் நிக­ழக்­கூ­டும் என்று புவி­யி­யல் நிபு­ணர்­களும் விஞ்­ஞா­னி­களும்

எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ள­னர்.

அங்கு மேற்கொள்ளப்­படும் மேம்­பாட்­டுப் பணி­களை நிறுத்­தா­வி­டில் அவ்­வி­டங்­களும் மண்­ணில் புதைந்­து­வி­டும் என்று அவர்­கள் கவலை தெரி­வித்­த­னர்.

அடிக்­கடி நிக­ழும் நில­ந­டுக்­கம், நிலச்­ச­ரி­வு­கள், வெள்­ளம் ஆகி­ய­வற்­றின் மூலம் கிழக்கு, மேற்­குத் தொடர்ச்­சி­ம­லை­கள் எச்­ச­ரிக்கை மணி ஒலித்து வரு­வ­தாகப் புவி­யி­யல் நிபு­ணர்­கள் கூறு­கின்­ற­னர்.

இந்த எச்­ச­ரிக்­கையை மத்­திய அர­சாங்­கம், மாநில அர­சாங்­கங்­கள், அப்­ப­கு­தி­யில் வாழ்­ப­வர்­கள் புறக்­க­ணித்­து­வி­டக்­கூ­டாது என்று அவர்­கள் வலி­யு­றுத்­து­கின்­ற­னர்.

சாலை­கள், சொகுசு விடு­தி­கள் போன்­ற­வற்­றுக்­கான கட்­டு­மா­னப் பணி­க­ளுக்­குத் தேவைப்­படும் கற்­க­ளைப் பெறு­வ­தற்­காக கிழக்கு, மேற்­குத் தொடர்ச்­சி­

ம­லை­களில் வெடி­வைத்து தகர்க்­கும் நட­வ­டிக்­கை­களை காலம் தாழ்த்­தா­மல் நிறுத்த வேண்­டும் என்று அவர்­கள் அதி­கா­ரி­க­ளி­டம் தெரி­வித்­துள்­ள­னர்.