சீனாவில் கொவிட்-19 பாதிப்பு உச்சமடைந்துள்ளது. இந்த நிலை அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் அத்துடன் பிரச்சினை தீர்ந்துவிடாது என்றும் சீனாவின் கிராமப்புறங்களுக்கு கொவிட்-19 கிருமி பரவக்கூடும் என்றும் சீனாவின் நோய்க்
கட்டுப்பாடு, தடுப்பு மையத்தின் முன்னாள் தலைமை தொற்றுநோய் நிபுணர் டாக்டர் செங் குவாங் தெரிவித்தார்.
சீனக் கிராமங்களில் மருத்துவ வசதிகள் குறைவாக இருப்பதால் அங்கு கிருமிப் பரவல் அதிகமானால் நிலைமை கட்டுக்கடங்காமல் போகக்கூடும் என்று அவர் கவலை தெரிவித்தார்.
சீனாவின் சீனப் புத்தாண்டு விடுமுறை இம்மாதம் 21ஆம் தேதியன்று தொடங்குகிறது.
அப்போது மில்லியன்கணக்
கானோர் தங்கள் சொந்த ஊர்
களுக்குத் திரும்புவர் என்றும் இந்தப் பயணங்கள் காரணமாக மில்லியன் கணக்கானோருக்குக் கிருமித்தொற்று ஏற்படும் சாத்தியம் அதிகம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளாக கொவிட்-19 அறவே இல்லாத அணுகுமுறையை சீனா இலக்காக கொண்டிருந்தது.
இலக்கை எட்ட அது மிகக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால் சீன நாட்டவர்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டு ஆர்ப்பாட்டங்கள் ஆங்காங்கே வெடித்தன.
இதையடுத்து, சீனா கட்டுப்பாடுகளைத் தளர்த்தி அதன் எல்லைகளை மீண்டும் திறந்தது.
திடீரென்று கட்டுப்பாடு
களைத் தளர்த்தியதாலும் சீனாவில் பலர் இன்னும் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளாத
தாலும் சீனாவில் கொவிட்-19 கிருமி வேகமாகப் பரவி வரு
வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர், மாண்டோர் எண்ணிக்கையை சீனா குறைத்துக் காட்டுவதாக மேற்கத்திய நாடுகள் குறைகூறு
கின்றன.
இதற்குச் சீனா மறுப்பு தெரிவித்து மேற்கத்திய நாடுகளின் இந்தக் கருத்துக்குக் கடும்
கண்டனம் தெரிவித்துள்ளது.
கிருமித்தொற்று காரணமாக சீனாவில் நிலைமை மோசமடையும் என்று டாக்டர் செங் கூறினார்.
"பெரிய நகரங்களில் மட்டுமே கிருமிப் பரவல் நடவடிக்கைகள் தொடர்பாக கவனம் செலுத்தப்
படுகிறது. கிராமங்களிலும் கிருமிப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிடும் நேரம் வந்துவிட்டது," என்று அவர் தெரிவித்தார்.
சீனாவெங்கும் மருத்துவ சாதனங்கள், மருந்துகள் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்து வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

