ஈராண்டுகளுக்குப் பிறகு களைகட்டும் பொங்கல் விழா

ஈராண்டுகளுக்குப் பிறகு களைகட்டும் பொங்கல் விழா

1 mins read
c91c2bcb-7d42-4e3a-9486-4105875b5ee2
-

பொன்­மணி உத­ய­கு­மார்

பொங்­கல் விழா­வுக்கு முந்­தைய நாளான நேற்று, பல­ரும் லிட்­டில் இந்­தியா வட்­டா­ரக் கடை­க­ளுக்­குச் சென்று பொருள்­களை வாங்­கி­னர். இத­னால் தேக்­கா­வட்­டார முக்­கிய சாலை­களில் நேற்று கூட்­டம் அலை­மோ­தி­யது.

இத்­த­கைய மக்­கள் கூட்­டம்­தான் மறு­நாள் தைப் பொங்­கல் என்­பதை நமக்கு உணர்த்­தும் என்­கி­றார் இல்­லத்­த­ர­சி­யான 51 வயது வசந்தி ஈஸ்­வ­ரன். விழாக்­கா­லங்­களில் குடும்­பத்­து­டன் சென்று பொருள்­கள் வாங்­கு­வது இவ­ரது வழக்­கம்.

பொங்­க­லுக்கு முந்­தைய நாள் சென்­றால் புதிய காய்­க­றி­கள், அன்­ற­லர்ந்த மலர்­கள் கிடைக்­கும் என்­ப­தால் இதை வழக்­க­மா­கக் கொண்­டுள்­ளார் நிர்­வா­கி­யான காமாட்சி கலி­ய­பெ­ரு­மாள், 52. இது­போன்ற தரு­ணங்­களில் பொங்­கல் விழா­வின் கோலா­க­லத்தை உணர முடி­வ­தா­க­வும் இவர் சொன்­னார்.

சிங்­கப்­பூ­ரில் முதல்­மு­றை­யாக பொங்­கல் திரு­நா­ளைக் கொண்­டா­ட­வி­ருக்­கும் திரு­மதி மைதிலி, 48, கேம்­பல் லேனில் நேற்று தன் கண­வ­ரு­டன் பொங்­க­லுக்­குத் தேவை­யான பொருள்­களை வாங்க வந்­தி­ருந்­தார். இந்­தி­யா­வில் கொண்­டா­டி­யது போலவே இங்­கும் உணர்­வ­தாக அவர் மகிழ்ச்­சி­யு­டன் கூறி­னார்.

பணிச்­சு­மை­யால் ஏற்­பட்ட நேர­மின்மை கார­ண­மாக கடைசி நேரத்­தில் வந்­தா­லும் தேவை­யான பொருள்­களை ஒரே கடை­யில் வாங்க முடி­வ­தாகக் குறிப்­பிட்­டார் திரு மகேந்­தி­ரன், 48.

தனக்கு ஓய்வுநாள் என்­ப­தால் நேற்­றைய தினத்­தைத் தேர்ந்­தெ­டுத்­த­தா­கக் கூறி­னார் திரு சத்­ய­மூர்த்தி, 58. வீட்டை சுத்­தம் செய்து கொண்­டி­ருந்­த­தால் நேற்­று­தான் நேரம் கிடைத்­தது என்­ற­னர் நண்­பர்­கள் மல­ரும் சரஸ்­வ­தி­யும். ஈராண்டு கழித்து இம்முறை மக்­க­ளி­டையே விழா உணர்வு அதி­கரித்­தி­ருப்­ப­தைக் கண்கூடாகக் காண­மு­டிந்­தது.