சிங்கப்பூர் காற்பந்தின் நிலை, வருங்காலம் என்ன? முன்னாள் தேசிய காற்பந்து வீரர் திரு வி. கணேசன், விளையாட்டு எழுத்தாளர் திரு தியாகராஜு, விளையாட்டுச் செய்தியாளர் திரு ஸியா-உல் ரவ்ஷான் ஆகியோருடன் கலந்துரையாடுகிறார் தமிழ் முரசு உதவி ஆசிரியர் பிரசன்னா கிருஷ்ணன்.
இந்த 'முரசு காப்பிக் கடை' வலையொளியில் ஆங்கில மொழிபெயர்ப்பும் சேர்க்கப்பட்டுள்ளது. சில நாள்களுக்கு முன்பு தென்கிழக்காசிய நாடுகளின் தேசிய காற்பந்து அணிகளுக்கான ஏஎஃப்எஃப் மிட்சுபிஷி இலெக்ட்ரிக் கிண்ணப் போட்டியிலிருந்து வருத்தம் தரும் வகையில் வெளியேறியது சிங்கப்பூர் அணி.
அதைத் தொடர்ந்து தேசிய காற்பந்து அணி மட்டுமல்லாமல் சிங்கப்பூரின் காற்பந்துச் சூழலையும் ஆராயும் முயற்சியில் இறங்கியது தமிழ் முரசு.
வலையொளியில் ஒளிவுமறைவு இன்றி தங்கள் கருத்துகளை முன்வைத்தனர் நமது பேச்சாளர்கள்.
மேல்காணும் 'கியூஆர்' குறியீட்டை வருடி 'முரசு காப்பிக் கடை' வலையொளியை நீங்கள் காணலாம்.

