ஈசூனில் பேருந்தை மோதிய கார்; ஒருவர் மரணம், எழுவர் காயம்

ஈசூனில் பேருந்தை மோதிய கார்; ஒருவர் மரணம், எழுவர் காயம்

1 mins read
e9eb359c-dfbc-4583-8f04-eea0abb09dfb
-

ஈசூ­னில் நேற்று முன்­தி­னம் இரவு எஸ்­பி­எஸ் டிரான்­சிட் பேருந்­து­மீது 'கெட்கோ' நிறு­வன வாடகை கார் மோதி­ய­தில் அதன் 31 வயது ஓட்­டு­நர் உயி­ரி­ழந்­தார்.

ஈசூன் அவென்யூ 2, ஈசூன் சென்ட்­ரல் சந்­திப்­பில் நிகழ்ந்த இந்த விபத்து குறித்து நேற்று முன்­தி­னம் இரவு 10.55 மணி­ய­ள­வில் தக­வல் கிடைத்­த­தாக சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை தெரி­வித்­தது.

விபத்து தொடர்­பில் சமூக ஊட­கங்­களில் பகிரப்பட்ட காணொ­ளி­யில், சிவப்பு போக்கு­வ­ரத்து சமிக்­ஞை­யில் நிற்­கா­மல் சென்ற கார், வேறொரு திசை­யில் சென்­று­கொண்­டி­ருந்த பேருந்­துச் சேவை 117ன் வலது பக்­கத்­தில் வேக­மாக மோது­வ­தைக் காண­மு­டி­கிறது.

இருக்­கை­யில் சிக்­கிக்­கொண்ட கார் ஓட்­டு­நர் மீட்­கப்­பட்டு சுய­நி­னை­வற்ற நிலை­யில் கூ டெக் புவாட் மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்­டு­செல்­லப்­பட்­டார். பின்­னர் சிகிச்சை பல­னின்றி அவர் உயி­ரி­ழந்­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

பேருந்­தில் பய­ணம் செய்த மேலும் ஆறு பேர் காயங்­க­ளுக்­காக சுய­நி­னை­வு­டன் மருத்­து­வ­மனைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­ட­னர். ஒருவர் சிகிச்சை பெற மறுத்துவிட்டதாகக் கூறப்பட்டது. விபத்து குறித்த விசாரணை தொடர்கிறது.