திருநாளின் இனிமை கூட்ட இணைந்த கைகள்

திருநாளின் இனிமை கூட்ட இணைந்த கைகள்

2 mins read
6111e298-e3a1-46e2-8635-5f5cce6695fc
-
multi-img1 of 2

தமி­ழர் திரு­நா­ளாம் தைப்­பொங்­கல் கொண்­டாட்­டம் புக்­கிட் பாஞ்­சாங் குழுத்­தொ­கு­தி­யில் பாரம்­ப­ரி­யத்­தைப் பறை­சாற்­றி­யது. பெண்­டிங் சாலை திறந்­த­வெ­ளி­யில் 16வது ஆண்­டா­கக் கொண்­டா­டப்­பட்ட பொங்­கல் விழா­வில் ஆடல், பாடல் நிகழ்ச்­சி­க­ளோடு பற்­பல அம்­சங்­களும் மிகுந்­தி­ருந்­தன.

மக்­க­ளிசை பாடல்­க­ளைப் பாடும் செந்தில் -ராஜ­ல­ட்சுமி கலை­ஞர்­க­ளின் கச்­சே­ரி­யும் மணி­மா­றன் இசைக்­குழு உள்­ளிட்ட பல்­வேறு உள்­ளூர்க் கலை­ஞர்­க­ளின் ஆட்­டம் பாட்­ட­மும் கண்­க­ளுக்­கும் காதுகளுக்­கும் விருந்து படைத்­தன.

உரி அடித்­தல், பல்­லாங்­குழி, பர­ம­ப­தம் உள்­ளிட்ட பாரம்­ப­ரிய விளை­யாட்­டு­க­ளு­டன் ரங்­கோலிக் கோலம், முளைப்­பாரி ஆகி­ய­ன­வும் காட்சிப்படுத்தப்பட்டன. சிறார்­களை மகிழ்­விக்க பானை, காகி­தங்­களில் வண்­ணம் தீட்­டும் அரங்­கு­களும் இருந்­தன. சிறப்பு அங்­க­மாக இவ்வாண்டும் ரத்­த­தான முகாம் நடை­பெற்­றது.

ஆயி­ரத்­திற்­கும் மேற்­பட்­டோர் கலந்­து­ கொண்ட இவ்­விழா காலை 10.30 மணி முதல் பிற்­ப­கல் 2 மணி வரை நடந்­தே­றி­யது. சிறப்பு விருந்தினராக ஹாலந்து -புக்­கிட் தீமா குழுத்தொகுதி உறுப்­பி­ன­ரும் வெளியு­றவு அமைச்­ச­ரு­மான விவி­யன் பால­கி­ருஷ்­ணன் கலந்­து­கொண்­டார். இவ­ரு­டன் குழுத்­தொ­குதியின் மற்றோர் உறுப்பினர் எட்­வர்ட் சியா, சிண்டா தலைமை நிர்­வாக அதி­காரி அன்­ப­ரசு ராஜேந்­தி­ரன் உட்­பட பல பிர­மு­கர்­கள் பங்­கேற்­ற­னர்.

இந்­தி­யரல்­லாத நூற்­றுக்­கும் மேற்­பட்­டோர் தமி­ழர் பாரம்­ப­ரிய உடை­க­ளான வேட்டி, சேலை­யில் வந்திருந்தனர். அத்துடன் இந்தியரல்லாத நூற்­றுக்­கும் மேற்­பட்டவர்கள் ஒன்றாகக் கூடி தமி­ழ­ரின் பாரம்­ப­ரிய கும்மி ஆட்­டத்தை ஆடி­னர். இவை இரண்­டும் சிங்­கப்­பூர் சாத­னைப் புத்­த­கத்­தில் நேற்று இடம்­பெற்­றன.

விழா ஏற்பாட்டுக்குழுத் தலைவர் திரு மூர்த்தி பெருமாள் தமிழ்முரசிடம் கூறுகை யில், "இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஏராளமான மக்கள் ஒன்றுகூடி பொங்கல் திருநாளைக் கொண்டாடியது மகிழ்ச்சி. இந்தியரல்லாத பலரும் ஒன்றிணைந்து இத்திருநாளைக் கொண்டாடுவது நமது இன நல்லிணக்கத்தைப் பறைசாற்றியது," என்றார்.