பொருளியல் வளர்ச்சியில் ஏற்படும் இடையூறுகள், நிலை
யற்றதன்மை ஆகியவற்றால் ஓய்வுக்காலத்துக்காக சேமிப்பது சவால்மிக்கதாகி வருகிறது.
இருப்பினும், சிங்கப்பூரர்கள் வேலை செய்து தங்கள் மத்திய சேமநிதி கணக்கில் அடிக்கடி பணம் நிரப்பினால் போதும், அவர்களது அடிப்படை ஓய்வுக்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்துவிடலாம் என்று துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் நேற்று தெரிவித்தார்.
வேலை செய்ய முடியாதவர்களுக்கும் மத்திய சேமநிதி கணக்கில் பணம் நிரப்பி சேமிக்க முடியாதவர்களுக்கும் உதவ அரசாங்கம் வழிவகை
களை ஆராய்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
கொள்கை ஆய்வுக் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற சிங்கப்பூர் பெர்ஸ்பெக்டிவ் மாநாட்டின் கடைசி நாளான நேற்று திரு வோங் உரையாற்றினார். இந்த மாநாடு, வேலை என்ற கருப்பொருளுடன் மரினா சேண்ட்ஸ் கண்காட்சி, மாநாட்டு மையத்தில் நடைபெற்றது.
சிங்கப்பூர் ஊழியரணியும் தொழிலாளர் சந்தையும் எதிர்கொள்ளும் சவால்களை திரு வோங் முன்வைத்தார்.
தொழில்துறைகளில் மாற்றங்களைக் கொண்டு வரும் தொழில்நுட்ப மேம்பாடுகளை அவர் உதாரணம் காட்டினார்.
இத்தகைய மாற்றங்கள் அனைவருக்கும் சமமான பலனைத் தராது என்றார் அவர். தகுந்த, தேவையான திறன்
களைக் கொண்டிருப்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை நன்கு பயன்படுத்திக்கொள்வர் என்று திரு வோங் தெரிவித்தார்.
சிலரால் மாற்றங்களைச் சமாளிக்க முடியாது என்றும் இதன் விளைவாக அவர்கள் பதற்றம் அடையக்கூடும் என்றும் அவர் கூறினார்.
குறிப்பாக, மூத்த, பணி
யிடைக்கால ஊழியர்கள் ஆகியோருக்கு இந்நிலை ஏற்படக்கூடும் என்றார் அவர்.
மத்திய சேமநிதி கடந்த பல ஆண்டுகளாக வளர்ச்சி கண்டு மாறியிருப்பதை திரு வோங் சுட்டினார்.
சம்பாதிக்கவும் ஒய்வுக்
காலத்துக்காகக் கூடுதல் பணம் சேமிக்கவும் சிங்கப்பூரர்களுக்கு உதவும் வகையில் அண்மை ஆண்டுகளில் அரசாங்கம் கூடுதலாகப் பங்களித்து வருவதாக அவர் கூறினார்.
உதாரணத்துக்கு, மத்திய சேமநிதிக் கணக்கில் குறைவான தொகை வைத்திருப்பவர்
களுக்குக் கூடுதல் வட்டி தரப்
படுகிறது. குறைந்த வருமான ஊழியர்களுக்கு வேலை நலத் திட்டம், படிப்படியாக உயர்த்தப்படும் சம்பளத் திட்டம் மூலம் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.
இருப்பினும், சிலர் இன்னும் சிரமப்படுவதாகத் தெரிவிக்கப்
படுகிறது. 50 வயதுக்கும் 60 வயதுக்கும் இடைப்பட்டவர்கள், 60 வயதுக்குக்கும் 65 வயதுக்கும் இடைப்பட்டவர்களில் சிலர் ஏதோ ஒரு காரணத்தினால் இயல்பான வேலை முறையைக் கடைப்பிடிக்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.
இதனால் அவர்களால் தங்கள் மத்திய சேமநிதி கணக்கில் பணம் சேமித்து பலனடைய முடிவதில்லை.
இத்தகையோரின் அடிப்படை ஓய்வுக்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்ய எவ்வாறு உதவலாம் என்பது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக திரு வோங் தெரிவித்தார்.
விநியோகத் தள ஊழியர்கள், உடற்குறையுள்ளோர், உடற்குறையுள்ளோரைப் பராமரிப்
பவர்கள் ஆகியோரின் நலனில் அரசாங்கம் தொடர்ந்து அக்கறை செலுத்தும் என்று உறுதி அளிக்கப்பட்டது.
ஊழியரணியில் புதிதாகச் சேருபவர்களும் இளம் ஊழியர்களும் ஓய்வுபெற இன்னும் பல ஆண்டுகள் இருப்பதால் தொடர்ந்து வேலை செய்வதையும் திறன்களை மேம்படுத்திக்கொள்வதையும் அவர்கள் இலக்காகக் கொண்டிருக்க வேண்டும் என்று திரு வோங் வலியுறுத்தினார்.
திறன்கள், மனிதவளம் ஆகியவற்றில் முதலீடு செய்வது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும் தெரிவிக்கப்
பட்டுள்ளது.
சிங்கப்பூரர்கள் வாழ்வில் செழித்தோங்க வேலை முக்கிய இடம் வகிப்பது உறுதி செய்யப்படும். திறன்கள், பயிற்சி ஆகியவற்றை எவ்வாறு வலுப்
படுத்துவது என்பது குறித்து மிகுந்த கவனத்துடன்
பரிசீலிக்க வேண்டும் என்று திரு வோங் தெரிவித்தார்.

