சிங்கப்பூர் வரும் பயணிகள் எண்ணிக்கை இரட்டிப்பாகும்

சிங்கப்பூர் வரும் பயணிகள் எண்ணிக்கை இரட்டிப்பாகும்

2 mins read

சிங்­கப்­பூ­ரின் பய­ணத்­துறை அடுத்த ஆண்­டுக்­குள் முழு­மை­யாக மீட்­சி­ய­டை­யும் என்­று எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தால், அதற்கு முன்­னர் இவ்­வாண்டு இங்கு வரக்­

கூ­டிய வெளி­நாட்­டுப் பய­ணி­

க­ளின் எண்­ணிக்கை 12 மில்­லி­யன் முதல் 14 மில்­லி­யன் என இரட்­டிப்­பா­கக்­கூ­டும்.

கடந்த ஆண்டு 6.3 மில்­லி­யன் பயணிகள் சிங்கப்பூர் வந்தனர்.

இவ்வாண்டு சுற்­றுப்­ப­ய­ணி­கள் இங்கு செலவு செய்­யும் தொகை $18 பில்­லி­யன் முதல் $21 பில்­லி­யன் வரை அதி­க­ரிக்­க­லாம் என­வும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

சிங்­கப்­பூர் பய­ணத்­து­றைக் கழ­கம் நேற்று இந்த முன்­னு­ரைப்பை வெளி­யிட்­டுள்­ளது.

கடந்த ஆண்டு சிங்­கப்­பூ­ருக்கு வந்த வெளி­நாட்­டுப் பய­ணி­க­ளின் எண்­ணிக்கை, எதிர்­பார்க்­கப்­பட்­ட­தை­விட அதி­க­மாக இருந்­த­தால் இவ்­வாண்­டுக்­கான முன்­னு­ரைப்பு கூட்­டப்­பட்­டுள்­ளது.

2022ஆம் ஆண்டு வருகை புரிந்த 6.3 மில்­லி­யன் வெளி­நாட்­டுப் பய­ணி­கள் இங்கு செலவு செய்த தொகை ஏறக்­கு­றைய $14 பில்­லி­யன்.

சுற்­றுப்­ப­ய­ணி­கள் இங்கு செலவு செய்த தொகை­யைப் பொறுத்­த­மட்­டில், இந்­தோ­னீ­சி­யா­வி­லி­ருந்து வந்­தோர் முத­லி­டம் பிடித்­த­னர்.

கடந்த ஆண்டு அவர்­கள் சிங்கப்பூரில் செலவு செய்த தொகை $1.1 பில்­லி­யன்.

இந்­தி­யா­வி­லி­ருந்து இங்கு வந்­த­வர்­கள் இரண்­டா­மி­டத்­தை­யும் ஆஸ்­தி­ரே­லி­யா­வி­லி­ருந்து இங்கு வந்­த­வர்­கள் மூன்­றா­மி­டத்­தை­யும் பிடித்­த­னர். அவர்­கள் செலவு செய்த தொகை முறையே $704 மில்­லி­யன், $633 மில்­லி­யன்.

எனி­னும், கொவிட்-19க்கு முன்­பி­ருந்த நில­வ­ரத்­து­டன் ஒப்­பி­டு­கை­யில், சிங்கப்பூருக்கு வந்த சுற்­றுப்­ப­ய­ணி­க­ளின் எண்­ணிக்­கை­யும் அவர்­கள் செலவு செய்த தொகை­யும் இன்­னும் குறை­வா­கவே உள்­ளன.

2019ல் சுற்­றுப்­ப­ய­ணி­க­ளின் வருகை சாதனை அள­வாக 19.1 மில்­லி­யனை எட்­டி­யி­ருந்­தது. அந்த ஆண்டு அவர்­கள் இங்கு செலவு செய்த தொகை $27.7 பில்­லி­யன்.

கவ­லைக்­கு­ரிய புதிய கொவிட்-19 திரிபு தலை­தூக்­கா­மல், அனைத்­து­லக விமா­னச் சேவை­க­ளின் எண்­ணிக்கை தொடர்ந்து அதி­க­ரிக்­கப்­ப­டு­வ­தன் அடிப்­ப­டை­யில் சுற்­றுப்­ப­ய­ணி­க­ளின் வருகை குறித்த முன்­னு­ரைப்பு வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

வர்த்­த­கம், ஓய்­வு போன்­ற­வற் றுக்கான பயணத்தை அதி­க­ரிக்­கும் வகை­யில் பய­ணத்­து­றைக்கு அர­சாங்­கம் $500 மில்­லி­யன் ஒதுக்கி உள்­ளது. இவ்­வாண்டு அந்­தத் துறை மீட்­சி­ய­டை­வ­தன் மூலம் இந்­தத் தொகை­யில் ஒரு பகுதி, அதா­வது $110 மில்­லி­யன் துணை­பு­ரி­யும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இருப்­பி­னும், பய­ணத்­துறை மீட்­சி­யின் வேகத்தை சில கார­ணி­கள் குறைக்­கக்­கூ­டும் என்று சிங்கப்பூர் பய­ணத்­து­றைக் கழ­கத் தலைமை நிர்­வாகி கெய்த் டான் கரு­துகி­றார்.

உல­கப் பொரு­ளி­யல் மந்­தம், சில நாடு­க­ளின் புதிய எல்­லைக் கட்­டுப்­பா­டு­கள் போன்­றவை அவை என்று கூறிய திரு டான், இந்­தியா அண்­மை­யில் சிங்­கப்­பூர் பய­ணி­க­ளுக்கு விதித்த கட்­டாய கொவிட்-19 பரி­சோ­த­னைக் கட்­டு­ப்பா­டும் அவற்­றுள் ஒன்று என்­றார்.

சீனா, ஹாங்­காங், சிங்­கப்­பூர், தென்­கொ­ரியா, தாய்லாந்து, ஜப்­பான் ஆகிய நாடு­க­ளின் பய­ணி­ க­ளுக்கு ஜன­வரி 1 முதல் இந்­தக் கட்­டுப்­பாட்டை இந்­திய அர­ சாங்­கம் நடை­மு­றைப்­ப­டுத்தி வரு­கிறது.

இவ்வாண்டு 14 மி. பயணிகள் வரக்கூடும்; 2024ல் முழுமையான மீட்சி எதிர்பார்ப்பு