மலேசியாவின் கடன்சுமை 1.5 டிரில்லியன் ரிங்கிட்டாக அதிகரிப்பு

மலேசியாவின் கடன்சுமை 1.5 டிரில்லியன் ரிங்கிட்டாக அதிகரிப்பு

2 mins read

தாமதிக்காமல் கவனிக்கப்பட வேண்டிய பிரச்சினை என்கிறார் பிரதமர் அன்வார்

மலே­சியா 1.5 டிரில்­லி­யன் ரிங்­கிட் கட­னில் உள்­ள­தா­க­வும் இது உட­ன­டி­யா­கக் கவ­னிக்­கப்­பட வேண்­டிய பிரச்­சினை என்­றும் பிர­த­மர் அன்­வார் இப்­ரா­கிம் தெரி­வித்து உள்­ளார்.

மலே­சிய வரவு-செல­வுத் திட்­டம் தொடர்­பான கலந்­து­ரை­யா­டல் கூட்­டத்­தில் பங்­கேற்ற திரு அன்­வார், நாட்­டின் கடன் 1.2 டிரில்­லி­யன் ரிங்­கிட் என்­றி­ருக்­கும் நிலை­யில் திருப்­பித் தரப்­பட வேண்­டிய கடன்­பொ­றுப்­பு­க­ளை­யும் சேர்த்து 1.5 டிரில்­லி­யன் ரிங்­கிட்­டாக அதி­க­ரித்து உள்­ளது என்­றார்.

முன்­னைய அர­சாங்­கம் கடந்த ஆண்டு அக்­டோ­ப­ரில் தாக்­கல் செய்த வர­வு­செ­ல­வுத் திட்­டம் குறித்த கலந்­து­ரை­யா­டல் கூட்­டம் நேற்று நடை­பெற்­றது.

அந்­தத் திட்ட அறிக்கை நாடா­ளு­மன்­றத்­தில் சமர்ப்­பிக்­கப்­பட்டு விவா­திக்­கப்­படும் முன்­னர் பொதுத் தேர்­த­லுக்கு வழி­விட்டு மன்­றம் கலைக்­கப்­பட்­டது. புதிய அர­சாங்­கத்­தின் முழு வர­வு­செ­ல­வுத் திட்ட அறிக்கை பிப்­ர­வரி 24ஆம் தேதி தாக்­கல் செய்­யப்­பட உள்­ளது.

கடன் மதிப்பு மொத்த உள்­நாட்டு உற்­பத்­தி­யில் குறிப்பிட்ட அளவைத் தாண்­டி­விட்­ட­தால் இது பொரு­ளி­ய­லில் நேரடி பாதிப்பை ஏற்­ப­டுத்­தும் சாத்­தி­யம் இருப்­ப­தாக நிதி அமைச்­ச­ரு­மான திரு அன்­வார் குறிப்­பிட்டுள்­ளார்.

பெரும் கடன்­சுமை கார­ண­மாக மலே­சி­யா­வின் வர­வு­செ­ல­வுக்­கான பற்­றாக்­குறை முன்­னர் கணிக்­கப்­பட்ட 5.8 விழுக்­காட்­டைக் காட்­டி­லும் அதி­க­மாக இருக்­கும் என்­றும் அவர் தெரி­வித்­தார்.

மலே­சி­யா­வின் கடன்­ 1 டிரில்­லி­யன் ரிங்­கிட்­டைத் தொட்­டு­விட்­ட­தாக 2018ஆம் ஆண்டு பிர­த­மர் பதவி ஏற்­ற­போது மகா­தீர் முகம்­மது தெரி­வித்து இருந்­தார். தமக்கு முன்­னர் ஆட்­சிப் பொறுப்­பில் இருந்த நஜிப்­பின் நிர்­வா­கம் செய்த தவ­று­க­ளால் கடன் அதி­க­ரித்­த­தா­க­வும் அவர் குற்­றம் சாட்­டி­யி­ருந்­தார்.

கடன் படிப்­ப­டி­யாக 1.045 டிரில்­லி­யன் ரிங்­கிட்­டாக வளர்ந்­து­விட்­டது என்று கடந்த ஆண்டு ஜூன் இறு­தி­யில் அப்­போது நிதி அமைச்­ச­ராக இருந்த ஸஃப்ருல் அஸிஸ் கூறி­னார். அவர் குறிப்­பிட்ட கடன் விகி­தம் மொத்த உள்­நாட்டு உற்­பத்­தி­யில் 63.8 விழுக்­கா­டாக அப்­போது இருந்­தது.

இந்­நி­லை­யில், நாட்­டின் பொரு­ளி­யல் பல­வீ­ன­மா­கவே தொட­ரு­வ­தாக நேற்­றைய கலந்­து­ரை­யா­டல் கூட்­டத்­திற்­குப் பின்­னர் திரு அன்­வார் தெரி­வித்­தார்.

அனைத்­து­லக விவ­கா­ரங்­களும் இந்­தப் பல­வீ­னத்­திற்­குக் கார­ணம் என்ற அவர், உக்­ரேன்-ரஷ்ய போரை­யும் கொவிட்-19க்குப் பிந்­திய நில­வ­ரத்­தை­யும் அதற்கு உதா­ர­ணங்­க­ளாகக் கூறி­ய­தாக பெர்­னாமா தெரி­வித்­துள்­ளது.