$72.3 பில்லியன் கொவிட்-19 செலவினத்தை அரசாங்கம் மறுஆய்வு செய்ய வலியுறுத்து

$72.3 பில்லியன் கொவிட்-19 செலவினத்தை அரசாங்கம் மறுஆய்வு செய்ய வலியுறுத்து

2 mins read
c247830c-aff3-4e56-a070-a64de4e96a8d
பொது நிதி­யில் இழப்பு நேர்ந்­தி­ருந்­தால் அது குறித்து புகார் அளிக்­கப்­பட்டு அது மீட்­கப்­பட்­டி­ருக்க வேண்­டும் என்று நாடாளு­மன்­றக் கண்­கா­ணிப்­புக் குழு ஒன்று அறிக்கை சமர்ப்­பித்­துள்­ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொவிட்-19க்கு எதி­ரான அர­சாங்­கத்­தின் செயல்­பா­டு­கள், முன்­னெப்­போ­தும் இல்­லாத அள­வுக்கு அதி­க­மா­க­வும் சிக்­கல் நிறைந்­த­தா­க­வும் இருந்­த­தைக் கருதி, பொது நிதி முறை­யா­கச் செல­வி­டப்­பட்­டதை உறு­திப்­ப­டுத்த மறு­ஆய்வு மேற்­கொள்­ளப்­பட வேண்­டும். அத்­து­டன் பொது நிதி­யில் இழப்பு நேர்ந்­தி­ருந்­தால் அது குறித்து புகார் அளிக்­கப்­பட்டு அது மீட்­கப்­பட்­டி­ருக்க வேண்­டும் என்று நாடாளு­மன்­றக் கண்­கா­ணிப்­புக் குழு ஒன்று அறிக்கை சமர்ப்­பித்­துள்­ளது.

அறிக்­கை­யைச் சமர்ப்­பித்த பொதுக் கணக்­குக் குழு (பிஏசி), பொது நிதிச் செல­வி­னத்தை ஆராய்­வ­தற்­கென எட்டு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளைக் கொண்டு அமைக்­கப்­பட்­ட­தா­கும்.

கொவிட்-19 தொடர்­பில் 2020, 2021 நிதி ஆண்­டு­களில் செல­வி­டப்­பட்ட $72.3 பில்­லி­யன், அர­சாங்­கத் தலை­மைக் கணக்­காய்­வா­ளர் அலு­வ­ல­கம் மேற்­கொண்ட தணிக்­கை­களில் இடம்­பெ­ற­வில்லை என்று அறிக்­கை­யில் குறிப்­பிடப்­பட்­டுள்­ளது. இந்­நி­லை­யில், அர­சாங்­கத்­தின் கொவிட்-19 செயல்­பா­டு­கள் தொடர்­பான பரி­வர்த்­த­னை­கள் நேர்­மை­யான முறை­யில் நடந்­தன என்­ப­தை­யும் தவ­றான பணப் பட்­டு­வாடா இடம்­பெ­ற­வில்லை என்­ப­தை­யும் உறு­தி­செய்­தல் அவ­சி­யம் என்று குழு­வின் தலை­வர் ஃபூ மீ ஹார் கூறி­னார்.

சுகா­தார மேம்­பாட்டு வாரி­யம், சிங்­கப்­பூர் நில ஆணை­யம், மனி­த­வள அமைச்சு ஆகி­ய­வற்­றின் நிர்­வா­கத்­தில் குறிப்­பிட்ட சில கொவிட்-19 கொள்­மு­தல், செல­வின விவ­கா­ரங்­கள் தொடர்­பில் அர­சாங்­கத் தலை­மைக் கணக்­காய்­வா­ளர் அலு­வ­ல­கம் கடந்த ஆண்டு தணிக்கை மேற்­கொண்­டதை அடுத்து குழு­வின் பரிந்­துரை இடம்­பெற்­றுள்­ளது.

மூன்று தரப்­பு­களும் தங்­க­ளின் கொள்­மு­தல், ஒப்­பந்த நிர்­வா­கம் தொடர்­பில் செயல்­மு­றை­க­ளை­யும் கட்­டுப்­பா­டு­க­ளை­யும் நடை­மு­றைப்­ப­டுத்தி இருந்­தா­லும் ஒப்­பந்­த­தா­ரர்­க­ளின் மதிப்­பீட்­டுப் பரிந்­து­ரைப்­பில் சில குறை­பா­டு­கள் காணப்­பட்­ட­தா­க­வும் சில ஆவ­ணங்­கள் அங்­கீகா­ர­மற்­ற­வை­யாக இருக்­க­லாம் என்­பதற்­கான அறி­கு­றி­கள் தெரிந்­த­தா­க­வும் கூறப்­பட்­டது.

கடந்­தாண்டு முன்­பா­தி­யி­லி­ருந்து கொவிட்-19 தொடர்­பான கொள்­மு­தல், செல­வி­னம் பற்­றிய கட்­டுப்­பா­டு­க­ளை­யும் சோத­னை­க­ளை­யும் நிதி அமைச்சு மறு­ஆய்வு செய்து வரு­கிறது. அத்­து­டன் அர­சாங்க அமைப்­பு­களும் பரி­வர்த்­த­னை­கள் முறை­யாக செய்­யப்­பட்­டதை உறுதிப்­படுத்த தணிக்கை மேற்­கொண்டு வரு­வ­தாக பிஏசி தெரி­வித்­தது.

இந்­நி­லை­யில், ஒழுங்­கு­மு­றை­யான ஆவ­ணங்­கள் தக்­க­வைக்­கப்­ப­டு­வது, முக்­கிய முடி­வு­களும் பரி­வர்த்­த­னை­களும் ஆவ­ணங்­க­ளு­டன் பதி­வா­வது போன்­ற­வற்­றின் தொடர்­பில் நிதி அமைச்சு பரிந்­துரை செய்­துள்­ள­தாக குழு தெரி­வித்­தது.

பொதுச் சேவை வழங்­கப்­ப­டு­வது தொடர்­பான தர­நி­லை­கள், கொள்­ளை­நோய்க்கு முந்­திய நிலைக்­குக்­கீழ் போகாத­வாறு அர­சாங்­கம் பார்த்­துக்­கொள்ள வேண்­டும் என்று பிஏசி அதன் அறிக்­கை­யில் அறி­வு­றுத்­தி­யுள்­ளது.

புது இயல்­பு­நி­லைக்கு சிங்­கப்­பூர் மாறி­வ­ரும் நிலை­யில், மின்­னி­லக்­கத் திறன்­களில் சற்று பின்­தங்­கி­யோ­ரும் இச்­சேவை­க­ளைப் பெறும் வசதி இருப்­பது முக்­கி­யம் என்று கூறப்­பட்­டது.

இதற்­கி­டையே, மானி­யங்­களை நிர்­வகிப்­ப­தில் ஸ்கில்ஸ்­ஃபி­யூச்­சர் சிங்­கப்­பூர் அமைப்­பி­டம் குறை­பா­டு­கள் கண்­ட­றி­யப்­பட்­ட­தாக பிஏசி தெரி­வித்­துள்­ளது.