ஜெசிந்தா ஆர்டர்ன் பதவி விலகுகிறார்

ஜெசிந்தா ஆர்டர்ன் பதவி விலகுகிறார்

2 mins read

நியூ­சி­லாந்து பிர­த­மர் ஜெசிந்தா ஆர்­டர்ன் பதவி வில­கு­வ­தாக கண்­ணீ­ரு­டன் அறி­வித்­துள்­ளார்.

நாட்டை வழி­ந­டத்த இனி­யும் செய்ய வேண்­டிய காரி­யம் எது­வும் இல்லை என்­கி­றார் அவர்.

"வரும் பிப்­ர­வரி மாதத்­திற்­குள் பதவி வில­கு­வேன். பொதுத்­தேர்­த­லில் போட்­டி­யிட மாட்­டேன்," என்­றும் அவர் சொன்­னார்.

திரு­மதி ஆர்­டர்ன், 42, கண்­ணீரை அடக்­கிக் கொண்டு ஐந்­தரை ஆண்டு பிர­த­மர் பொறுப்­பில் பெரும் சிர­மங்­க­ளைச் சந்­தித்­தா­க­வும் தானும் ஒரு மனி­தன்தான் என்­றும் பத­வி­யி­லி­ருந்து தற்­போது விலக விரும்­பு­வ­தா­க­வும் கூறி­னார்.

"இந்­தக் கோடை காலத்­தில் மற்­றொரு தவணைக் காலத் திற்கு தயா­ரா­கும் வழி­க­ளைக் கண்டுபிடிக்க முடி­யும் என்று நம்­பி­னேன். ஆனால் என்­னால் முடி­ய­வில்லை," என்று தொழிற் கட்சி கூட்­டம் நடை­பெற்ற நேப்­பி­ய­ரில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் அவர் தெரி­வித்­தார்.

"என்­னு­டைய முடி­விற்­குப் பிறகு உண்­மை­யான கார­ணம் என்ன என்­பது பற்றி நிறைய விவா­தங்­கள் இருக்­கும் என்­பது எனக்­குத் தெரி­யும். சில பெரிய சவால்­க­ளு­டன் ஆறு ஆண்டு களின் இறு­தி­யில் ஒரு மனித ராகவே இருக்­கி­றேன். அர­சி­யல்­வா­தி­களும் மனி­தர்­களே, எங்­க­ளால் முடிந்த அனைத்­தை­யும் கொடுக்­கி­றோம். என்­னைப் பொறுத்­த­வரை நேரம் வந்­து­விட்­டது," என்­றார்.

பிர­த­மர் பொறுப்பு தன்னை பாதித்­த­தா­க­வும் திரு­மதி ஆர்­டர்ன் தெரி­வித்­துள்­ளார்.

இதற்­கி­டையே நியூ­சி­லாந்­தின் ஆளும் தொழி­ற்கட்சி புதிய தலை­வரை தேர்ந்­தெ­டுக் கும் வேலை­யில் இறங்­கி­யுள்­ளது.

ஞாயிற்­றுக்­கி­ழமை நடை பெறும் கட்­சிக்­கூட்­டத்­தில் புதிய தலை­வர் தேர்ந்­தெ­டுக்­கப்­ப­டு­வார் எனத் தெரி­கிறது.

அக்­கட்­சி­யின் புதிய தலை­வர் அடுத்த பொதுத் தேர்­தல் வரை பிர­த­ம­ராக நீடிப்­பார்.

திரு­மதி ஆர்­டர்ன் பிப்­ர­வரி 7ஆம் தேதிக்­குள் பதவி வில­கு­வார் என நம்­பப்­ப­டு­கிறது. வரும் அக்­டோ­பர் 14ஆம் தேதி நடை­பெ­றும் பொதுத்தேர்­த­லில் தனது கட்சி வெற்றி பெறும் என்று அவர் நம்­பிக்கை தெரி­வித்து உள்­ளார்.

இந்நிலை­யில் நியூ­சி­லாந்­தின் துணைப் பிர­த­ம­ரும் நிதி அமைச்­ச­ரு­மான கிரான்ட் ராபர்ட்­சன், தலை­வர் பத­விக்­குப் போட்­டி­யி­டப் போவ­தில்லை என்று அறி­வித்­துள்­ளார். இதனால் யார் அடுத்த தலைவர் என்ற எதிர் பார்ப்பு எழுந்துள்ளது.

'சிங்கப்பூரின் உற்ற நண்பர்'

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்­டர்ன் சிங்கப்பூரின் உற்ற நண்பர் என்று பிரதமர் லீ சியன் கூறியுள்ளார். அவரது பதவி விலகலைத் தொடர்ந்து பிரதமர் லீயின் கருத்து வெளியாகியுள்ளது. திருமதி ஜெசிந்தா ஆர்டர்னின் ஆதரவுக்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார். "பல அம்சங்களில் அவர் ஊக்கமூட்டும் நபராக இருந்தார். அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் வாழ்த்துகளைத் தெரிவிக் கிறேன்," என்று தனது ஃபேஸ்புக் பதிவில் பிரதமர் லீ குறிப்பிட்டுள்ளார்.

2019ல் முதல் முறையாக அவர் சிங்கப்பூருக்கு வருகையளித்தபோது இரு தரப்பு உறவு மேலும் மேம்பட்டு சிறப்பான நிலையை எட்டியது என்று கூறிய பிரதமர் லீ, நியூசி லாந்தின் கிறைஸ்ட்சர்ச் தாக்குதல், கிருமிப் பரவல் உள்ளிட்ட சவால்களை திறம்படச் சமாளித்து நாட்டை வழி நடத்துவதில் அர்ப்பணிப்பு உணர்வுடன் திருமதி ஜெசிந்தா ஆர்டர்ன் செயல்பட்டார் என்றார்.