விழாக்காலத்தில் விழிப்புடன் இருக்க வேண்டுகோள்

விழாக்காலத்தில் விழிப்புடன் இருக்க வேண்டுகோள்

2 mins read
5490045c-3e73-4d95-a6d1-782a39549220
-

சீனப் புத்­தாண்­டுக் காலத்­தில் கொவிட்-19க்கு எதி­ராக விழிப்­பு­டன் இருக்­கு­மாறு பிர­த­மர் லீ சியன் லூங் தமது சீனப் புத்தாண்டுச் செய்­தி­யில் தெரி­வித்­துள்­ளார்.

சிங்­கப்­பூ­ரர்­கள் குடும்­பத்­துடன் செல­வழிக்­கும் நேரத்­தைப் போற்றவும் குடும்பத்துக்கு அதிக முன்­னு­ரிமை கொடுக்கவும் அவர் அழைப்புவிடுத்தார்.

சீனப் புத்­தாண்டு மீண்­டும் முழு­வீச்­சில் கொண்­டா­டப்­படும் அதே நேரத்­தில், மக்­கள் ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் உதவுவதுடன் சமூ­கப் பொறுப்­பு­டனும் செயல்­பட வேண்டும் என்று பிர­த­மர் லீ கூறி­னார்.

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 நிலைமை சீராக உள்­ளது. ஆனால், புதிய திரி­பு­கள் தோன்றி எதிர்­பா­ராத சவால்­க­ளைக் கொண்டு ­வ­ர­லாம் என்றார் அவர்.

தேவைப்­பட்­டால், ​​குறிப்­பாக வய­தான உற­வி­னர்­களைக் காணச் செல்­வ­தற்கு முன் கிருமித்தொற்றுப் பரி­சோ­தனை செய்­து­கொள்ளுமாறும் உடல்­நலம் குன்­றி­யி­ருந்­தால் வீட்­டி­லேயே இருக்கு­மா­றும் சிங்­கப்­பூ­ரர்­களை திரு லீ கேட்­டுக்­கொண்­டார்.

"மிக முக்­கி­ய­மாக, அண்­மைய கால இரு­வகை திறன் கொண்ட தடுப்­பூ­சி­கள் உள்பட, தேவை­யான தடுப்­பூசி­க­ளைப் போட்­டுக்­கொள்­ளுங்­கள். கொவிட்-19க்கு எதி­ராக தடுப்­பூ­சியே இன்­னும் சிறந்த பாது­காப்­பாக உள்­ளது," என்றார் அவர்.

"சிங்­கப்­பூர் தொடர்ந்து செயல்­பட, கொவிட்-19க்கு எதி­ராக முன்­னி­லை­யில் போரா­டு­ப­வர்­க­ளின் கடின உழைப்­பை­யும் தியா­கங்­க­ளை­யும் நாம் மறந்­து­வி­டக்­கூடாது. சிங்­கப்­பூர் இது­வரை­யில் கொவிட்-19 நிலைமை­யைக் நிலையாக வைத்­துள்­ளது. அதே­நே­ரத்­தில் வெளிப்­புற தொற்­று­நோய் பர­வல் போக்­கு­களை எச்­ச­ரிக்­கை­யு­டன் கவனித்து வரு­கிறது," என்று அவர் மேலும் சொன்­னார்.

பகி­ரப்­பட்ட கொவிட்-19 அனு­ப­வங்­கள், மக்­கள் தங்­கள் குடும்­பங்­கள், அன்­புக்­கு­ரி­ய­வர்­க­ளின் அரு­மையை உணரச் செய்­துள்­ளது என்­றார் பிர­த­மர்.

"சிங்­கப்­பூ­ரின் சமூக கட்­ட­மைப்­பின் அடித்­த­ள­மா­கக் குடும்­பங்­கள் உள்­ளன. வலு­வான குடும்­பங்­களே, நிலை­யான, மீள்­தன்­மை­மிக்க சமூ­கத்­திற்கு மையம்," என்ற அவர், சிங்­கப்­பூ­ரில் 2022 குடும்­பங்­க­ளைக் கொண்­டா­டும் ஆண்­டாக அர்ப்­பணிக்­கப்­பட்­ட­தை சுட்டினார்.

அவர், பெற்­றோ­ருக்­கான ஆத­ரவை அதி­க­ரிக்­கும் மாற்றங்­கள் வரும் மாதங்­களில் அறிவிக்­கப்­பட உள்­ளதை அவர் கோடி­காட்­டி­னார்.

சிங்­கப்­பூ­ரின் மொத்த கரு­வுறு­தல் விகி­தம் 2022ல் குறைந்­தா­லும், பல இளை­யர்­கள் திரு­ம­ணத்­தை­யும் குழந்தை பெற்­றுக்­கொள்­வ­தை­யும் முக்­கி­ய­மான வாழ்க்கை இலக்­கு­க­ளா­கப் பார்க்­கி­றார்­கள் என்­ப­தில் தாம் மகிழ்ச்­சி­ய­டை­வ­தாக திரு லீ கூறி­னார்.

குழந்தை வளர்ப்­ப­தில் ஏற்படும் அழுத்­தங்­களை சமாளிப்பதற்­கும், ஒவ்­வொரு குழந்­தைக்­கும் நல்ல தொடக்­கத்தை வழங்­கு­வ­தற்­கும் பெற்­றோ­ருக்கு அர­சாங்­கம் தொடர்ந்து உத­வும் என்­றார் அவர்.

எடுத்­துக்­காட்­டாக, இந்த ஆண்டு ஜன­வரி முதல் அரசாங்க ஆத­ரவு பெற்ற பாலர் பள்­ளி­களில் கட்­ட­ணம் குறைக்­கப்­பட்­டுள்­ளது.

"வாழ்க்­கை­யின் அனைத்­துக் கட்­டங்­க­ளி­லும் குடும்­பங்­க­ளுக்கு ஆத­ர­வ­ளிக்க ஒட்­டு­மொத்த சமூ­கத்­தை­யும் ஊக்­கு­விக்­கும் முயற்­சி­கள், நிகழ்ச்­சி­க­ளு­டன் 'குடும்­பங்­களுக்­கான சிங்­கப்­பூர் 2025'க்கான திட்­டங்­களை அர­சாங்­கம் அறி­மு­கப்­படுத்­தி­யுள்­ளது.

"ஒவ்­வொரு குடும்­ப­மும் மதிக்­கப்­பட்டு, ஆத­ரிக்­கப்­படும் ஒரு சமூ­கத்தை உரு­வாக்க நாம் அனை­வ­ரும் பங்­க­ளிக்­க­லாம்," என்று­பிரதமர் லீ கூறினார்.

நீக்­குப்­போக்­கான வேலை ஏற்­பா­டு­களைப் பின்­பற்­ற­வும், ஊக்­க­ம­ளிக்­கும் வேலை­யிட கலா­சா­ரத்தை வளர்க்­க­வும் நிறு­வ­னங்­க­ளுக்கு பிரதமர் லீ அழைப்பு விடுத்­தார்.

"குடும்­பங்­க­ளைக் கொண்­டா­ட­வும் மேம்­ப­டுத்­த­வும் சமூ­கப் பங்­கா­ளி­கள் வளங்­க­ளைத் திரட்ட முடி­யும். தனி­ம­னி­தர்­களும் குடும்ப நேரத்­தைப் போற்றி, அதற்கு அதிக முன்­னு­ரிமை அளிக்க வேண்­டும்," என்­றார் பிர­த­மர்.

அனைத்து சிங்­கப்­பூ­ரர்­களும் உடல் நலத்­தை­யும் சீனப் புத்­தாண்டு வாழ்த்­து­க­ளை­யும் பிரதமர் லீ தெரி­வித்­துக்­கொண்­டார்.