மந்தம் தவிர்த்து வளர்ச்சி: பிரதமர் லீ

மந்தம் தவிர்த்து வளர்ச்சி: பிரதமர் லீ

2 mins read
073299f0-7987-4433-b6d9-2a3521a7b3d2
-

பொரு­ளி­யல் மந்­த­நி­லை­யைத் தவிர்க்­க­வும் பொரு­ளி­யலை தொடர்ந்து வளர்க்­க­வும் சிங்­கப்­பூர் விரும்­பு­வ­தாக பிர­த­மர் லீ சியன் லூங் தெரி­வித்துள்­ளார். இருப்­பி­னும் இந்த எதிர்­பார்ப்பு, வெளிப்­பு­றச் சூழ்­நி­லை­கள் எவ்­வாறு அமை­கின்­றன என்­ப­தைப் பொறுத்து இருக்­கிறது என்­றும் அவர் கூறி­னார்.

"கொவிட்-19 அறவே இருக்­கக்­

கூ­டாது என்­னும் கொள்­கைக்கு விடை­கொ­டுத்த பின்­னர் சீனா என்ன செய்து

வரு­கிறது என்­ப­தை­யும் சீன அர­சாங்­கம் வழக்­க­மான பணி­க­ளுக்­குத் திரும்­பு­

கி­றதா என்­ப­தை­யும் நாம் கவ­னிக்க வேண்­டிய அவ­சி­யம் உள்­ளது," என்று திரு லீ நேற்­றுக் காலை செய்­தி­யா­ளர்­

க­ளி­டம் தெரி­வித்­தார்.

எல்­லா­வி­த­மான சாத்­தி­யக்­கூ­று­க­ளுக்­கும் தேவைப்­படும் ஏற்­பா­டு­களை அர­சாங்­கம் செய்­தி­ருப்­ப­தா­க­வும் சிறந்த முடி­வு­களை எட்­டு­வ­தற்­கான முயற்­சி­களில் சிங்­கப்­பூர் இயன்­ற­வரை ஈடு­படும் என்­றும் அவர் கூறி­னார்.

உட்­லண்ட்ஸ் ஒருங்­கி­ணைந்த போக்கு­வ­ரத்து மையத்­திலுள்ள பேருந்து நிலை­யத்­திற்கு நேற்று வரு­கை­ய­ளித்த திரு லீ, அங்­கி­ருந்த பேருந்து ஓட்­டு­நர்­

க­ளை­யும் போக்­கு­வ­ரத்து ஊழி­யர்­க­ளை­யும் சந்­தித்­தார்.

சீனப் புத்­தாண்டு காலத்­தில் அத்­தி­யா­வ­சி­யச் சேவை­களில் தொடர்ந்து ஈடு­பட்­டி­ருக்­கும் பேருந்து ஓட்­டு­நர்­கள், நிர்­வாக ஊழி­யர்­கள் உள்­ளிட்ட பொதுப் போக்­குவ­ரத்து ஊழி­யர்­க­ளுக்கு பிர­த­மர் நன்றி தெரி­வித்­துக்­கொண்­டார்.

கடி­ன­மான ஈராண்டு காலத்­திற்­குப் பின்­னர், கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் நீக்­கப்­பட்ட நிலை­யில் சீனப் புத்­தாண்டு கொண்­டாட்­டங்­கள் மீண்­டும் வழக்­க

­நி­லைக்­குத் திரும்பி இருப்­ப­தாக அவர் சொன்­னார்.

மாண்­ட­ரின் மொழி­யில் பேசிய திரு லீ, "இந்த ஆண்டு உல­க­ளா­விய நிச்­ச­யமற்றநிலை எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. முன்­னே­றிய நாடு­களில் பொரு­ளி­யல் மந்­தம் ஏற்­ப­டு­வ­தற்­கான சாத்­தி­யம் இருப்­ப­தால் வளர்ச்சி மெது­வ­டை­யும் என்று எதிர்­பார்க்­கி­றோம்.

"இந்த மந்­த­நி­லையைத் தவிர்த்து நம்­மால் இன்­னும் வளர்ச்சி காண­மு­டி­யும் என்று கரு­து­கி­றேன். இருப்­பி­னும் சீனா எவ்­வாறு தன்­னு­டைய வழக்­க­மான பணி­க­ளுக்­குத் திரும்­பு­கிறது என்­பதை நாம் கவ­னிக்க வேண்டி உள்­ளது," என்­றார்.

மேலும் அவர் கூறு­கை­யில், "நீங்­கள் உல­கைச் சுற்றி கவ­னித்­தால் நமக்கு வெளி­யே­யும் நம்­மைச் சுற்­றி­யும் ஏரா­ள­மான கரு­மே­கங்­கள் உள்­ளது தெரியும். இவற்­றி­லி­ருந்து நம்மை வேறுபடுத்­திக்­கொள்ள வேண்­டிய அவ­சி­யம் ஏற்­பட்டுள்­ளது.

"அதே­நே­ரம் நம்­மைப் பாது­காத்­துக்­கொள்­வ­தற்­குத் தேவை­யான பெரும்

­பா­லான திறன்­களை நாம் உரு­வாக்க வேண்டி உள்­ளது. இந்த முயல் ஆண்­டில் நாம் அத­னைச் செய்­வோம் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு," என்­றார் பிர­த­மர்.

சிவப்புநிற ஹோங் பாவ் உறை, மாண்­ட­ரின் ஆரஞ்­சுப் பழங்­கள், முகக்­க­வ­சங்­கள் போன்றவை அடங்கிய அன்­ப­ளிப்­புப் பை பொதுப் போக்­கு­வ­ரத்து ஊழி­யர்­

க­ளுக்கு வழங்­கப்­பட்­டது.

மனி­த­வள மூத்த துணை அமைச்­சர் ஸாக்கி முகம்­மது, போக்­கு­வ­ரத்து, நிதி மூத்த துணை அமைச்­சர் சீ ஹொங் டாட், நிலப் போக்­கு­வ­ரத்து ஆணையத் தலைமை நிர்­வாகி இங் லாங், தேசிய தொழிற்­சங்க காங்­கி­ரஸ் தலை­வர் மேரி லியூ, தலை­மைச் செய­லா­ளர் இங் சீ மெங் ஆகி­யோர் பிர­த­ம­ரு­டன் வரு­கை­

ய­ளித்­த­னர்.