கட்டுப்பாடில்லா புத்தாண்டு: பல நூறு மில்லியன் சீன குடிமக்கள் ஊர்திரும்பினர்

கட்டுப்பாடில்லா புத்தாண்டு: பல நூறு மில்லியன் சீன குடிமக்கள் ஊர்திரும்பினர்

2 mins read
a288463d-def4-4afe-b0ba-fa9e8c83c9b6
-

சீன குடி­மக்­கள் கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் முழு­மை­யாக நீக்­கப்­பட்ட நிலை­யில் மூன்­றாண்­டு­

க­ளுக்­குப் பின்­னர் நிம்­ம­தி­யான கொண்­டாட்­டங்­களில் ஈடு­பட சொந்த ஊர் திரும்பினர்.

மாநி­லம் விட்டு மாநி­லம் செல்ல எல்­லைக் கட்­டுப்­பா­டு­கள் இல்­லா­த­தால் ஏரா­ள­மா­னோர் தங்­க­ளது சொந்த ஊருக்­குத் திரும்­பி­னர். ரயில் நிலை­யங்­க­ளி­லும் விமான நிலை­யங்­க­ளி­லும் கடந்த சில நாள்­க­ளாக ஏரா­ள­மான மக்­கள் பய­ணம் செய்­த­தைக் காண­மு­டிந்­தது.

சீனப் புத்­தாண்­டைக் குறிக்­கும் வசந்த காலத் திரு­விழா இம்­மா­தம் 7ஆம் தேதி தொடங்­கி­யது முதல் கடந்த புதன்

கிழமை வரை 480 மில்­லி­யன் பய­ணங்­கள் மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக சீனா­வின் அதி­கா­ரத்­து­வத் தர­வு­கள் தெரி­வித்­தன.

கொவிட்-19 கொள்­ளை­நோய் பர­வத் தொடங்­கிய 2020ஆம் ஆண்டு கொண்­டாட்­டத்­தின்­போது மேற்­கொள்­ளப்­பட்ட பய­ணங்­க­ளைக் காட்­டி­லும் இந்த எண்­ணிக்கை 47.1 விழுக்­காடு அதி­கம்.

இருப்­பி­னும் கொள்­ளை­நோய்க்கு முந்­திய 2019ஆம் ஆண்­டு­டன் ஒப்­பி­டு­கை­யில் 47.3 விழுக்­காடு குறைவு.

40 நாள்­க­ளுக்கு நீடிக்­கும் இவ்­வாண்­டின் வசந்­த­கா­லத் திரு­வி­ழா­வின்­போது சீனா­வில் 2.1 பில்­லி­யன் பய­ணங்­கள் மேற்­கொள்­ளப்­படும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இதற்கு முன்­னர், ஆக உச்­ச­மாக 3 பில்­லி­யன் பய­ணங்­கள் மேற்­கொள்­ளப்­பட்ட சம்­ப­வம் இரு­முறை அங்கு நிகழ்ந்­துள்­ளது.

3 பில்­லி­யன் என்­பது சீனா­வின் ஒட்­டு­மொத்த மக்­கள்­தொ­கைக்கு ஒப்­பா­னது.

சீனர்­க­ளின் வசந்­த­கா­லத் திரு­விழா என்­பது உல­கின் ஆக அதிக மக்­கள் நட­மாட்­டம் நிறைந்­தது.

இந்­தத் திரு­விழா சீனர்

களுக்கு மிக­வும் முக்­கி­ய­மா­னது என்று தலை­ந­கர் பெய்­ஜிங்­கில் உள்ள 'எஸ்­எம்சி சைனா' என்­னும் தொழிற்­சா­லை­யின் பொது மேலா­ளர் மா கிங்­ஹாய் கூறி­னார்.

"இந்த விழாக்­கால விடு

முறையை அனு­ப­விக்க, வேலை செய்­வதை விடுத்து சொந்த ஊர் செல்­லு­மாறு ஊழி­யர்­கள் கேட்­டுக்­கொள்­ளப்­ப­டு­வார்­கள்," என்­றார் அவர்.

கடந்த ஈராண்­டு­க­ளாக, கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் கார­ண­மாக பெய்­ஜிங்­கில் உள்ள 80 விழுக்­காட்டு ஊழி­யர்­கள் தங்­க­ளது சொந்த ஊர் திரும்ப இய­லா­மல் தவித்து வந்­த­னர்.

தற்­போது கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்­ட­தால் அவர்­கள் மிகுந்த ஆர்­வத்­து­டன் ஊர் போய்ச் சேந்­த­னர்.