சுகாதாரத் துறையினருக்கு 2022 சவால்மிக்க ஆண்டு

சுகாதாரத் துறையினருக்கு 2022 சவால்மிக்க ஆண்டு

2 mins read
d6ab1b18-71d3-4709-a84f-bc05240f788a
-

அமைச்சர் ஓங்: சென்ற ஆண்டு மூன்று கொவிட்-19 அலைகளைச் சமாளிக்க நேரிட்டது

சிங்­கப்­பூ­ரர்­களில் பெரும்­பா­லா­னோ­ருக்கு சென்ற ஆண்டு வாழ்க்கை கிட்­டத்­தட்ட வழக்க நிலைக்­குத் திரும்­பி­யது. ஆனால் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புத் துறை­யில் பணி­பு­ரி­வோர் மூன்று கொவிட்-19 கிரு­மிப் பர­வல் அலை­க­ளைச் சமா­ளிக்க வேண்­டி­யி­ருந்­தது என்று சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் கூறி­னார்.

சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புத் துறை­யி­ன­ருக்­குச் சென்ற ஆண்டு கடி­ன­மான ஆண்­டாக இருந்­தது என்று செய்­தி­யா­ளர்­க­ளி­டம் அவர் குறிப்­பிட்­டார்.

சீனப் புத்­தாண்­டின் முதல் நாளான நேற்று முன்­தி­னம், செங்­காங் பொது மருத்­து­வ­மனைக்­குச் சென்று அங்கு பணி­பு­ரி­யும் ஊழி­யர்­களை அவர் சந்­தித்­தார்.

"சென்ற ஆண்­டைப் பொறுத்­த­வரை சிங்­கப்­பூர் சமூ­கம் கிரு­மிப்­ப­ர­வ­லில் இருந்து மேலும் மீண்­டு­வந்­தது.

"சிங்­கப்­பூ­ரர்­கள் வாழ்க்கை வழக்­க­நி­லைக்­குத் திரும்­பி­ய­தா­கவே உணர்ந்­தார்­கள்.

"ஆனால் கொவிட்-19 கிரு­மி­யின் வெவ்­வேறு திரி­பு­களால் நோய்த்­தொற்று அதி­கம் பர­வி­யது," என்­றார் அமைச்­சர்.

ஓமிக்­ரான் பிஏ.2 திரிபு வேக­மா­கப் பரவி சென்ற ஆண்டு மார்ச் மாதத்­தில் உச்­சத்தை எட்­டி­யது. அதனை அடுத்து, ஜூன், ஜூலை மாதங்­களில் பிஏ.5 திரி­பும் பின்­னர் அக்­டோ­பர், நவம்­பர் மாதங்­களில் எக்ஸ்­பிபி திரி­பும் கிரு­மிப்­ ப­ர­வலை ஏற்­ப­டுத்­தின.

செங்­காங் பொது மருத்­து­வ­மனை­யின் வெவ்­வேறு வார்­டு­க­ளுக்­குச் சென்ற அமைச்­சர் ஓங், சுகா­தா­ரத்­துறை ஊழி­யர்­க­ளுக்­கும் நோயா­ளி­க­ளுக்­கும் மாண்­ட­ரின் ஆரஞ்­சு­களை வழங்கி புத்­தாண்டு வாழ்த்­து­களைத் தெரிவித்துக்கொண்டார்.

"உங்­கள் சேவை­கள் அனைத்­திற்­கும் குறிப்­பாக சென்ற ஆண்டு உங்­க­ளது பங்­க­ளிப்­புக்­கும் மிக்க நன்றி," என்று ஊழி­யர்­க­ளி­டம் அமைச்­சர் கூறி­னார்.

செங்­காங் பொது மருத்­து­வ­மனைக்­குச் செல்­வ­தற்குமுன்­அமைச்­சர் ஓங், சாங்கி விமான நிலை­யத்­தின் மூன்­றாம் முனை­யத்­துக்­குச் சென்­றி­ருந்­தார்.

போக்­கு­வ­ரத்து மற்றும் நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­பு­றம் ஆகிய துறை­க­ளுக்­கான மூத்த துணை­ய­மைச்­சர் டாக்­டர் ஏமி கோரு­டன் இணைந்து டாக்சி ஓட்­டு­நர்­கள், தனி­யார் வாடகை கார் ஓட்­டு­நர்­கள், விமான நிலைய ஊழி­யர்­கள் ஆகி­யோ­ருக்கு அன்­ப­ளிப்­புப் பைகளை வழங்கி அமைச்­சர் ஓங் வாழ்த்­துக் கூறி­னார்.

தேசிய தொழிற்சங்கக் காங்கிரசின்கீழ் வரும், தேசிய டாக்சி ஓட்­டு­நர் சங்­கம், தேசிய தனி­யார் வாடகை கார் ஓட்­டு­நர் சங்­கம் ஆகி­ய­வற்­றின் தலை­வர்­களும் உ­டன் சென்­றி­ருந்­த­னர்.

"கொள்­ளை­நோய்ப் பர­வல் கால­கட்­டத்­தில் வரு­மா­னத்தை இழந்­தா­லும் மீள்­தி­ற­னு­டன் அந்த இருண்ட காலத்­தி­லி­ருந்து மீண்­டு­வந்து, நமக்­கும் இங்கு வரும் சுற்­றுப்­ப­ய­ணி­க­ளுக்­கும் சேவை­யாற்­றும் டாக்சி, தனி­யார் வாடகை கார் ஓட்­டு­நர்­க­ளுக்கு நன்றி சொல்­லும் நேரம் இது," என்று பாசிர் ரிஸ்-பொங்­கோல் குழுத்­தொ­குதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும் இரு தொழிற்­சங்­கங்­க­ளின் ஆலோ­ச­க­ரு­மான இயோ வான் லிங் கூறி­னார்.