தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாம்புபிடி வீரர்கள் உட்பட தமிழ்நாட்டின் 6 பேருக்கு பத்ம விருதுகள்

2 mins read

இந்­திய அர­சாங்­கத்­தின் உய­ரிய விரு­தா­கக் கரு­தப்­படும் பத்ம விரு­து­கள் நாட்­டுக்­காக பெரும் சேவை­கள் புரிந்­தோ­ருக்கு வழங்­கப்­பட்டு வரு­கின்றன. அந்த வகை­யில், நடப்­பாண்­டிற்­கான பத்ம விரு­து­கள் பல்­வேறு துறை­க­ளைச் சேர்ந்த 106 பேருக்கு அறி­விக்­கப்­பட்­டுள்­ளன.

தமிழ்­நாட்­டைச் சேர்ந்த 6 பேருக்கும் இந்தப் பட்டியலில் இடமுண்டு. அவர்களில், பாம்­பு­பிடி வீரர்­க­ளான வடி­வேல் கோபால், 48 மாசி சடை­யன், 45, ஆகி­யோர் பத்­ம­ஸ்ரீ விரு­துக்­குத் தேர்வு செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

பழங்­குடி இரு­ளர் சமூ­கத்­தைச் சேர்ந்த இவர்­கள் பாம்பு பிடிப்­ப­தில் வல்­ல­வ­வர்­கள். குடி­யி­ருப்­பு­

க­ளுக்­குள் புகும் கொடிய நச்­சுப்­பாம்­பு­க­ளைக்கூட சுல­ப­மாக பிடிக்­கக்­கூ­டிய திறன் பெற்­ற­வர்­கள் இவர்­கள்.

இந்­தி­யா­வில் உள்ள மாநி­லங்­களில் மட்­டு­மின்றி தாய்­லாந்து, அமெ­ரிக்கா உள்­ளிட்ட ஏரா­ள­மான நாடு­க­ளுக்­கும் சென்று இவ்­வி­ரு­வ­ரும் பாம்­பு­க­ளைப் பிடித்­துள்­ள­னர். பாம்பு கடித்த பின் உட­லில் ஏறும் நஞ்சை முறிப்­ப­தற்­கான மருந்­து­களைக் கண்­டு­பி­டிப்­

ப­தி­லும் இந்த இரு­வ­ரும் பங்­காற்றி உள்­ள­னர்.

கலைத்­து­றைச் சேவைக்­காக பிர­பல பாடகி வாணி ஜெய­ரா­முக்கு பத்ம பூஷண் விருது அறி­விக்­கப்­பட்டுள்­ளது. தமிழ்­நாடு சார்­பில் பத்ம பூஷண் விரு­துக்­குத் தேர்ந்து எடுக்­கப்­பட்டு இருப்­பது இவர் ஒரு­வர் மட்­டுமே. 77 வய­தா­கும் திரு­மதி வாணி ஜெய­ராம் வேலூ­ரில் இசைக்­கு­டும்­பத்­தில் பிறந்­த­வர். 10 இந்­திய மொழி­களில் பாடல்­கள் பாடிய இவர் மூன்று முறை தேசிய விருது பெற்­றுள்­ளார்.

மருத்­து­வச் சேவைக்­காக மருத்­து­வர் கோபால்­சாமி வேலுச்­சாமி, பர­த­நாட்­டி­யக் கலை­ஞர் கே. கல்­யா­ண­சுந்­த­ரம் பிள்ளை, நூல­க­ரும் சமூக சேவ­க­ரு­மான பாலம் கல்­யா­ண­சுந்­த­ரம் ஆகி­யோ­ரும் பத்­ம­ஸ்ரீ விரு­துக்­குத் தேர்­வு­பெற்­றுள்­ள­னர்.

கொவிட்-19 தொற்­றைக் கட்­டுப்­ப­டுத்த கப­சுர குடி­நீரை முதன்­மு­த­லில் பரிந்­துரை செய்­த­வர் மருத்­து­வர் வேலுச்­சாமி.

அதே­போல, ஓய்­வு­பெற்ற நூல­க­ரான திரு கல்­யா­ண­சுந்­த­ரம், 30 ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக ஏழை மாண­வர்­க­ளின் கல்­விக்­காக தம்­மி­டம் இருந்த செல்வ சேமிப்பு அத்­த­னை­யை­யும் செலவு செய்த பெரு­மைக்­கு­ரி­ய­வர்.

இந்­திய அள­வில் முன்­னாள் உத்­த­ரப் பிர­தேச முதல்­வர் முலா­யம் சிங் யாதவ், முன்­னாள் மத்­திய அமைச்­சர் எஸ்எம் கிருஷ்ணா ஆகி­யோ­ருக்கு பத்ம விபூ­ஷண் விரு­தும் சாதனை புரிந்த 'ஆர்­ஆர்­ஆர்' திரைப்­ப­டத்­தின் இசை­ய­மைப்­பா­ளர் கீர­வாணி, புதுச்­சேரி மருத்­து­வர் நளினி பார்த்­த­சா­ரதி ஆகி­யோ­ருக்கு பத்­ம­ஸ்ரீ விரு­தும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளன.