அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் பாம்புத் தொல்லை அதிகமாக இருப்பதாகக் கூறி கடந்த 2017ஆம் ஆண்டு
மாசி சடையனையும் வடிவேல் கோபாலையும் (படம்) அழைத்துச் சென்றனர். அங்கு 14 பாம்புகளைப் பிடித்து ஃபுளோரிடா மக்களை வியப்பில் ஆழ்த்திய இவர்களது திறமையை அந்த மாநில வனவிலங்குநல அமைச்சின் தலைவர் பாராட்டினார்.

