கிராபி படகு விபத்தில் கர்ப்பிணி மனைவி, ஆறு வயது மகளைப் பறிகொடுத்த மலேசியர்

கிராபி படகு விபத்தில் கர்ப்பிணி மனைவி, ஆறு வயது மகளைப் பறிகொடுத்த மலேசியர்

1 mins read
e925d511-e921-4eb5-874b-9e1b4f83cd1c
-

தாய்­லாந்­தின் தென்­ப­கு­திக்­குச் சுற்­றுப்­ப­ய­ணம் மேற்­கொண்ட மலே­சிய ஆட­வர், சென்ற புதன்­கி­ழமை படகு கவிழ்ந்­த­தில் கர்ப்­பி­ணி­யாக இருந்த மனை­வி­யை­யும் ஆறு வயது மக­ளை­யும் பறி­கொ­டுத்­தார்.

சென்ற புதன்­கிழமை பிற்­ப­கல் ஒரு மணி­ய­ள­வில் கிராபி பகு­தி­யின் 'போடா' தீவுக்கு அவர்­கள் சென்ற நீண்ட படகு கவிழ்ந்­த­தாக பெர்­னாமா தக­வல் வெளி­யிட்­டுள்­ளது.

பெரிய அலை­கள் மோதி­ய­தால் அப்­ப­டகு கவிழ்ந்­தி­ருக்­கக்­கூ­டும் எனக் கரு­து­வ­தாக கிராபி மாநில ஆளு­நர் பச­கோன் புன்­ய­லாக் கூறி­னார்.

"கட­லில் தத்­த­ளித்­துக் கொண்­டி­ருந்த அவர்­கள் மூவ­ரு­டன் பட­கோட்­டி­யை­யும் உள்­ளூர் மீன­வர் ஒரு­வர் மீட்­டார்.

அதை­ய­டுத்து நால்­வ­ரும் கிராபி மருத்­து­வ­ம­னைக்கு விரைந்து கொண்­டு­செல்­லப்­பட்­ட­னர்," என்று செய்­தி­யா­ளர்­க­ளி­டம் ஆளு­நர் கூறி­னார்.

விபத்­தில் கவிழ்ந்த பட­கைச் செலுத்­திய 45 வயது பட­கோட்டி, சுற்­றுப் பய­ணி­களில் 38 வயது மலே­சிய ஆட­வர் கான் கா செங் இரு­வர் மட்­டுமே உயிர் பிழைத்­த­னர்.

மீன்­பி­டிக்­கச் செல்­கை­யில் திடீ­ரென்று மழை பெய்து பலத்த காற்று வீசி­ய­தால் கரை திரும்­பிய 21 வயது மீன­வர் வாரிட் சாங்­மின், கட­லில் தத்­த­ளித்த நால்­வரை­யும் தனது பட­கிற்கு இழுத்­துக் காப்­பாற்­றி­னார்.

அப்­போதே கர்ப்­பி­ணிப் பெண்­ணும் அவ­ரது ஆறு வயது மகளும் சுய­நி­னை­வற்ற நிலை­யில் இருந்­த­தா­கக் கூறப்­பட்­டது.

பின்­னர் மருத்­து­வ­ம­னை­யில் இரு­வ­ரும் உயி­ரி­ழந்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது. உயி­ரி­ழந்த மலே­சிய மாது, அவ­ரது மகள் இரு­வ­ரின் நல்லுடல்­க­ளைத் தாய­கம் கொண்­டு­வர சொங்­லா­வில் உள்ள மலே­சி­யத் துணைத் தூத­ர­கம் உதவி செய்­து­ வ­ரு­கிறது.