தாமதமான 'பிடிஓ' திட்டங்கள் 50%க்கும் மேல் நிறைவு

தாமதமான 'பிடிஓ' திட்டங்கள் 50%க்கும் மேல் நிறைவு

2 mins read

கொவிட்-19 நெருக்­க­டி­நி­லை­யின்­போது தேவைக்கு ஏற்ப கட்­டப்­படும் வீடு­க­ளுக்­கான (பிடிஓ) கட்­டு­மா­னப் பணி­கள் தாம­த­ம­டைந்­தன.

இந்­நி­லை­யில், பாதிக்­கப்­பட்ட இந்த பிடிஓ திட்­டங்­களில் 50 விழுக்­காட்­டுக்­கும் மேற்­பட்ட திட்­டங்­கள் நிறை­வ­டைந்­து­

விட்­ட­தாக வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கம் நேற்று கூறி­யது.

52 பிடிஓ திட்­டங்­கள் நிறை­

வ­டைந்­து­விட்­ட­தாக கழ­கம் தெரி­வித்­தது.

"ஆக அண்மைய பிடிஓ கட்டுமா­னப் பணி நிறைவு விகி­தம் கொவிட்-19 நெருக்­க­டி­

நி­லைக்கு முன்­பு இ­ருந்ததைவிட அதி­கம். கடந்த ஐந்து ஆண்­டு­களில் இதுவே ஆக அதி­க­மான நிறைவு விகி­தம்," என்று கழ­கம் கூறி­யது.

அடுத்த இரண்டு ஆண்­டு­களில் பிடிஓ திட்­டம் தாம­த­

ம­டை­வது தொடர்ந்து குறைக்­கப்­படும் என்று அது உறுதி அளித்­தது.

நிர்­ண­யிக்­கப்­பட்ட தேதிக்­குள் தயா­ரா­கா­மல் தாம­த­

ம­டைந்த பிடிஓ வீடு­க­ளின் விகி­தம் 2021ஆம் ஆண்­டில் 90 விழுக்­காட்­டுக்­கும் அதி­க­மாக இருந்­தது. ஆனால் அந்த விகி­தம் தற்­போது 40 விழுக்­கா­டாக உள்­ளது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. தாம­த­ம­டைந்து, தற்­போது விற்­ப­னைக்­குத் தயா­ராக இருக்­கும் பிடிஓ திட்­டங்­களில் பொங்­கோல் வட்­டா­ரத்­தில் உள்ள நார்த்­ஷோர் எட்ஜ் திட்­ட­மும் ஒன்று. ஒப்­பந்­த­தார­ருக்கு ஏற்­பட்ட நிதிப் பிரச்­சி­னை­யால் பாதிக்­கப்­பட்ட சென்ஜா ரிட்­ஜஸ், சென்ஜா ஹைட்ஸ், ஸ்கை விஸ்டா@புக்­கிட் பாத்­தோக் ஆகிய பிடிஓ திட்­டங்­க­ளின்

கட்­டு­மா­னப் பணி­களும் நிறை­

வ­டைந்­து­விட்­டன.

கொவிட்-19 நெருக்­க­டி­நி­லை­யால் பாதிக்­கப்­பட்டு, தாம­த­

ம­டைந்து இன்­னும் நிறை­வ­டை­யாத பிடிஓ திட்­டங்­க­ளின் எண்­ணிக்­கையைக் கழ­கம் வெளி­யி­ட­வில்லை.

கடந்த ஆண்டு ஏப்­ரல் மாத நில­வ­ரப்­படி, ஆறு மாதங்­கள் அல்­லது அதற்­கும் அதி­க­மான கால­கட்­டத்­துக்குத் தாம­த­

ம­டைந்­துள்ள பிடிஓ திட்­டங்­

க­ளின் எண்­ணிக்கை 58 ஆகும்.

ஒட்­டு­மொத்த திட்­டங்­கள் எண்­ணிக்கையில் இது 60 விழுக்­காட்­டுக்­கும் குறைவு.

இந்­நி­லை­யில், 94 வீவக திட்­டங்­க­ளுக்­கான கட்­டு­மா­னப் பணி­கள் இன்­னும் நடந்­து­கொண்­டி­ருப்­ப­தாக கடந்த வாரம் தெரி­விக்­கப்­பட்­டது.

அவற்­றில் கொவிட்-19 நெருக்­க­டி­நி­லை­யால் தடை­பட்ட திட்­டங்­களும் அடங்­கும் என்று கழ­கம் கூறி­யது. கொவிட்-19 பாதிப்பு குறைந்­தி­ருப்­ப­தா­லும் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளின் எண்­ணி­க்கை அதி­க­ரித்­தி­ருப்­ப­தா­லும் கூடு­தல் பிடிஓ திட்­டங்­கள் நிறை­வ­டைந்­தி­ருப்­ப­தாக கழ­கம் கூறி­யது.