முடக்கப்பட்ட வங்கிக் கணக்குகளை விடுவிக்க கோரும் முகைதீன்

முடக்கப்பட்ட வங்கிக் கணக்குகளை விடுவிக்க கோரும் முகைதீன்

1 mins read

நிதிக் கையா­டல் தொடர்­பான சந்­தே­கம் எழுந்­ததை அடுத்து, பெர்சத்து கட்­சி­யின் வங்­கிக் கணக்­கு­களை மலே­சிய ஊழல் தடுப்பு ஆணை­யம் இரண்டு வாரங்­க­ளுக்கு முன்பு முடக்­கி­யது.

முடக்­கப்­பட்ட வங்­கிக் கணக்குகளை விடு­விக்­கும்­படி கோரிக்கை விடுக்க இருப்­ப­தாக அக்­கட்­சி­யின் தலை­வ­ரும் மலே­சி­ யா­வின் முன்­னாள் பிர­த­ம­ரு­மான முகை­தீன் யாசின் நேற்று கூறி­னார். தமது கட்­சி­யின் நிதிப் பரி­வர்த்­த­னை­கள் முறை­யா­னவை என்று தம்­மால் உறு­தி­யா­கக் கூற முடி­யும் என்று திரு முகை­தீன் தெரி­வித்­தார்.

"பெர்­சத்து கட்­சி­யின் வங்­கிக் கணக்­கு­களில் உள்ள பணம் சட்­டத்­துக்கு உட்­பட்டு பெறப்­பட்­டது. எனவே முடக்­கப்­பட்ட வங்­கிக் கணக்­கு­களை விடு­விக்­கும்­படி மலே­சிய ஊழல் தடுப்பு ஆணை­யத்­துக்­குக் கடி­தம் அனுப்ப இருக்­கி­றோம்," என்று மலே­சிய ஊட­கத்­தி­டம் திரு முகை­தீன் தெரி­வித்­தார்.

கட்­சி­யின் வங்­கிக் கணக்­கு­கள் முடக்­கப்­பட்­டுள்­ள­தால் கட்­சியை நடத்­து­வ­தில் சிக்­கல் ஏற்­பட்­டுள்­ள­தாக அவர் கூறி­னார்.

"எங்­கள் வங்­கிக் கணக்­கு­களை ஆணை­யம் மூன்று மாதங்­க­ளுக்கு முடக்­கி­னால் எங்­க­ளுக்கு மிக­வும் சிர­ம­மா­கி­

வி­டும். எங்­கள் அதி­கா­ரி­க­ளுக்­குச் சம்­ப­ளம் கொடுக்க முடி­யா­மல் போய்­வி­டும். அலு­வ­லங்­க­ளுக்­கான வாட­கை­யை­யும் செலுத்த முடி­யாது. இது கட்­சி­யின் நிர்­வா­கத்தை வெகு­வா­கப் பாதிக்­கும். அது­மட்­டு­மல்­லாது, மலே­சி­யா­வில் இருக்­கும் மிக முக்­கி­ய­மான கட்சி என்று பெர்­சத்­துக்கு இருக்­கும் நிலை­யும் பெய­ரும் பாதிப்­ப­டை­யும்," என்­றார் திரு முகை­தீன்.