தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஸ்கூடாய் தைப்பூச விழாவில் ஜோகூர் சுல்தான் பங்கேற்பு

2 mins read
5a6dd90c-ba2a-479b-8219-1af6f4e7bd7a
-

உல­கெங்­கும் உள்ள முருக பக்­தர்­க­ளால் தைப்­பூ­சத் திரு­நாள் நாளை (ஞாயிற்­றுக்­கி­ழமை) கொண்­டா­டப்­பட இருக்­கிறது.

மலே­சி­யா­வின் பல பகுதிக­ளில் தைப்பூசத் திருவிழாக் கொண்­டாட்­டம் இடம்­பெற்­றா­லும் பத்­து­மலை ஸ்ரீசுப்­பி­ர­ம­ணி­யர் சுவாமி திருக்­கோ­யி­லில் ஏரா­ளமான பக்­தர்­கள் திரள்­வது வழக்­கம்.

கொவிட்-19 கொள்­ளை­நோய்க்­குப் பிறகு பெரிய அள­வில் இவ்­வாண்டு இடம்­பெ­றும் பத்­து­மலை தைப்­பூச விழா­வின் நான்கு நாள் கொண்­டாட்­டங்­க­ளி­லும் 1.6 மில்­லி­யன் பேர் கலந்து­கொள்­வார்­கள் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக ஆல­யக் குழுச் செய­லா­ளர் சி. சேது­பதி கூறி­யுள்­ளார்.

பிர­த­மர் அன்­வார் இப்­ரா­கி­மும் சிலாங்­கூர் மாநில முதல்­வர் அமி­ரு­தீன் ஷாரி­யும் பத்­து­மலை தைப்­பூச விழா­வில் கலந்­து­கொள்­வார்­கள் என்­றும் அவர் தெரி­வித்­தார்.

பிர­த­ம­ராக திரு அன்­வார் இப்­ரா­கிம் இந்த விழா­வில் பங்­கேற்­பது இது முதல்­முறை.

அதே­போல ஜோகூர் மாநி­லத்­தின் ஸ்கூ­டாய் அருள்­மிகு ஸ்ரீபா­ல­சுப்­பி­ர­ம­ணி­யர் ஆல­யத்­தில் நடை­பெற இருக்­கும் தைப்­பூச விழா­வில் ஜோகூர் சுல்­தான்

இப்­ரா­கிம் இஸ்­கந்­தார் முதல்­ மு­றை­யா­கக் கலந்­து­கொள்ள இருக்­கி­றார்.

இதனை இந்த ஆல­யத்­தின் தலை­வர் எஸ் பால­கி­ருஷ்­ணன் உறு­திப்­ப­டுத்தி உள்­ளார்.

"சுல்­தான் அவர்­கள் காலை 11 மணிக்கு தைப்­பூச விழா­வில் பங்­கேற்க ஆல­யத்­திற்கு வரு­வார்.

"மாநில முதல்­வர் ஒன் ஹஃபிஸ் காஸி உள்­ளிட்ட தலை­வர்­கள் பல­ரும் விழா­வில் சுல்­தா­னு­டன் பங்­கேற்­பர்.

"கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்டு உள்­ள­தால் இவ்­வாண்டு தைப்­பூச விழா பிரம்­மாண்­ட­மா­கக் கொண்­டா­டப்­ப­டு­கிறது.

"ஸ்ரீபா­ல­சுப்­பி­ர­ம­ணி­யர் ஆலய தைப்­பூச விழா நிகழ்ச்­சி­களில் 10,000க்கும் மேற்­பட்ட பக்­தர்­கள் கலந்­து­கொள்­வார்­கள்," என்று திரு எஸ் பால­கி­ருஷ்­ணன் நேற்று செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­னார்.

கொள்­ளை­நோய்ப் பர­வ­லுக்கு முன்­னர், 2019ஆம் ஆண்டு வடி ஹானா­வில் உள்ள அருள்­மிகு தெண்­டா­யு­த­பாணி திருக்­கோ­யில் விழா­வில் ஜோகூர் சுல்­தான் பங்­கேற்­றுச் சிறப்­பித்­தார்.