சிறுமியர் திருமணம்: 1,800 ஆடவர் கைது

1 mins read

இந்­தி­யா­வின் அசாம் மாநி­லத்­தில் குழந்­தைத் திரு­ம­ணங்­களை ஒழிக்க தீவிர நட­வ­டிக்கை தொடங்­கப்­பட்டுள்­ளது. குழந்­தைத் திரு­ம­ணத் தடுப்­புச் சட்­டத்தை மீறியதற்­காக

மாநி­லம் முழு­வ­தும் 1,800 ஆடவர்கள் கைது செய்­யப்­பட்டுள்­ள­தாக அசாம் முதல்­வர் ஹிமாண்டா பிஸ்­வார் சர்மா கூறி­னார்.

மேலும், குழந்­தைத் திரு­ம­ணம் தொடர்­பாக இது­வரை 4,000 வழக்­கு­கள் பதிவு செய்­யப்­பட்டுள்­ள­தா­க­வும் கூறிய அவர், விதியை மீறு­ப­வர்­கள் தொடர்ந்து கைது செய்­யப்­ப­டு­வார்­கள் என்­றார்.

"வியா­ழக்­கி­ழமை இரவு முதல் கைது நட­வ­டிக்கை தொடர்ந்து வரு­கிறது. குறைந்த வயது சிறு­மி­களை மணம் முடித்­தோர், அதற்கு ஏற்­பாடு செய்­தோர், அந்­தத் திரு­

ம­ணத்தை கோயில்­கள் மற்­றும் பள்­ளி­வா­சல்­களில் பதிவு செய்ய உத­வி­யோ­ரும் கைது செய்­யப்­பட்டு வரு­கி­றார்­கள்.

"சிறுமியர் கர்ப்பமடைய சிறுவயது திருமணங்களே காரணம். இதனால், சிசு உயிரிழப்பு அதிகரிப்பதோடு சிறுமியரின் உடல்நலமும் பாதிக்கப்படுகிறது," என்று

அவர் நேற்று ராய்ட்­டர்ஸ் செய்தி நிறு­வ­னத்­தி­டம் கூறி­னார்.

பெண்­க­ளுக்கு எதி­ரான மனி­த­நே­ய­மற்ற குற்­றங்­களில் ஈடு­ப­டு­ப­வர்­களும் உட­ன­டி­யா­கக் கைது செய்­யப்­ப­டு­வார்­கள் என்­றும் இது­போன்ற குற்­றங்­களை மாநி­ல காவல்­துறை சகித்­துக்கொள்­ளாது என்­றும் திரு சர்மா தெரி­வித்துள்­ளார்.

இந்தியாவில் 18 வயதுக்குக் குறைந்தவர்கள் மணம் புரிவது குற்றம். இருப்பினும் இந்தக் கட்டுப்பாடு நாட்டின் பல பகுதிகளிலும் அப்பட்டமாக மீறப்பட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.