ஒரே நாளில் இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்: ஆயிரக்கணக்கானோர் மரணம், காயம், மாயம்

ஒரே நாளில் இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்: ஆயிரக்கணக்கானோர் மரணம், காயம், மாயம்

2 mins read
4a5712ff-cff2-456b-a0d2-533206bf1f21
-

துருக்­கி­யில் நேற்று ஒரே நாளில் இரண்டு சக்­தி­வாய்ந்த நில­ந­டுக்­கங்­கள் ஏற்­பட்­டன.

முதல் நில­ந­டுக்­கம் நேற்று அதி­காலை துருக்­கி­யை­யும் சிரி­யா­வை­யும் உலுக்­கி­யது. அது ரிக்­டர் அள­வில் 7.9ஆகப் பதி­வா­னது. கிட்­டத்­தட்ட 12 மணி நேரம் கழித்து, துருக்­கி­யின் அதே

பகு­தி­யில் மீண்­டும் நில­ந­டுக்­கம் ஏற்­பட்­டது. அது ரிக்­டர் அள­வில் 7.6ஆகப் பதி­வா­னது.

நேற்­றி­ரவு நில­வ­ரப்­படி நில

நடுக்­கம் கார­ண­மாக குறைந்­தது 1,400 பேர் மாண்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது. 6,000க்கும் மேற்­பட்­டோர் காய­ம­டைந்­த­தா­க­வும் பல­ரைக் காண­வில்லை என்­றும் அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

சிரி­யா­வில் அலெப்போ, லட்­டாக்­கியா, ஹமா, டார்­டஸ் ஆகிய பகு­தி­கள் நில­ந­டுக்­கத்­தால் பாதிக்­கப்­பட்­டன. இதற்­கி­டையே, இடிபா­டு­க­ளுக்கு அடி­யில் பலர் சிக்கி இருப்­ப­தா­க­வும் அவர்­களை

மீட்­கும் பணி­கள் முடுக்­கி­வி­டப்­பட்­டுள்­ள­தா­க­வும் இரு­நாட்டு அதி­கா­ரி­களும் தெரி­வித்­த­னர்.

துருக்­கி­யி­லும் சிரி­யா­வி­லும் தற்­போது பனிக்­கா­லம் என்­ப­தால் கடுங்­கு­ளி­ரில் நில­ந­டுக்­கம்

உலுக்­கி­யி­ருப்­பது கூடு­தல்

சிக்­கலை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

நேற்று அதி­காலை இருள் சூழ்ந்­தி­ருக்க, பலர் ஆழ்ந்த உறக்­கத்­தில் இருந்­த­போது முதல் நில­ந­டுக்­கம் ஏற்­பட்­டது. சைப்­ரஸ், லெப­னான் ஆகிய நாடு­க­ளி­லும்

அதிர்­வு­கள் உண­ரப்­பட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

நில­ந­டுக்­கம் ஏற்­பட்­ட­போது சிரியா தலை­ந­கர் டமாஸ்­க­சில் மக்­கள் பீதி அடைந்து வீடு­க­ளி­லி­ருந்து வெளி­யே­றி­ய­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

பாதிக்­கப்­பட்ட இடங்­க­ளுக்கு மீட்­புப் பணி­யா­ளர்­க­ளை­யும்

அத்­தி­யா­வ­சி­யப் பொருள்­களை விநி­யோ­கிக்­கப் பயன்­ப­டுத்­தப்­படும் விமா­னங்­க­ளை­யும் துருக்­கிய அதி­கா­ரி­கள் உட­ன­டி­யாக அனுப்­பி­வைத்­த­னர். நிலைமை மோச­மாக இருப்­ப­தால் அனைத்­து­லக உத­வி­யை­யும் துருக்கி நாடி­யுள்­ளது. நில­ந­டுக்­கம் கார­ண­மாக தங்­கள் அன்­புக்­கு­ரி­ய­வர்­களை இழந்து தவிப்­போ­ருக்­குத் தமது ஆழ்ந்த அனு­தா­பத்தை துருக்­கிய அதி­பர் ரெசப் தயீப் எர்­டோ­வான் தெரி­வித்­துக்­கொண்­டார். இந்­நி­லை­யில், நில­

ந­டுக்­கத்­தால் நிலை­கு­லைந்­தி­ருக்­கும் துருக்­கிக்­கும் சிரி­யா­வுக்­கும் உதவ அனைத்­து­லக அமைப்­பு­கள் முன்­வந்­துள்­ளன.

நில­ந­டுக்­கம் கார­ண­மாக

துருக்­கி­யிலும் சிரியாவிலும் பல கட்­ட­டங்­கள் இடிந்து விழுந்­தன. இத­னால் உயிர்ச் சேதத்­து­டன் பொருள் சேத­மும் ஏற்­பட்­டது. இடி­பா­டு­க­ளுக்கு அடி­யில் சிக்­கி­யி­ருப்­போ­ரைத் தேடும் பணி­ தொடர்கிறது,

படம்: ஏஎஃப்பி