11,000ஐ தாண்டிய உயிர்ச்சேதம்; நிலநடுக்கத்தில் 6,000 கட்டடங்கள் இடிந்தன

11,000ஐ தாண்டிய உயிர்ச்சேதம்; நிலநடுக்கத்தில் 6,000 கட்டடங்கள் இடிந்தன

2 mins read
3c21daa2-d33e-4cdb-ad12-1ec4969a800b
-

துருக்­கி­யை­யும் சிரி­யா­வை­யும் கடந்­த திங்­கட்­கி­ழமை அன்று தாக்­கிய நில­ந­டுக்­கத்­தில் உயிர் இழந்­தோர் எண்­ணிக்கை 11,000ஐத் தாண்­டி­யுள்­ளது.

துருக்­கி­யில் 8,754 பேர் நில­ ந­டுக்­கத்­தில் மாண்­ட­தாக அந்­நாட்டு அதி­பர் தயிப் எர்­டோ­கன் கூறி­னார். சிரி­யா­வில் 2,662 பேர் மாண்­ட­தாக ஏஎ­ஃப்பி செய்தி நிறு­வ­னம் தெரி­வித்­தது.

மாண்­டோர் எண்­ணிக்கை 20,000ஐ தாண்­ட­லாம் என்று உல­கச் சுகா­தார நிறு­வ­னம் கூறி­யுள்­ளது.

நில­ந­டுக்­கத்­தில் இரண்டு நாடு­க­ளி­லும் 6,000க்கும் அதி­க­மான கட்­ட­டங்­கள் இடிந்து விழுந்­தி­ருக்­க­லாம் என்று மதிப்­பி­டப்­ப­டு­கிறது. நில­ந­டுக்­கம் நடந்து 50 மணி நேரத்­துக்­குப் பின்­னர் குடும்­பங்­களும் சிறு­வர் சிறு­மி­ய­ரும் கட்­டட இடி­பா­டு­ களி­லி­ருந்து காப்­பாற்­றப்­பட்­ட­னர்.

ஆனால், மீட்­புப் பணி­கள் மெது­வாக நடை­பெ­று­வ­தால் துருக்­கி­யில் மக்­கள் கோப­ம­டைந்­துள்­ள­னர். சிலர் உத­விக்கு யாரு­மின்றி தங்­கள் உற­வி­னர்­ க­ளைத் தாங்­களே தேடி­வருவதாகக் கூறி­னர்.

நில­ந­டுக்­கத்­தில் உயிர்தப்­பி­ய­வர்­கள் நேற்று மூன்­றா­வது இரவை வெளியில் கழித்­த­னர். சிலர் கார்­க­ளுக்கு அடி­யி­லும் வீதி­ க­ளி­லும் படுத்து உறங்­கி­னர். நில­ந­டுக்­கத்­தில் போகாத உயிர், கடும் குளி­ரா­லும் பசி­யா­லும் போய்­வி­டும் என்று அங்­குள்ள சிலர் அங்­க­லாய்த்­த­னர்.

நில­ந­டுக்­கம் மையம் கொண்ட கஹ­ர­மன்­ம­ரஸ் மாநி­லத்­துக்கு நேற்­றுச் சென்ற அதி­பர் எர்­டோ­கன் முதல் நாளில் பிரச்­சி­னை­கள் இருந்­ததை ஒப்­புக்­கொண்­டார். சாலை­க­ளி­லும் விமான நிலை­யங்­க­ளி­லும் ஏற்­பட்ட சேதமே அதற்­குக் கார­ணம் என்­றார் அவர். நிலைமை தற்­போது கட்­டுக்­குள் உள்­ள­தாக அவர் தெரி­வித்­தார்.

நில­ந­டுக்­கத்­தில் வீடு­களை இழந்­த­வர்­க­ளுக்கு இன்­னும் ஓராண்­டுக்­குள் வீடு கட்­டித்­த­ரப்­படும் என்று அவர் உறு­தி­கூ­றி­யுள்­ளார்.

இந்­நி­லை­யில் சிரியா மீட்­புப் பணி­களில் உத­வும்­படி ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தைக் கேட்­டுக்­கொண்­டுள்­ளது.

இதற்­கி­டையே சிங்­கப்­பூ­ரில் உள்ள துருக்­கிய தூத­ர­கம் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­குப் பொருள்­களை நன்­கொடை அளிக்­கும்­படி இங்­குள்ள பொது­மக்­க­ளைக் கேட்­டுக்­கொண்­டுள்­ளது.

நன்­கொடை அளிக்­கப்­படும் பொருள்­கள் துருக்­கிக்­கும் சிரி­யா­வுக்­கும் அனுப்பி வைக்­கப்­படும் என்று அது தெரி­வித்­தது.

பெரி­ய­வர்­க­ளுக்­கும் சிறு­வர்க்­கும் குளிர்­கால ஆடை­கள், கூடா­ரங்­கள், பிள்­ளை­க­ளுக்­கான டைய­பர்­கள், மக­ளி­ருக்­கான சுகா­தா­ரப் பொருள்­கள், கெட்­டுப்­போ­காத உண­வு­வ­கை­கள் உள்­ளிட்ட 16 பொருள்­களை அதன் சமூக ஊட­கத் தளங்­களில் அது பட்­டி­ய­லிட்­டுள்­ளது.

எஸ்­ஜி­எக்ஸ் சென்­டர், 2 ஷெண்­டன் வே, #10-03 எனும் முக­வ­ரி­யில் உள்ள தூத­ரக வளா­கத்­தில் பொருள்­களை நேர­டி­யா­கவோ அஞ்­சல் வழி­யா­கவோ ஒப்­ப­டைக்­க­லாம்.