தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மழையால் மலேசியாவில் காய்கறி விளைச்சல் பாதிப்பு; தாறுமாறாக ஏறிய விலை

1 mins read

கணிக்­க­மு­டி­யா­மல் மாறிக்­கொண்­டி­ருக்­கும் பரு­வ­நி­லை­யால் மலே­சி­யா­வின் கேம­ரன் மலை­யில் காய்­கறி உற்­பத்தி பாதிக்­கப்­பட்­டுள்­ளது. இத­னால் காய்­க­றித் தட்­டுப்­பாடு ஏற்­பட்டு, விலை­ இரட்­டிப்­பா­கி­யுள்­ளது.

ஜன­வரி முதல் மார்ச் வரை வழக்­க­மாக மழை பெய்­யாது என்று கேம­ரன் மலை காய்­கறி உற்­பத்­தி­யா­ளர்­கள் சங்­கத்­தின் செய­லா­ளர் சே ஈ மொங் தி ஸ்டார் நாளி­த­ழி­டம் நேற்று முன் தினம் கூறி­னார்.

ஆனால் தற்­போது கிட்­டத்­தட்ட எல்லாநாளும் மழை பெய்து வரு­கிறது. அத­னால், தக்­காளி, மிள­காய், வெண்­டிக்­காய், பயிற்றங்காய், கத்­தி­ரிக்­காய் உள்­ளிட்ட காய்கறி­க­ளுக்­குக் கடும் பற்­றாக்­குறை ஏற்­பட்­டுள்­ளது. பரு­வ­ம­ழைக்­குப் பிறகு காய்­க­றி­கள் நன்கு வள­ரும். ஆனால் தொடர் மழை, மேக­மூட்­டம், குளிர் ஆகி­ய­வற்­றால் காய்­கறி விளைச்­சல் பாதிக்­கப்­பட்­ட­தாக திரு சே சொன்­னார்.

செடி­கொ­டி­கள் வளர்ந்­த­போதும் காய் காய்க்­க­வில்லை என்­றும் காய்­கறி விளைச்­சல் 50 விழுக்­காடு குறைந்­துள்­ள­தா­க­வும் திரு சே தெரி­வித்­தார்.

கீரை வகை­களும் நல்ல தரத்­தில் இல்லை என்­றும் அவர் குறிப்­பிட்­டார். அதிக ஈரத்­தன்மை, நோய்­கள் போன்­ற­வற்­றால் விளைச்­சல் பொய்த்­துள்­ளது அல்­லது காய்­க­றி­கள், கீரை­கள் நல்ல தரத்­தில் இல்லை என்­றார் அவர்.

பஹாங், ஜோகூர் ஆகி­ய­வற்­றில் ஏற்­பட்ட வெள்­ளத்­தில், காய்­கறி விநி­யோ­கம் மேலும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் திரு சே சொன்­னார்.

சில காய்­க­றி­க­ளின் விலை 40 விழுக்­காடு அதி­க­மா­க­வும் சில 100 விழுக்­கா­டுக்­கும் அதி­க­மா­க­வும் கூடி­யுள்­ள­தாக திரு சே குறிப்­பிட்­டார்.