ரணில்: இலங்கை பொருளியல் மீட்சி பெற 2026 வரை பிடிக்கும்

1 mins read
2e863afb-348e-4ccd-bb33-ac3648298e56
-

இலங்கை இன்­னும் மூன்று ஆண்டு­க­ளுக்கு நொடித்­தி­ருக்­கும் என்று அந்­நாட்டு அதி­பர் ரணில் விக்­ர­ம­சிங்கே கூறி­யுள்­ளார். கடந்த ஆண்டு பத­வி­யேற்ற திரு ரணில் இலங்­கை­யில் இது­வரை இல்­லாத பொரு­ளி­யல் நெருக்­க­டிக்­கு­த் தீர்­வு­தேடி அர­சாங்­கத்­தின் நிதி நிலை­மை­யைச் சரி­செய்ய முயன்று வருகிறார்.

வரி­களை உயர்த்­தி­ய­து­டன், அனைத்­து­ல­கப் பண நிதி­யத்­தி­ட­மி­ருந்து கடன்­பெற அமைப்­பு­டன் அவர் பேச்­சு­வார்த்தை நடத்தி வரு­கி­றார். தமது பொரு­ளி­யல் சீர்­தி­ருத்­தத் திட்­டங்­க­ளின்­படி நடந்­தால், 2026ஆம் ஆண்­டுக்­குள் இலங்கை நொடித்­துப் போன நிலை­யி­லி­ருந்து மீட்சி அடை­யும் என்று அதி­பர் ரயில் தெரி­வித்­தார். கடந்த ஆண்டு இலங்­கைப் பொரு­ளி­யல் 11 விழுக்­காடு சரிந்­தி­ருக்­க­லாம் என்று ஏற்­கெ­னவே அவர் கூறி­யி­ருந்­தார். ஆனால் புதிய நிதிக் கொள்­கை­கள் வழி­யாக வரு­வாய் ஈட்­டப்­பட்டு இவ்­வாண்டு இறுதிக்­குள் பொரு­ளி­யல் வளர்ச்சி திரும்பும் என்­றும் அவர் நேற்று கூறி­னார்.

இந்­நி­லை­யில், முன்­னாள் அதி­பர் கோத்­த­பாய ராஜ­பக்சே, 2022 ஆர்ப்­பாட்­டங்­க­ளின்­போது நாட்­டை­விட்­டுத் தப்­பிச் சென்றபோது, அவ­ரது இல்­லத்­தில் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட 17 மில்­லி­யன் இலங்கை ரூபா­யின் (S$61,608.30) தொடர்­பில், அவ­ரி­டம் விசா­ரணை நடத்­தப்­பட்­டது.

திங்­கட்­கி­ழமை அன்று மூன்று மணி நேரத்­துக்கு அவர் விசா­ரிக்­கப்­பட்­ட­தாக இலங்­கை காவல்­துறை கூறி­யது.