கொவிட்-19 கட்டுப்பாடுகள் நீக்கம்

கொவிட்-19 கட்டுப்பாடுகள் நீக்கம்

3 mins read

பிப்ரவரி 13 முதல் பொதுப் போக்குவரத்தில் முகக்கவசம் அணியத் தேவையில்லை

மோன­லிசா

சிங்­கப்­பூ­ரில் வரும் திங்­கட்­கி­ழமை (பிப்­ர­வரி 13) முதல் எஞ்­சி­யுள்ள அனைத்து கொவிட்-19 கட்­டுப்­பா­டு­களும் தளர்த்­தப்­ப­ட­வுள்­ளன. பொதுப் போக்­கு­வ­ரத்­தில் பயணம் செய்யும்போது இனி முகக்கவசம் அணியத் தேவையில்லை.

இருப்­பி­னும், சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு நிலை­யங்­கள், தாதிமை இல்­லங்­கள், மருந்­த­கங்­கள் ஆகி­ய­வற்­றில் தொடர்ந்து முகக்­க­வ­சம் அணிய சுகா­தார அமைச்சு வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

கொவிட்-19 நோய்ப் பர­வல் சூழல் அனைத்­து­லக அள­வி­லும் உள்­ளூர் அள­வி­லும் சீராக உள்­ளது என்­றும் அந்­நோய் மக்­க­ளுக்கு லேசான பாதிப்­பையே ஏற்­ப­டுத்­தும் நிலை­யில், 'டோர்ஸ்­கான்' விழிப்­பு­நி­லைக் குறி­யீடு மஞ்­சள் நிறத்­தி­லி­ருந்து பச்சை நிறத்­திற்­குக் குறைக்­கப்­பட்­டுள்­ளது என்­றும் கொவிட்-19 தொற்­றுக்­கெ­தி­ரான அமைச்­சு­கள்­நி­லைப் பணிக்­குழு நேற்று செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் தெரி­வித்­தது.

அனைத்து சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்­கும் நிரந்­த­ர­வா­சி­க­ளுக்­கும் நீண்­ட­கால வருகை அனு­மதி வைத்­தி­ருப்­போ­ருக்­கும் குறிப்­பிட்ட சில குறு­கி­ய­கால வருகை அனு­மதி வைத்­தி­ருப்­போ­ருக்­கும் தடுப்­பூ­சி­கள் தொடர்ந்து இல­வ­ச­மாக வழங்­கப்­படும்.

ஐந்து மற்­றும் அதற்கு மேற்­பட்ட வய­து­டைய அனை­வ­ரும் குறைந்­த­பட்ச பாது­காப்­பாக மூன்று டோஸ் 'எம்­ஆர்­என்ஏ' தடுப்­பூசி அல்­லது நோவா­வேக்ஸ் தடுப்­பூசி, அல்­லது நான்கு டோஸ் சினோ­வேக் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வது அவ­சி­யம்.

மேலும், குறிப்­பிட்ட சில பிரி­வி­னர் ஆண்­டு­தோ­றும் கூடு­தல் (பூஸ்­டர்) தடுப்­பூ­சி­க­ளைப் போட்­டுக்­கொள்ள பரிந்­து­ரைக்­கப்­ப­டு­வர் என்­றும் பணிக்­கு­ழு­வின் இணைத் தலை­வ­ரும் சுகா­தார அமைச்­ச­ரு­மான திரு ஓங் யி காங் தெரி­வித்­தார்.

ஏப்ரல் 1ஆம் தேதி முதல், கொவிட்-19 நோய்க்­கான சிகிச்­சைக்கு முழு மானி­யம் வழங்­கப்­ப­டாது. கொவிட்-19 பரி­சோ­த­னைக்கு இனி கட்­ட­ணம் செலுத்த வேண்­டும்.

வரும் திங்­கட்­கி­ழமை முதல் எல்­லைக் கட்­டுப்­பா­டு­களும் நீக்­கப்­ப­ட­வுள்­ளன. முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளாத பய­ணி­கள் சிங்­கப்­பூ­ருக்கு வரும்­போது பய­ணத்­துக்கு முந்­தைய கொவிட்-19 பரி­சோ­தனை முடி­வைக் காட்­டத் தேவை­யில்லை. முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளாத குறு­கி­ய­கால வருகை அனு­ம­தி­யு­டன் வரு­வோர் கொவிட்-19 பய­ணக் காப்­பு­று­தி­யைப் பெறத் தேவை­யில்லை.

இதற்­கி­டையே, வெளி­நாட்டு ஊழி­யர்­களும் வரும் திங்­கட்­கிழமை முதல் எவ்­வித சமூ­கக் கட்­டுப்­பா­டு­க­ளை­யும் எதிர்­கொள்ளமாட்­டார்­கள்.

ஞாயிற்­றுக்­கி­ழ­மை­க­ளி­லும் பொது விடு­முறை நாள்­க­ளி­லும் பிர­ப­ல­மான நான்கு இடங்­களில் கூட்­டத்­தைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான 'பிர­ப­ல­மான இடங்­கள் அனு­மதி' முறை நீக்­கப்­படும்.

மார்ச் மாதம் 1ஆம் தேதி முதல், வெளி­நாட்டு ஊழி­யர்­கள் சிகிச்சை நிலை­யங்­க­ளுக்­குச் செல்­வ­தற்­குப் பதி­லாக தங்­க­ளு­டைய தங்­கு­வி­டு­தி­க­ளி­லேயே தங்கி கொவிட்-19 தொற்­றி­ல் இ­ருந்து குண­ம­டை­ய­லாம்.

டிரேஸ்­டு­கெ­தர், சேஃப்என்ட்ரி உள்­ளிட்ட தொடர்­பு­க­ளைக் கண்­ட­றி­யும் முறை இனி செயல்­பாட்­டில் இருக்கமாட்டா. பொது­மக்களும் வர்த்தகங்களும் இச்செ­ய­லி­களை கைப்­பே­சி­களி­லி­ருந்து நீக்­கிக்­கொள்­ள­லாம்.

வரு­ம் 13ஆம் தேதி முதல் மார்ச் 12ஆம் தேதி வரை டிரேஸ்­டு­கெ­தர் கரு­வி­களை 108 சமூக மன்­றங்­க­ளி­லும் திரும்­பத் தர­லாம்.

மேலும், டிரேஸ்­டு­கெ­தர், சேஃப்என்ட்ரி மூலம் பெறப்­பட்ட தக­வல்­கள் அனைத்­தை­யும் சுகா­தார அமைச்சு அதன் தர­வுத்­த­ளங்­க­ளி­லி­ருந்து நீக்­கி­யுள்­ள­தாக தெரி­வித்­தது.

கடந்த 2020ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் நோய்ப்­ப­ர­வல் சூழ­லைச் சமா­ளிப்­ப­தற்­காக அமைக்­கப்­பட்ட கொவிட்-19 தொற்­றுக்­கெ­தி­ரான அமைச்­சு­கள்­நி­லைப் பணிக்­கு­ழு­வும் வரு­ம் திங்­கட்­கிழமை­யு­டன் கலைக்­கப்­படும்.

தொடர்ந்து கொவிட்-19 சூழலைச் சமா­ளிக்­கும் பொறுப்பை சுகா­தார அமைச்சு ஏற்­கும் என்­றும் எதிர்­கா­லத்­தில் நோய்த்­தொற்­றின் வீரி­யம் அதி­க­ரித்­தால் மீண்­டும் இப்­ப­ணிக்­குழு செயலில் இறங்கும் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

பணிக்­கு­ழு­வின் இணைத் தலை­வ­ரும் துணைப் பிர­த­ம­ரு­மான திரு லாரன்ஸ் வோங், அர­சாங்­கத்­தின் பெருந்­தொற்று நிர்வாகக் கட்­ட­மைப்­பும் நடை­முறை­களும் தொடர்ந்து நடப்­பில் இருக்­கும் என்­றார்.

"பணிக்­குழு தற்காலிகமாக கலைக்­கப்­ப­டு­கிறது. ஆனால், சிங்கப்பூர் தொடர்ந்து உயர் விழிப்­பு­நி­லை­யிலும் தயார்­நி­லை­யிலும் இருக்கும். எந்த நேர­மும் தேவை ஏற்படும்போது பணிக்குழு மீண்டும் செயலில் இறங்கும்," என்­றார் அவர்.

வருங்­கால நெருக்­க­டி­களுக்குத் தயார்­செய்­து­கொள்ள சிங்கப்பூர் தொடர்ந்து விழிப்­பு­டன் இருக்க வேண்­டும் என்று வர்த்­தக, தொழில் அமைச்­சர் கான் கிம் யோங் கூறி­னார்.

இந்­நி­லை­யில், கொவிட்-19 பெருந்­தொற்றை எதிர்­கொள்­வது நீண்ட, கடி­ன­மான பய­ண­மா­க­வும் இதில் பல எதிர்­பா­ராத திருப்­பங்­கள் நில­வி­ய­தா­க­வும் பிர­த­மர் லீ சியன் லூங் ஃபேஸ்புக் பதிவு ஒன்­றில் குறிப்­பிட்­டார்.

"ஒரு தலை­மு­றை­யின் இந்த நெருக்­கடி, நமது வாழ்க்­கையை ஆட்­டிப்­ப­டைத்து, உல­கைப் பெரி­தும் மாற்­றி­யுள்­ளது. ஆனா­லும், ஒன்­று­பட்டு செயல்­பட்­ட­தன் மூலம் நாம் பெருந்­தொற்­றைப் பாது­காப்­பா­கக் கடந்து வந்­துள்­ளோம்.

"இந்­தப் பய­ணம் முழு­வ­தும் நாம் ஒரு­வ­ருக்கு ஒரு­வர் ஆத­ர­வளித்து, நம்­பிக்கை கொண்­டி­ருந்­தோம். மேலும் வலு­வா­க­வும் மீள்­தி­ற­னு­ட­னும் நாம் எழுந்­துள்­ளோம். இது கடும் உழைப்பால் ஏற்பட்ட சாதனை," என்­றார் பிரதமர் லீ.