கெந்திங் மலையில் ஏற்பட்ட வேன் விபத்தில் எழுவர் மரணம்

கெந்திங் மலையில் ஏற்பட்ட வேன் விபத்தில் எழுவர் மரணம்

1 mins read
7c20a39f-ef58-4142-a9f9-e9a14818181d
-

மலே­சி­யா­வின் கெந்­திங் மலை­யில் நேற்று முன்­தி­னம் வளைவு நெளி­வான சாலை­யில் சென்­று­கொண்­டி­ருந்த வாடகை வேன் சாலைத் தடுப்­பின்­மீது மோதிய விபத்­தில் எழு­வர் உயி­ரி­ழந்­த­னர். குறைந்­தது எட்­டுப் பேருக்­குக் காயம் ஏற்­பட்­டது.

அந்த வேனின் இரு ஓட்­டு­நர்­களில் ஒரு­வர் சிகிச்சை பல­னின்றி நேற்று இறந்­து­விட்­ட­தாக பாகாங் காவல்­து­றைத் தலை­வர் ராம்லி முகம்­மது யூசோஃப் தெரி­வித்­தார்.

நேற்று முன்­தி­னம் பிற்­ப­கல் 1.15 மணி­ய­ள­வில் இந்த விபத்து நிகழ்ந்­தது. அப்­போது அந்த வேனில் 14 பேர் இருந்­த­தாக திரு ராம்லி கூறி­னார்.

உயி­ரி­ழந்­த­வர்­களில் இரு­வர் ஆட­வர், ஐவர் மாதர்­கள் என்­றார் அவர்.

கோலா­லம்­பூர் மருத்­து­வ­மனைக்­குக் கொண்டு செல்­லப்­பட்ட அறு­வ­ரில் வேன் ஓட்­டு­நர் சாங் தேம் கோங், 70, என்­ப­வ­ரும் அடங்­கு­வார். ஆனால், சிகிச்சை பல­னின்றி அவர் உயி­ரி­ழந்­து­விட்­டார்.

மற்ற இரு­வர் பெந்­தோங் மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­ட­னர். ஆனால், பின்னர் தெமர்லோ மருத்­து­வ­மனைக்கு அவர்­கள் மாற்­றி­வி­டப்­பட்­ட­னர். விபத்து நிகழ்ந்த இடத்­தி­லேயே அறு­வர் இறந்­து­விட்­ட­னர்.

பினாங்­கி­லி­ருந்து கெந்­திங் மலைக்கு அந்த வேன் சென்­ற­தாக திரு ராம்லி குறிப்­பிட்­டார். அந்த வேனில் 12 மாதர்­களும் இரு ஆண் வேன் ஓட்­டு­நர்­களும் இருந்­த­னர்.

"கெந்­திங் மலை­யி­லி­ருந்து வளைவு நெளி­வான சாலை­யில் கீழே இறங்­கிக்­கொண்­டி­ருந்­த­போது சாலைத் தடுப்­பின்­மீது வேன் மோதி­யது," என்­றார் திரு ராம்லி.