எம்ஆர்டி சுரங்கப்பாதையில் பயணிகளுக்கான முதல் அவசரகாலப் பயிற்சி

எம்ஆர்டி சுரங்கப்பாதையில் பயணிகளுக்கான முதல் அவசரகாலப் பயிற்சி

2 mins read
347f163b-300f-484a-82ff-1712f9d1f980
-

எஸ்­பி­எஸ் டிரான்­சிட் நிறு­வ­னம் அதன் முதல் பொது அவ­ச­ர­கால தயார்­நிலை பயிற்­சி­யை நேற்று நடத்­தி­யது. இந்த அவ­ச­ர­கா­லப் பயிற்சி புரோ­மி­னாட் எம்­ஆர்டி ரயில் நிலை­யத்­தின் சுரங்­கப்­பாதை­யில் நடை­பெற்­றது.

இதில் ஹுவா சோங் கல்­விக் கழ­கத்­தைச் சேர்ந்த மாண­வர்­கள், ஆசி­ரி­யர்­கள் என 40 பேர் பங்­கெ­டுத்­த­னர். ஆறு மாடி உய­ர­முள்ள சுரங்­க­வா­யிற்­கு­ழி­யைப் பயன்­ப­டுத்தி தப்­பிக்­கும் முறை குறித்து அவர்­க­ளுக்­குப் பயிற்சி அளிக்­கப்­பட்­டது. அவ­ச­ர­கா­லத்தில் சுரங்­கப் பாதை­யி­லி­ருந்து தப்­பிக்க அந்த வழி ஏற்­பு­டை­ய­து­தானா என்­பதை உறுதி செய்ய முதல்­மு­றை­யா­கப் பயிற்­சி­யின்­போது அந்­தச் சுரங்­க­வா­யிற்­குழி பயன்­ப­டுத்­தப்­பட்­ட­தாக எஸ்­பி­எஸ் டிரான்­சிட் குழு­மத்­தின் தலைமை நிர்­வாகி ஜெஃப்ரி சிம் கூறி­னார். இரண்டு எம்­ஆர்டி நிலை­யங்­க­ளுக்கு இடையே ரயில் மாட்­டிக்­கொண்­டாலோ அல்­லது எம்­ஆர்டி நிலை­யத்­தில் தீச்­சம்­ப­வம் ஏற்­பட்­டாலோ பய­ணி­கள் தப்­பிக்க சுரங்­க­வா­யிற்­குழி பயன்­ப­டுத்­தப்­படும் என்­றார் அவர்.

எம்­ஆர்டி நிலை­யங்­களில் அள­வுக்கு அதி­க­மா­னோர் கூடு­வதைத் தவிர்க்­க­வும் இந்த அணுகு­முறை கையா­ளப்­படும் என்று திரு சிம் கூறி­னார்.

முதல் பொது அவ­ச­ர­கால தயார்­நிலை பயிற்­சி­யில் ஈடு­பட்ட 35 மாண­வர்­கள், ஐந்து ஆசி­ரி­யர்­கள், செய்­தி­யா­ளர்­கள், எஸ்­பி­எஸ் டிரான்­சிட் நிறு­வ­னத்­தைச் சேர்ந்த அதி­கா­ரி­கள் ஆகி­யோர் நேற்று அதி­காலை 1 மணி அள­வில் ஓட்­டு­ந­ரில்­லாத, காலி எம்­ஆர்டி ரயி­லில் ஏறி­னர்.

அந்த ரயில் திடீ­ரென்று பழு­த­டைந்­த­து­போல பாவ­னைப் பயிற்சி நடத்­தப்­பட்­டது. சில மீட்­டர் தூரம் சென்ற அந்த ரயில் சுரங்­க­ப்

பா­தை­யில் திடீ­ரென்று முடங்­கி­யது. அதில் இருந்த மின்­சார இணைப்­பும் துண்­டிக்­கப்­பட்­டது.

பாவ­னைப் பயிற்­சி­யின்­போது குறைந்த அள­வி­லான வெளிச்­சமே இருந்­தது. ரயி­லின் குளிர்­சா­தன வச­தி­யும் நிறுத்­தப்­பட்­டது.

அவ­ச­ர­கா­லத்­தின்­போது 45 நிமி­டங்­க­ளுக்­குத் தாக்­குப்­பி­டிக்­கும் மின்­க­லன்­களை ரயில்­கள் பெற்றிருப்­ப­தாக எஸ்­பி­எஸ் டிரான்­சிட் கூறி­யது. ஆங்­கி­லத்­தில் அறி­விப்­பு­கள் செய்­யப்­பட்­டன. ரயி­லுக்­குள் இருக்­கும் எல்­இடி பல­கை­களில் செய்­முறை விளக்­கங்­கள் பதி­வி­டப்­பட்­டன.

ரயி­லின் முன் பகு­தி­யிலுள்ள கதவு திறக்­கப்­பட்­டதும், பயிற்­சி­யில் ஈடு­பட்ட அனை­வ­ரும் சுரங்­க­வா­யிற்­கு­ழியை நோக்கி ஏறத்­தாழ 20 மீட்­டர் தூரம் நடந்­த­னர். திசை வழி­காட்­டிச் சின்னங்களைத் தெளி­வாக பார்க்க முடிந்­த­தா­க­வும் சுரங்­கப்­பா­தை­யில் நடந்து செல்ல போது­மான வெளிச்­சம் இருந்­த­தா­க­வும் பயிற்­சி­யில் ஈடு­பட்­டோர் கூறி­னர்.

சுரங்­க­வா­யிற்­குழி வாயி­லாக அவர்­கள் எம்­ஆர்டி நிலையத்துக்கு சற்று தூரத்தில், மெரினா பே சேண்ட்­சுக்கு அரு­கில் இருக்­கும் திறந்­த­வெ­ளியை அடைந்­த­னர்.

இத்­த­கைய அவ­ச­ர­கா­லம் இது­வரை ஏற்­பட்­ட­தில்லை என்று குறிப்­பிட்ட திரு சிம், ஒரு­வேளை அவ்­வாறு ஒரு நிலை ஏற்­பட்­டால் நட­மாட சிர­மப்­ப­டு­வோ­ரால் சுரங்­க­வா­யிற்­கு­ழி­யில் ஏற முடி­யாது எனக் கூறி­னார்.

அத்­த­கை­யோரை சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை அதி­கா­ரி­கள் சுரங்­கப்­பா­தை­யி­லி­ருந்து வெளியே தூக்­கிச் செல்­வர் என்றார் அவர்.­