வேலையிடப் பாகுபாட்டைத் தண்டிக்கும்படி பரிந்துரை

வேலையிடப் பாகுபாட்டைத் தண்டிக்கும்படி பரிந்துரை

3 mins read

இனம், சமயம், வயது, குடியுரிமை, பாலினம் போன்றவற்றின் அடிப்படையில் பாகுபாட்டுக்கு எதிராக கூடுதல் பாதுகாப்பு

வேலை­யி­டத்­துக்கு பாகு­பாட்­டுக்கு எதி­ராக வரை­யப்­பட்ட வழி­காட்­டி­களை சட்­ட­மாக மாற்­றும் நகல் மசோதா வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. பொது­மக்­கள் அதில் இடம்­பெற்­றுள்ள பரிந்­து­ரை­கள் பற்றி கருத்­து­ரைக்­க­லாம். வேலை­யிட நியா­ய­மான நடை­முறை சட்­டத்­தின் நகல் மசோ­தாவை முத்­த­ரப்புக் ­குழு நேற்று வெளி­யிட்­டது.

இனம், மொழி, பாலி­னம், வயது போன்­ற­வற்­றின் அடிப் படை­யி­ல் பாகு­பாட்­டி­லி­ருந்து ஊழி­யர்­க­ளைப் பாது­காக்­கும் நட­வ­டிக்­கை­களும் தவ­று­செய்­யும் முத­லா­ளி­க­ளுக்கு எதி­ராக புதிய தண்­ட­னை­களும் அதில் முன்­மொ­ழி­யப்­பட்­டுள்­ளன.

பாகு­பாட்­டுக்கு எதி­ரான நடை­மு­றை­கள் சட்­டங்­க­ளாக இயற்­றப்­படும் என்று பிர­த­மர் லீ சியன் லூங் 2021 ஆகஸ்ட் மாதம் அறி­வித்­தி­ருந்­தார்.

மசோதா அடுத்த ஆண்டு பிற்­ப­கு­தி­யில் சட்­ட­மாக இயற்­றப்­படலாம். அதில் நான்கு பரந்­து­பட்ட இலக்­கு­களை அடைய 20 பரிந்­து­ரை­கள் முன்­மொ­ழி­யப்­பட்­டுள்­ளன. இனம், மொழி, சம­யம், பாலி­னம், குடி­யு­ரிமை, வயது, உடற் குறை­பாடு, மன­ந­லப் பிரச்­சி­னை­கள் போன்ற சார்­பு­க­ளுக்கு எதி­ராக ஊழி­யர்­க­ளைப் பாது­காப்­பது நோக்­கங்­களில் ஒன்று.

வேலைக்கு அமர்த்­து­வது, பதவி உயர்வு தொடர்­பான பாகு­பாட்­டுக்­கும் ஊழி­யர்­க­ளுக்கு நியா­யம் கிடைக்­கச் செய்­வது, சட்­டத்தை மீறு­வோ­ருக்கு, குற்­றங்­கள் எவ்­வ­ளவு கடு­மை­யா­னவை என்­ப­தன் அடிப்­ப­டை­யில் பல்­வேறு புதிய தண்­ட­னை­களை முன்­வைப்­பது ஆகி­யவை மற்ற சில நோக்­கங்­க­ளா­கும்.

நியா­ய­மற்ற வகை­யில் நடத்­தப்­படும் ஊழி­யர்­க­ளுக்கு உத­வு­ வ­தில் தேசிய தொழிற்­சங்­க காங்­கி­ரஸ் தொடர்ந்து முன்­னணி வகிக்­கும் என்று கரு­தப்­ப­டு­கிறது.

தொழிற்­சங்­கத்­தின் ஆத­ர­வு­டன் நியா­யம் கோரும் ஊழி­யர் ­க­ளுக்கு இழப்­பீ­டாக $30,000 வரை கிடைக்­க­லாம் என்­றும் தொழிற்­சங்­கம் சாரா­த­வர்­க­ளுக்கு அத்­தொகை $20,000ஆக இருக்­கும்.

இருப்­பி­னும் நியா­யம் கோரும் எல்லா மனுக்­களும் சம­ர­சப் பேச்சு கட்­டா­ய­மாக்­கப்­படும். பெரும்­பா­லான பிரச்­சி­னை­க­ளுக்கு சர்ச்சை நிர்­வா­கத்­துக்­கான முத்­த­ரப்­புக் கூட்­ட­ணி­யில் நடத்­தப்­படும் சம­ர­சப் பேச்­சின் வழி தீர்­வு­கா­ணப்­படும்.

25க்கும் குறை­வான ஊழி­யர்­கள் கொண்ட சிறிய நிறு­வ­னங்­கள் சட்­டத்­தி­லி­ருந்து ஐந்­தாண்­டு­கள் விலக்கு பெற­வேண்­டும் என்று பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளது. அந்­நி­று­வ­னங்­கள் சட்­டத்­தைப் புரிந்­து­கொள்ள அவ­காசம் தரு­வது அதன் நோக்­கம்.

பாகு­பாட்­டின் தொடர்­பில் கடந்த 2018 முதல் 2021 வரை கிடைத்த புகார்­களில் இரண்­டில் ஒன்று, சொந்த நாட்­ட­வர்க்கு சாத­க­மாக நடந்­து­கொண்­ட­தன் தொடர்­பி­லா­னவை என்று மனி­த­வள அமைச்சு கூறி­யது.

அதே கால­கட்­டத்­தில் வேலை தேடி­ய­போது பாகு­பாட்டை எதிர்­நோக்­கி­ய­தா­கக் கூறி­ய­வர்­க­ளின் விகி­தம் 43 விழுக்­காட்­டி­லி­ருந்து 25 விழுக்­கா­டா­கக் குறைந்­தது.

"எனி­னும், வேலை­யி­டப் பாகு­பாட்­டைச் சமா­ளிக்க தொடர்ந்து பணி­யாற்ற விரும்­பு­கி­றோம்," என்று மனி­த­வள அமைச்­சர் டான் சீ லெங் நேற்று கூறினார்.

"வேலை­யி­டத்­தில் நியா­யம் காக்க வலு­வான, உறு­தி­மிக்க நடை­முறை இருப்­பதை உறு­தி­செய்ய நாங்­கள் கூடு­தல் நட­வ­டிக்கை எடுக்க விரும்­பு­கி­றோம்," என்­றார் டாக்­டர் டான். முத்­தரப்புக் ­கு­ழு­வுக்கு அவர் தலைமை தாங்­கு­கி­றார்.

அதே­நே­ரம், புதிய சட்­டம் ஏற்றுக்­கொள்­ளப்­பட்­டால், அது தற்­போது நடப்­பில் உள்ள நியா­ய­மான வேலை நடை­முறை தொடர்­பான, விரி­வான முத்­த­ரப்பு வழி­காட்­டி­க­ளுக்கு மாற்­றாக இருக்­காது என்று டாக்­டர் டான் விளக்­கி­னார்.

அள­வுக்கு அதி­க­மாக விரி­வா­க­வும், முத­லா­ளி­கள், ஊழி­யர்­கள், தொழிற்­சங்­கத்­தி­னர் ஆகி­யோர் தங்­க­ளுக்கு ஏற்ப அவற்றை விளங்­கிக்கொள்­ளும் வகை­யி­லும் சட்­டங்­கள் இயற்­றப்­பட்­டால், அதி­க­மான கருத்­து­வே­று­பா­டு கள் ஏற்­படும் என்று அமைச்­சர் குறிப்­பிட்­டார்.