இந்திய அரசாங்கம் அதன் அறிவார்ந்த நகரங்கள் திட்டத்தின்கீழ், அடுத்த மாதம் 22 நகரங்களில் திட்டங்கள் நிறைவுபெறவுள்ளன. அவற்றில் எட்டு நகரங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. சென்னை, கோயம்பத்தூர், ஈரோடு, சேலம், வேலூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர் ஆகியவை அந்த எட்டு நகரங்களாகும்.
ஆக்ரா, வாரணாசி, புனே, விசாகப்பட்டினம் அகமதபாத் உள்ளிட்ட நகரங்களிலும் அடுத்த மாதம் அறிவார்ந்த நகரம் கீழள்ள திட்டம் மார்ச் மாதத்தில் நிறைவுபெறும். எஞ்சிய 78 நகரங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டங்கள் அடுத்த மூன்று, நான்கு மாதங்களில் முடிந்துவிடும் என்று இந்தியாவின் வீடமைப்பு நகர விவகாரங்கள் அமைச்சு நேற்றுமுன்தினம் கூறியது.
இந்திய அரசாங்கத்தின் அறிவார்ந்த நகரங்கள் திட்டம் 2015ல் தொடங்கியது. போட்டிகள் மூலம் 100 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டன. அவை எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு அறிவார்ந்த தீர்வுகளைக் கண்டு, நகரவாசிகளுக்கு சுத்தமான, நிலைத்தன்மைமிக்க சூழலை உருவாக்குவது நோக்கமாகும்.

