ஏறத்தாழ 85,000 முதியோருக்கு மசே நிதி மாத வழங்குதொகை

ஏறத்தாழ 85,000 முதியோருக்கு மசே நிதி மாத வழங்குதொகை

1 mins read

மத்­திய சேம நிதிக் கழ­கம், 1948க்கு முன்­னர் பிறந்த ஏறக்­குறைய 85,000 பேர் இனி மாத வழங்­கு­தொ­கை­யைப் பெறு­வர் என்று தெரி­வித்­துள்­ளது.

அவர்­கள் இந்­தத் தெரிவை இதற்கு முன்­னர் தேர்ந்­தெ­டுக்கா­விட்­டா­லும் இதற்­குத் தகு­தி­பெறு­வர். இவ்­வாண்டு ஜூன் மாதத்­தில் இருந்து உறுப்­பி­னர்­க­ளுக்கு இது­கு­றித்­துத் தக­வல் அனுப்­பப்­படும்.

தனிப்­பட்ட வங்­கிக் கணக்­கு­களில் அவ­ர­வர் பிறந்த மாதம் தொடங்கி வழங்­கு­தொ­கையை அவர்­கள் பெற்­றுக்­கொள்­வர் என்று கழ­கம் நேற்­றுக் கூறி­யது.

1948ஆம் ஆண்­டிலோ அதற்­குப் பிறகோ பிறந்த கழக உறுப்­பி­னர்­கள் வழங்­கு­தொ­கைக்கு விண்­ணப்­பிக்­கா­மலே அதற்­குத் தகு­தி­பெ­றும் முறை 2018ல் நடப்­புக்கு வந்­தது. இது­கு­றித்து ஆக்­க­க­ர­மான கருத்­து­கள் பெறப்­பட்­ட­தாகக் கழ­கம் கூறி­யது.

அதற்கு முன்­னர் உறுப்­பி­னர்­கள் பல­ரும் 65 வய­துக்­குப் பிறகு வழங்­கு­தொ­கை­யைப் பெற்­றுக்­கொள்­வ­தாக கழ­கத்­தி­டம் தெரி­விக்­கும் நடை­மு­றையை அலட்சியப்படுத்தியதாக அது குறிப்பிட்டது.

மேலும், 'சிபி­எஃப் லைஃப்' திட்­டத்­தின்கீழ் 7,000 உறுப்­பி­னர்­கள், சாதா­ரண, சிறப்­புக் கணக்­கு­களில் இருந்து மொத்­த­மாக ரொக்­கம் எடுக்க இய­லாத நிலை­யில் இருந்­தால், கூடு­தல் மாத வழங்­கு­தொகை­யைப் பெறு­வர் என்று கூறப்பட்டுள்ளது.

நேற்று முன்­தி­னம் வெளி­யி­டப்­பட்ட இவ்­வாண்­டின் வர­வு­செ­ல­வுத் திட்­டத்­தில், ஓய்­வுக்­கால நிதித் திட்ட உறுப்­பி­னர்­க­ளின் குறைந்­த­பட்ச மாத வழங்­கு­தொகை $350ஆக உயர்த்­தப்­படும் என்று துணைப் பிர­த­மர் லாரன்ஸ் வோங் அறி­வித்­தார்.

இதன்­மூ­லம் வரும் ஜூன் மாதத்­தி­லி­ருந்து ஏறத்­தாழ 112,000 பேர் பயனடைவர் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.