'கூடுதலான இளையர்கள் கைது செய்யப்பட்டனர்'

'கூடுதலான இளையர்கள் கைது செய்யப்பட்டனர்'

2 mins read
f9338881-4951-4fef-b85a-781fae4c5962
-

மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு: 2022ல் கஞ்சா பறிமுதல் அதிகரிப்பு

சிங்­கப்­பூ­ரில் சென்ற ஆண்டு கஞ்சா பறி­மு­தல் செய்­யப்­பட்ட சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்­தது. புதி­தாக கஞ்சா பயன்­ப­டுத்­தத் தொடங்­கிய 30க்குக் குறை­வான வய­து­டை­யோ­ரின் எண்­ணிக்­கை­யும் 2022ல் கூடி­யது.

இந்­தப் போக்கு கவ­லை­அளிப்­ப­தாக மத்­திய போதைப்­பொ­ருள் ஒழிப்­புப் பிரிவு கூறி­யி­ருக்­கிறது.

இங்கு 'ஐஸ்' போதைப்­பொருள் பர­வா­ல­க பயன்­ப­டுத்­தப்­ப­டு­கிறது. இருப்­பி­னும், கஞ்சா பயன்­ப­டுத்­து­வோர் எண்­ணிக்கை தொடர்ந்து அதி­க­ரிக்­கிறது.

மத்­திய போதைப்­பொ­ருள் ஒழிப்­புப் பிரிவு நேற்று வெளி­யிட்ட அதன் ஆண்­டுப் புள்­ளி­வி­வர அறிக்­கை­யில் இந்­தத் தக­வல்­கள் இடம்­பெற்­றுள்­ளன.

சென்ற ஆண்டு கஞ்சா பயன்படுத்தியதற்காகப் பிடிபட்டோர் எண்ணிக்கை 71 விழுக்காடு உயர்ந்தது. 2021ல் 138 பேர் இதன் தொடர்பில் பிடிபட்டனர். சென்ற ஆண்டு பிடிபட்டோரின் எண்ணிக்கை 236.

சென்ற ஆண்டு 'ஐஸ்' போதைப்­பொ­ருள் பயன்­ப­டுத்­தி­ய­தன் தொடர்­பில் கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை 9.4 விழுக்­காடு குறைந்­த­தா­கக் கூறப்­பட்­டது. சென்ற ஆண்டு மொத்­தம் 1,445 பேர் இதற்­கா­கப் பிடி­பட்­ட­னர். 2021ஆம் ஆண்­டில் பிடி­பட்­டோர் எண்­ணிக்கை 1,595.

கஞ்சா பயன்­ப­டுத்­தும் இளை­யர்­களில் பலர் புதி­தாக அதைப் பயன்­ப­டுத்­தக் கற்­றுக்­கொண்­ட­வர்­கள் என்று அறிக்கை குறிப்­பிட்­டது. சென்ற ஆண்டு இதன் தொடர்­பில் கைதா­னோ­ரில் 70 விழுக்­காட்­டி­னர் 30 வய­துக்­குக் குறை­வான வய­து­டை­யோர். அவர்­களில் 14 வய­துச் சிறு­வ­னும் அடங்­கு­வான்.

உல­க­ள­வில் போதைப்­பொ­ருள்­கள் தொடர்­பான கடு­மை­யான கொள்­கை­கள் தளர்த்­தப்­படும் வேளை­யில் சிங்­கப்­பூ­ரில் கஞ்சா பயன்­ப­டுத்­தும் இளை­யர்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கும் போக்கு கவலை அளிப்­ப­தாக மத்­திய போதைப் பொருள் ஒழிப்­புப் பிரிவு கூறி­யது.

தாய்­லாந்து உள்­ளிட்ட சில நாடு­கள் இவ்­வாறு நட­வ­டிக்கை மேற்­கொண்­டதை அது சுட்­டி­யது.

உல­கெங்­கும் கஞ்சாதான் அதி­க­மா­கப் பயன்­ப­டுத்­தப்­படும் போதைப்­பொ­ருள் என்று அது குறிப்­பிட்­டது.

சிங்­கப்­பூ­ரில் சென்ற ஆண்டு போதைப்­பொ­ருள் புழக்கத்­திற்­கா­கக் கைது செய்­யப்­பட்­டோ­ரின் மொத்த எண்­ணிக்கை மூன்று விழுக்­காடு அதி­க­ரித்து 2,812 ஆன­தாக நேற்று வெளி­யான அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

2020ஆம் ஆண்­டு­டன் ஒப்பு­நோக்க 2021ல் இந்த எண்­ணிக்கை குறைந்­தி­ருந்­தது. கொவிட்-19 கிரு­மிப் பர­வல் தொடர்­பில் விதிக்­கப்­பட்ட சமூ­கத் தொடர்­புக் கட்­டுப்­பா­டு­கள் இதற்­குக் கார­ணம் என்று கரு­தப்­ப­டு­கிறது.

இருப்­பி­னும் போதைப்­பொருள்­கள் பறி­மு­தல் செய்­யப்­படும் சம்­ப­வங்­கள் குறை­ய­வில்லை. கிரு­மிப் பர­வ­லின்­போதும் சிங்­கப்­பூ­ருக்­குள் போதைப்­பொ­ருள்­க­ளைக் கொண்­டு­வ­ரு­வ­தற்­குப் புதிய உத்­தி­க­ளைக் கடத்­தல்­கா­ரர்­கள் பயன்­ப­டுத்­தி­னர் என்று அறிக்கை குறிப்­பிட்­டது.

சென்ற ஆண்டு 133.25 கிலோ­ எடை­யுள்ள கஞ்சா பறி­மு­தல் செய்­யப்­பட்­டது. 2021ல் 107.08 கிலோ­ கஞ்சாவை அதிகாரிகள் கைப்பற்றினர்.

2022ல் பறி­மு­தல் செய்­யப்­பட்ட போதைப்­பொ­ருள்­க­ளின் மதிப்பு $14.04 மில்­லி­யன் என்று கூறப்­பட்­டது.