தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கோவை கார் குண்டுவெடிப்பு தொடர்பில் 60 இடங்களில் அதிகாரிகள் சோதனை

2 mins read

தமிழ்­நாட்­டின் பல்­வேறு மாவட்­டங்­களில் தேசி­யப் புல­னாய்வு அமைப்­பி­னர் (என்­ஐஏ) நேற்று சோதனை நடத்­தி­னர். பயங்­க­ர­வாத அமைப்­பு­க­ளு­டன் தொடர்­பு­டை­ய­தாக சந்­தே­கிக்­கப்­ப­டு­வோ­ரின் வீடு­களில் சோதனை நடை­பெற்­றது.

சென்­னை­யில் கொடுங்­கை­யூர், மண்­ணடி உள்­பட ஐந்து இடங்­களில் சோதனை நடந்­தது.

கோவை கோட்டை ஈஸ்­வ­ரன் கோவில் அருகே சென்ற ஆண்டு அக்­டோ­பர் மாதம் 23ஆம் தேதி கார் குண்­டு­வெ­டிப்பு நிகழ்ந்­தது. இதில் காரில் இருந்த உக்­க­டத்­தைச் சேர்ந்த ஜமேஷா முபின் என்­ப­வர் உயி­ரி­ழந்­தார்.

காவல்­துறை விசா­ர­ணை­யில் முபின் ஐஎஸ் பயங்­க­ர­வாத அமைப்­பு­டன் தொடர்­பில் இருந்­த­தா­க­வும் கோவை­யில் நாச­வேலையை அரங்­கேற்­றும் நோக்­கத்­தில் செயல்­பட்­ட­தா­க­வும் தெரி­ய­வந்­தது. பின்­னர் இந்த வழக்கு தேசிய புல­னாய்­வுப் பிரி­விற்கு மாற்­றப்­பட்­டது.

கோவை கார் குண்­டு­வெ­டிப்பு தொடர்­பாக நேற்­றைய சோதனை நடை­பெற்­ற­தா­கத் தமி­ழக ஊட­கங்­கள் தக­வல் வெளி­யிட்­டன.

தமிழ்­நாடு, கேரளா, கர்­நா­டகா ஆகிய மாநிலங்களில் மொத்­தம் 60க்கு மேற்­பட்ட இடங்­களில் என்­ஐஏ சோதனை நடத்­தி­ய­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

முன்­ன­தாக, இந்த வழக்­கில் தொடர்­பு­டை­ய­தாக 11 பேர் கைது செய்­யப்­பட்­ட­னர். அவர்­க­ளி­டம் நடத்­திய விசா­ர­ணை­யில் பல்­வேறு தக­வல்­கள் கிடைத்­த­தாக அதி­கா­ரி­கள் கூறி­னர்.

அவற்­றின் அடிப்­ப­டை­யில் சில மாதங்­க­ளுக்கு முன்பு தமி­ழ­கம் முழு­வ­தும், தடை செய்­யப்­பட்ட அமைப்­பு­க­ளு­டன் தொடர்­பில் இருந்­த­வர்­க­ளின் வீடு­களில் சோதனை நடந்­தது.

சில நாள்­க­ளுக்கு முன்பு இந்த வழக்­கில் தொடர்­பு­டைய முக­மது அசா­ரு­தீன் உள்­ளிட்ட ஏழு பேரை என்­ஐஏ அதி­கா­ரி­கள் மீண்­டும் தடுப்­புக் காவ­லில் வைத்து விசா­ரித்­த­னர். அதில் கிடைத்த ஆதா­ரங்­கள், காணொ­ளி­கள் ஆகி­ய­வற்­றின் அடிப்­ப­டை­யில் நேற்­றைய சோதனை நடந்­த­தா­கத் தெரி­கிறது.

நேற்­றைய சோத­னை­யில், கோவை கோட்­டை­மேடு, புல்­லுக்­காடு, உக்­க­டம், பிருந்­தா­வன் நகர், பாரத் நகர், குனி­ய­முத்­தூர், டி.கே.செட்டி வீதி, வசந்தா நகர் என 15 இடங்­களில் சோதனை நடந்­தது.

ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு உள்ளிட்ட தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாகச் சந்­தே­கிக்­கப்­ப­டு­வோ­ரின் வீடு­களில் நேற்­றுக் காலை 6 மணி முதல் 16 அதி­கா­ரி­கள் கொண்ட குழு தீவிர சோத­னை­யில் ஈடு­பட்­டது. சோத­னை­யின்­போது வீட்­டிற்­குள் யாரை­யும் அனு­ம­திக்­க­வில்லை.

பொள்­ளாச்­சி­யில் சையது ரகு­மான் என்­ப­வ­ரது வீட்­டில் பல்­வேறு முக்­கிய ஆவ­ணங்­கள் சிக்­கி­ய­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

மயி­லா­டு­து­றை­யில் முக­மது ஃபைசல் என்­ப­வர் வீட்­டி­லும் டவுன் கரிக்­காத்­தோப்­பைச் சேர்ந்த அன்­வர்­தீன், ஏர்­வாடி கட்­ட­ளைத் தெரு­வைச் சேர்ந்த கமா­லு­தீன் ஆகி­யோர் வீடு­க­ளி­லும் காயல்­பட்­டி­னத்­தில் ஆரீஸ் என்­ப­வர் வீட்­டி­லும் நேற்று சோதனை நடத்­தப்­பட்­டது.

திரு­வண்­ணா­மலை பகு­தி­யில் நடந்த சோத­னை­யில் சந்­தே­கத்­துக்­கு­ரிய மூவர் சிக்­கி­ய­தா­க­வும் அவர்­க­ளி­டம் தீவிர விசா­ரணை நடத்­தப்­ப­டு­வ­தா­க­வும் தக­வல்­கள் கூறு­கின்­றன.

கோவை குண்­டு­வெ­டிப்பு சம்­ப­வம் நடந்த சில வாரங்­களில், கர்­நா­டக மாநி­லம் மங்­க­ளூ­ரி­லும் ஆட்­டோ­வில் குக்­கர் குண்டு வெடித்­தது.

இது­கு­றித்­தும் என்­ஐஏ அதி­கா­ரி­கள் விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.