நியூசிலாந்தில் மீண்டும் புயல் அபாயம்; இதுவரை ஐவர் மரணம்

நியூசிலாந்தில் மீண்டும் புயல் அபாயம்; இதுவரை ஐவர் மரணம்

2 mins read
41eb837e-a551-4cdb-8c4a-87601e5281c2
-

நியூ­சி­லாந்தை கேப்­ரி­யேல் புயல் புரட்­டிப்­போட்­டதை அடுத்து, அங்கு இது­வரை ஐந்து பேர் மாண்­டு­விட்­ட­னர்.

இந்­நி­லை­யில், அந்­நாட்­டில் மீண்­டும் புயல் அபா­யம் ஏற்­பட்­டி­ருப்­ப­தாக அதி­கா­ரி­கள் தெரித்­த­னர்.

கேப்­ரி­யேல் புய­லால் ஏற்­கெ­னவே மிகக் கடு­மை­யா­கப் பாதிக்­கப்­பட்­டுள்ள பகு­தி­களை மீண்­டும் புயல் சூறை­யா­டக்­கூ­டும் என்று முன்­னு­ரைக்­கப்­பட்­டுள்­ளது.

இத­னால் மரண எண்­ணிக்கை அதி­க­ரிக்­கக்­கூ­டும் என்றும் அஞ்­சப்­ப­டு­கிறது.

நியூ­சி­லாந்­தின் கிழக்­குப் பகுதி புயல் கார­ண­மாக நிலை­கு­லைந்­தி­ருக்­கிறது. இந்­நி­லை­யில், அடுத்த சில நாள்­க­ளுக்­குக் கன­மழை பெய்­யக்­கூ­டும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

கேப்­ரி­யேல் புயல் கார­ண­மாகப் பல சாலை­கள் இருந்த இடம் தெரி­யா­மல் போய்­விட்­டன. பல வீடு­கள் இடிந்து தரை­மட்­ட­மா­கி­விட்­டன.

அது­மட்­டு­மல்­லாது, மின்­சார இணைப்பு துண்­டிக்­கப்­பட்­ட­தில் மக்­கள் கடும் அவ­திக்கு ஆளா­கி­யுள்­ள­னர்.

கன­மழை, வெள்­ளம் கார­ண­மாக 10,000க்கும் மேற்­பட்­டோர் தங்­கள் வீடு­க­ளி­லி­ருந்து வெளி­யே­றி­யுள்­ள­னர்.

நியூசிலாந்தில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்தின் வடக்குத் திசையிலிருந்து கேப்ரியேல் புயல் அண்மையில் கரையைக் கடந்தது.

இதனால் வெள்ளம் கரைபுரண்டோட, பாதிக்கப்பட்ட இடங்களில் பலரை இன்னும் காணவில்லை என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 3,500 பேரைக் காணவில்லை என்றும் அவர்களுடன் தொடர்புகொள்ள முடியாமல் அவர்களது அன்புக்குரியவர்கள் தவிப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததை அடுத்து, கூரை மீது நின்றுகொண்டு பலர் உதவிக்குக் காத்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

வெள்ளம் காரணமாக பாலம் ஒன்று இடிந்து விழுந்ததை அடுத்து, நேப்பியர் நகரில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அங்குள்ள மக்கள் செய்வதறியாது தவிக்கின்றனர்.

படம்: ஏஎஃப்பி