தாக்கப்பட்ட இந்திய ராணுவ வீரர் மாண்டார்; திமுக கவுன்சிலர் கைது

தாக்கப்பட்ட இந்திய ராணுவ வீரர் மாண்டார்; திமுக கவுன்சிலர் கைது

2 mins read
60d60738-3d1a-4961-ac56-1d438c151a7c
-

தமி­ழ்நாட்­டின் கிருஷ்­ண­கிரி மாவட்­டத்­தில் இந்­திய ராணுவ வீரர் ஒரு­வர் அடித்­துக் கொல்­லப்­பட்­டார். இதை­ய­டுத்து, திமுக கவுன்­சி­லர் உட்­பட ஒன்­பது பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

இம்­மா­தம் 8ஆம் தேதி­யன்று பூச்­சம்­பள்ளி நக­ரில் உள்ள பொது குடி­நீர் தொட்­டி­யில் ராணுவ வீரர்­க­ளான பிர­பு­வும் (படம்) அவ­ரது சகோ­த­ரர் பிர­பா­க­ர­னும் தங்­கள் ஆடை­க­ளைத் துவைத்­துக்­கொண்­டி­ருந்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

அப்­போது அவ்­வ­ழி­யாக தமது இரண்டு மகன்­க­ளு­டன் சென்­று­கொண்­டி­ருந்த திமுக கவுன்­சி­லர் ஆர். சின்­ன­சு­வாமி அங்கு ஆடை­க­ளைத் துவைக்­கக்­கூ­டாது என்­றும் அங்­கி­ருந்து கிளம்­பிச் சென்­று­விட வேண்­டும் என்­றும் அந்த இரு சகோ­த­ரர்­க­ளி­டம் கடிந்­து­கொண்­ட­தாக நம்­பப்­ப­டு­கிறது.

இத­னைத் தொடர்ந்து, இரு­த­ரப்­பி­ன­

ரி­டையே கடு­மை­யான வாக்­கு­வா­தம் ஏற்­பட்­டது.

அப்­ப­கு­தி­யைச் சேர்ந்த மக்­கள் தலை­யிட்­ட­தும் திரு சின்­ன­சு­வா­மி­யும் அவ­ரது மகன்­களும் அங்­கி­ருந்து புறப்­பட்­டுச் சென்­ற­னர்.

ஆனால் அன்று மாலை தமது நான்கு மகன்­கள், உற­வி­னர்­கள் ஆகி­யோ­ரு­டன் அந்த இரண்டு சகோ­த­ரர்­க­ளின் வீட்­டிற்கு திரு சின்­ன­சுவாமி சென்­றார்.

அங்கு அந்த இரு­வ­ரை­யும் திரு

சின்­ன­சுவாமி­யும் அவ­ரு­டன் சென்ற கும்­ப­லும் தாக்­கி­ய­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

தாக்­கு­த­லில் பிர­பு­வின் தலை­யில் மிகக் கடு­மை­யான காயங்­கள் ஏற்­பட்­டன. அவர் ஓசூர் மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டார். அவ­ரது சகோ­த­ரர் பிர­பா­க­ர­னுக்கு இலே­சான காயங்­கள் மட்­டுமே ஏற்­பட்­டன.

தாக்­கு­தல் குறித்து காவல்­து­றை­யி­டம் பிர­பா­க­ரன் புகார் செய்­ததை அடுத்து, திரு சின்­ன­சு­வா­மி­யின் மக­னான குரு­

சூ­ரி­ய­மூர்த்தி உட்­பட ஆறு பேர் கைது செய்­யப்­பட்­ட­னர்.

இதற்­கி­டையே, சிகிச்சை பல­னின்றி பிரபு மர­ண­ம­டைந்­ததை அடுத்து, திரு சின்­ன­சு­வாமி உட்­பட மூவ­ரைக் காவல்­து­றை­யி­னர் கைது செய்­த­னர்.

திரு பிரபு காஷ்­மீ­ரில் ராணுவப் பணி­யில் ஈடு­பட்­டுக்­கொண்­டி­ருந்­ததா­க­வும் பொங்­கல் திரு­நா­ளுக்­காக அவ­ரும் அவ­ரது சகோ­த­ர­ரும் விடுப்பு எடுத்து சொந்த ஊர் திரும்­பி­ய­தா­க­வும் அறி­யப்­

ப­டு­கிறது. இம்­மா­தம் 9ஆம் தேதி­யன்று அவர் மீண்­டும் காஷ்­மீர் திரும்­பு­வ­தாக இருந்­தது.

அவருக்கு மனைவியும் இரண்டு பிள்ளைகளும் உள்ளனர்.

இந்­நி­லை­யில், நாட்­டைப் பாது­காக்க இரவு பகல் பாராது கடு­மை­யா­கச் சேவை­யாற்­றும் ராணுவ வீரர் கொலை செய்­யப்­பட்­டி­ருப்­

ப­தைக் கண்­டித்து தமிழ்­நா­டெங்­கும் கண்­ட­னக் குரல்­கள் எழுந்­துள்­ளன.