குடிநுழைவுக் குற்றம்: 414 பேர் பிடிபட்டனர்

குடிநுழைவுக் குற்றம்: 414 பேர் பிடிபட்டனர்

1 mins read

சட்­ட­வி­ரோ­தக் குடி­யே­றி­கள், விசா காலம் முடிந்­தும் தங்­கி இ­ருந்­தோர் எனக் கடந்த ஆண்டு 414 பேர் கைது­செய்­யப்­பட்­ட­னர். முந்­திய 2021ஆம் ஆண்­டில் இந்த எண்­ணிக்கை 355ஆக இருந்­தது.

குடி­நு­ழை­வுக் குற்­ற­வா­ளி­களுக்­குப் புக­லி­டம் அளித்­த­வகையில் அல்­லது வேலைக்கு வைத்திருந்த வகையில் 226 பேர் கைதா­யினர்.

2021ஆம் ஆண்­டு­டன் ஒப்­பு­நோக்க, இது சற்றே குறைவு. அவ்­வாண்­டில் இத்­த­கைய குற்­ற­மி­ழைத்­த­தாக 236 பேர் பிடி­பட்­டனர்.

எல்­லை­க­ளைத் திறந்­த­பின் சோத­னைச்­சா­வ­டி­கள் வழி­யாக சட்­ட­வி­ரோ­தக் கடத்­தல் முயற்­சி­கள் இடம்பெறுவதும் கூடியது.

முந்­திய 2021ஆம் ஆண்டு 27,000 சட்­ட­வி­ரோ­தக் கடத்­தல் முயற்­சி­கள் இடம்­பெற்ற நிலை­யில், சென்ற ஆண்டு அந்த எண்­ணிக்கை 35,000ஆக அதி­க­ரித்­தது.