1,200 புதிய விமானங்களை மற்ற இந்திய நிறுவனங்கள் வாங்கும் என எதிர்பார்ப்பு

1,200 புதிய விமானங்களை மற்ற இந்திய நிறுவனங்கள் வாங்கும் என எதிர்பார்ப்பு

1 mins read

ஏர் இந்­தியா நிறு­வ­னம் 470 புதிய விமா­னங்­களை வாங்க இருப்­பது இந்­திய விமா­னப் போக்­கு­வ­ரத்­துத் துறை­யின் வளர்ச்­சி­யில் புதிய உந்­து­சக்­தி­யாக விளங்­கும் எனக் கூறப்­படு­கிறது.

இண்­டிகோ உள்­ளிட்ட பிற இந்­திய உள்­ளூர் விமான சேவை நிறு­வ­னங்­கள் அடுத்த 24 மாதங்­களில் மொத்­தம் 1,000 முதல் 1,200 புதிய விமா­னங்­களை வாங்க ஒப்­பந்­தத்­தில் கையெ­ழுத்­தி­ட­லாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக ஆசிய பசி­பிக் விமா­னப் போக்­கு­வரத்து மையம் (காப்பா) என்ற அமைப்பு முன்­னு­ரைத்­துள்­ளது.

"கொவிட்-19 தொற்று பர­வு­வ­தற்­கு­முன் இண்­டிகோ நிறு­வ­னம் கிட்­டத்­தட்ட 300 விமா­னங்­களை வாங்­கத் திட்­ட­மிட்டு வந்­தது. கொவிட்-19 பர­வ­லால் அது தள்­ளி­வைக்­கப்ப்­பட்­டது. இந்­நி­லை­யில், அந்த எண்­ணிக்­கையை மேலும் அதி­க­ரித்து, அந்­நி­று­வ­னம் ஏறக்­கு­றைய 500 விமா­னங்­களை வாங்­க­லாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது," என்று `காப்பா' அறிக்கை கூறு­கிறது.

இப்­போது, எல்லா இந்­திய விமான சேவை நிறு­வ­னங்­களும் சேர்த்தே ஏறக்­கு­றைய 700 விமா­னங்­க­ளைத்­தான் இயக்கி வரு­கின்­றன.