சிங்கப்பூரின் ஆய்வுக்குரல் ஓய்ந்தது

சிங்கப்பூரின் ஆய்வுக்குரல் ஓய்ந்தது

3 mins read
99494326-d1fe-4964-b3ef-8fd74fb3984b
-

லதா

சிங்­கப்­பூ­ரின் தலை­சி­றந்த ஆய்­வா­ள­ரும் ஊட­க­வி­ய­லா­ரு­மான திரு ந.பால­பாஸ்­க­ரன் உடல்­ந­லக் குறை­வி­னால் நேற்­றுக் காலை தமது இல்­லத்­தில் கால­மா­னார். அவ­ருக்கு வயது 82.

வசீ­க­ரிக்­கும் குரல் வளத்­தி­னா­லும் ஈர்க்­கும் எளி­மை­யான எழுத்­தா­லும் வானொலி, தொலைக்­காட்­சித்­து­றை­யில் கோலோச்­சி­ய­வர். சீரிய ஆய்­வு­க­ளா­லும் சீண்டும் கூர்­மை­யான விமர்­ச­னங்­க­ளா­லும் தமிழ் ஆய்வு, இலக்­கி­யத்­து­றை­யில் தடம் பதித்­த­வர். "சிங்­கப்­பூ­ருக்கு வந்­தோம், பொரு­ளீட்­டி­னோம் என்­றில்­லா­மல் சிங்­கப்­பூர் தமிழ் மொழி, இலக்­கி­யம், ஆய்­வுத் துறைக்கு குறிப்­பிடத்­தக்க பங்­காற்­றி­ய­வர்," என்று முனைவர் அ. வீரமணி கூறினார்.

பாண்­டிச்­சே­ரி­யில் 1941ல் பிறந்த திரு பால­பாஸ்­க­ரன், கெடா மாநி­லத்­தில் துணி வணி­கம் செய்த தந்­தை­யு­டன் இணைய குடும்­பத்­து­டன் 10 வய­தில் மலே­சி­யா­வுக்கு குடி­பெ­யர்ந்­தார்.

மலா­யாப் பல்­க­லைக்­க­ழ­க இந்­தி­ய­வி­யல் துறை­யில் இளங்­கலை, முது­க­லைப் பட்­டங்­கள் பெற்­ற­வர். 1963ல் ரேடியோ மலா­யா­வில் சேர்ந்த அவர், பின்னர் மலாயா பல்­க­லைக்­க­ழ­கத்­தில் விரி­வு­ரை­யா­ளரானதும் பகுதிநேரமாக வானொ­லியில் பணிபுரிந்தார்.அவ­ரு­டன் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் பணி­செய்தவரும் நீண்­ட­கால நண்­ப­ரு­மான முனை­வர் சுப.திண்­ணப்­பன், "புதை­யுண்ட செய்­தி­கள், கருத்­து­க­ளைத் தேடித் தரும் சிறந்த ஆய்­வா­ளர்," எனப் போற்­றி­னார். 1982ல் சிங்­கப்­பூர் வந்த அவர், சிங்­கப்­பூர் தொலைக்­காட்சி/வானொலி தமிழ்ச் செய்­திப் பிரி­வில் சேர்ந்து, மூத்த செய்­தி­யா­சி­ரி­ய­ரா­க 2000வது ஆண்டில் ஓய்வு பெற்றார்.

பால­பாஸ்­க­ர­னு­டன் 20 ஆண்­டு­கள் பணி­பு­ரிந்த தமிழ்ச் செய்­திப் பிரி­வின் முன்னாள் துணைத்­தலை­வ­ரும் சிங்கப்பூர் தமிழ் எழுத்­தாளர் கழ­கத் தலை­வ­ரு­மான திரு நா.ஆண்­டி­யப்­பன், "வானொலி நாட­கம், செய்தி, நிகழ்ச்­சி தயா­ரிப்பு என அனைத்­தி­லும் தன்னிகரற்று திகழ்ந்த அவர் தன் குரல் வளத்­தால் ஏரா­ள­மான ரசி­கர்­க­ளைப் பெற்­றவர்," என்­றார்.

"பரந்த அறி­வாற்­ற­லும் தேர்ந்த எழுத்­தாற்­ற­லும் கொண்ட பால­பாஸ்­க­ர­னி­டம் இருந்து நான் நிறை­யக் கற்­றுக்­கொண்­டேன்," எனக்­ கூ­றி­னார் வசந்­தம் தமிழ்ச் செய்­திப் பிரி­வின் முன்­னாள் தலை­வர் திரு மு.கார்­மே­கம்.

ஓய்­வு­பெற்ற பின்­னர் மெகாஸ்­டார் புரொ­டக்­‌ஷ­னில் கிட்­டத்­தட்ட 5 ஆண்­டு­கள் பால­பாஸ்­க­ரன் மேற்­கொண்ட எழுத்­துப் பணி­களை நினை­வு­கூர்ந்த மெகாஸ்­டார் புரொ­டக்­‌ஷன் நிறு­வ­ன­ரான திரு வி.கலைச்­செல்­வன், அவரை 'மிகச் சிறந்த திற­மை­சாலி' என வர்­ணித்­தார். மூன்­றாண்­டு­க­ளுக்­கும் மேலாக ஒளி­ப­ரப்­பான '30 நிமி­டங்­கள்' நடப்பு விவ­கார நிகழ்ச்சி அவ­ரது முத்­தி­ரைப் படைப்பு எனக் குறிப்­பிட்­டார்.

'தமி­ழ­வேள் கோ.சாரங்­க­பா­ணி­யும் தமிழ் முர­சும் - இன்­றைய பார்வை' என்ற ஆய்வு நூலுக்­காக சிங்­கப்­பூர் இலக்­கி­யப் பரிசை (2018) வென்ற திரு பால­பாஸ்­க­ரன், 'மலே­சி­யத் தமிழ்ச் சிறு­க­தை­கள்', 'சிங்­கப்­பூர் - மலே­சிய தமிழ் இலக்­கி­யத் தடம் - சில திருப்­பம்' உள்­ளிட்ட ஆய்­வு­நூல்­க­ளை­யும் எழு­தி­யுள்­ளார். கணை­யாழி விருது, கரி­காற்­சோ­ழன் விருது கள் பெற்­ற­வர்.

"இலக்­கி­யத்­தில் தான் நம்­பும் உண்­மை­யைத் எதற்­கும் எவ­ருக்­கும் அஞ்­சா­மல் துணி­வு­டன் எழு­தக்­கூ­டிய நெஞ்­சு­ரம் மிக்­க­வர் பால­பாஸ்­க­ரன்," என்று குறிப்­பிட்ட, சிங்­கப்­பூ­ரின் மூத்த எழுத்­தா­ளர் இராம.கண்­ண­பி­ரான், அவர் 50 சிறு­க­தை­கள் எழு­தி­யுள்­ள­தை­யும் சுட்­டி­னார்.

அவ­ரது மறைவு சிங்­கப்­பூ­ரின் இலக்­கிய ஆய்­வுத்­து­றைக்கு பேரி­ழப்பு என்று சிராங்­கூன் டைம்ஸ் பத்­தி­ரிகை ஆசி­ரி­யர் திரு ஷாந­வாஸ், செம்­மொழி ஆசி­ரி­யர் எம்.இலி­யாஸ் உள்­ளிட்ட ஊட­கத்­து­றை­யி­னர், இலக்­கி­ய­வா­தி­கள் பல­ரும் வருத்­தம் தெரி­வித்­த­னர்.

பால­பாஸ்­க­ரன் சிங்­கப்­பூர் தமிழ் இலக்­கியம், ஊட­க­வி­யல் ஆய்­வுகளில் மிகப் பெரிய பங்காற்­றி­னார். அவ­ரது கூர்ந்த அறி­வும் நேரிய பார்­வை­யும் புதிய கத­வு­களைத் திறந்­தன. அவர் பதிப்­பிக்­கா­மல் விட்­டுச் சென்ற பதி­வு­கள் மேலும் பல கத­வு­க­ளைத் திறக்கும். அவை பதிப்­பிக்­கப்பட­வேண்­டும் என்று குறிப்­பிட்­டார் சிங்­கப்­பூர் தமிழ்ப் பண்­பாட்டு மையத்­தின் தலை­வர் திரு அருண்­ம­கிழ்­நன்.

திரு பால­பாஸ்­க­ர­னின் மனைவி திரு­மதி கிரிஜா 2020ல் கால­மா­னார். மகள், இரு மகன்­கள், பேரப்­பிள்ளை ஆகி­யோரை விட்­டுச் சென்­றுள்­ள அன்­னா­ரின் நல்­லு­டல் இறுதி அஞ்­ச­லிக்­காக 91, தெம்­ப­னிஸ் லிங்­கில் உள்ள சிங்­கப்­பூர் ஃபியுன­ரல் பார்­ல­ரில் இன்று காலை முதல் நாளை மாலை வரை­யில் வைக்­கப்­பட்­டி­ருக்­கும். மாலை 5.30க்கு மண்­டாய் தக­னச் சாலைக்கு எடுத்­துச்­செல்­லப்­பட்டு எரி­யூட்­டப்­படும்.