புதிய பட்டதாரிகளுக்குச் சம்பளம் உயர்ந்துள்ளது

3 mins read

சிங்­கப்­பூ­ரில் புதி­தா­கப் பட்­டம் பெற்­ற­வர்­க­ளுக்கு வேலைச் சந்தை கடந்த ஆண்டு சாத­க­மாக அமைந்­தது.

புதிய பட்­ட­தா­ரி­கள் பெரும்­பா­லா­னோ­ருக்கு 2021ஆம் ஆண்­டு­டன் ஒப்­பி­டு­கை­யில் கடந்த ஆண்டு முழு­நேர வேலை­யு­டன் கூடு­தல் சம்­பளம் வழங்­கப்­பட்­ட­தாக பட்­ட­தாரி வேலை­நி­ய­ம­னம் தொடர்­பாக நேற்று வெளி­யி­டப்­பட்ட ஆய்வு முடி­வு­கள் காட்­டி­யுள்­ளன.

கொவிட்-19 கொள்­ளை­நோய் சூழ­லி­லி­ருந்து பொரு­ளி­யல் தொடர்ந்து மீண்­டு­வரு­வ­து­டன் வளர்ச்­சி­யும் கண்டு வரும் நிலை­யில் இந்த முன்­னேற்­றம் தெரி­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இதன்­படி, 2021ஆம் ஆண்­டில் ஊழி­ய­ர­ணி­யில் முழு­நேர நிரந்­த­ரப் பொறுப்­பு­களை ஏற்ற புதிய பட்­ட­தா­ரி­கள் 84 விழுக்­காட்­டி­னர் என்­றும் 2022ல் இணைந்த புதிய பட்­ட­தா­ரி­கள் 87.5 விழுக்­காட்­டி­னர் என்­றும் கண்­ட­றி­யப்­பட்­டது.

மேலும், 2021ஆம் ஆண்­டில் முழு­நேர நிரந்­தர வேலை­யில் அமர்த்­தப்­பட்ட புதிய பட்­ட­தா­ரி­க­ளுக்­கான சரா­சரி மொத்த சம்­ப­ளம் மாதத்­திற்கு $3,800 ஆக இருந்­தது என்­றும் கடந்த ஆண்டு அது $4,200ஆக உயர்ந்­தது என்­றும் 'கூட்­டுத் தன்­னாட்­சிப் பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளின் பட்­ட­தாரி வேலை­நி­ய­மன ஆய்வு 2022' கண்­ட­றிந்­துள்­ளது.

ஒட்­டு­மொத்­த­மாக, 2022ல் பல்­க­லைக்­க­ழ­கப் பட்­ட­தா­ரி­களில் 93.8 விழுக்­காட்­டி­ன­ருக்கு பட்­டம் பெற்ற ஆறுமாதக் காலத்­திற்­குள் நிரந்­தர, தன்­னு­ரிமை அல்­லது பகு­தி­நேர வேலை­கள் கிடைத்­து­விட்­டது என்­றும் கூறப்­பட்­டது.

இருப்­பி­னும் 2021ல் இருந்த 94.4 விழுக்­காட்­டைக் காட்­டி­லும் இது சற்று குறைவு.

பகு­தி­நேர அல்­லது தற்­காலிக வேலை­யில் சேர்ந்த பட்­ட­தா­ரி­கள் 2021ல் 8.7 விழுக்­கா­டாக இருந்து கடந்த ஆண்டு 4.5 விழுக்­கா­டா­கக் குறைந்­திருந்­தது.

சிங்­கப்­பூர் அதன் ஆக மோச­மான பொரு­ளி­யல் மந்­த­நி­லை­யைச் சந்­தித்த 2020ல் இந்த விகி­தம் 22.3 விழுக்­காடாக இருந்­தது.

இருப்­பி­னும் வேலை­யின்மை விகி­தம் 2021ல் இருந்­த­தைக் காட்­டி­லும் 2022ல் சற்று உயர்ந்­தி­ருந்­தது. புதிய பட்­ட­தா­ரி­களின் வேலை­யின்மை விகி­தம் 2021ல் 5.6 விழுக்­கா­டா­க­வும் 2022ல் 6.2 விழுக்­கா­டா­க­வும் இருந்­தது.

தக­வல், மின்­னி­லக்­கத் தொழில்­நுட்­பங்­கள், சுகா­தார அறி­வி­யல்­கள், பொறி­யி­யல் போன்ற வெவ்­வேறு துறை­களைச் சேர்ந்த பட்­ட­தா­ரி­கள் அதி­க­மா­னோர் முழு­நேர, நிரந்­தர வேலை­யைக் கைப்­பற்­றி­னர் என்­றும் கூறப்­பட்­டது.

குறிப்­பாக, தக­வல், மின்­னிலக்­கத் தொழில்­நுட்­பத் துறை­களில் பயின்ற பட்­ட­தா­ரி­கள் மற்ற துறை பட்­ட­தா­ரி­க­ளு­டன் ஒப்­பி­டு­கை­யில் அதி­க­பட்ச சம்­ப­ள­மான $5,625ஐக் கடந்­தாண்டு பெற்­ற­னர். 2021ல் அவர்­க­ளின் மாதச் சம்­ப­ளம் $5,000ஆக இருந்­தது.

அண்­மை­யில் தொழில்­நுட்­பத் துறை­யில் உள்ள ஊழி­யர்­கள் பலர் தங்­க­ளின் வேலையை இழந்­த­போ­தும் தொடர்ந்து தொழில்­நுட்­பத் துறை சார்ந்த பட்­ட­தா­ரி­க­ளுக்­கான தேவை இன்­னும் உள்­ளது என்று கவ­னிப்­பா­ளர்­கள் தெரி­வித்­துள்­ளனர்.

தொழில்­நுட்­பம் அதி­வி­ரை­வாக வளர்ச்­சி­கண்டு வரும் நிலை­யில் அத்­துறை சார்ந்த பட்­ட­தா­ரி­கள் சூழ­லுக்கு ஏற்ப மாறிக்­கொள்­ளும் தன்­மை­யைப் பின்­பற்­று­வ­து­டன் தங்­க­ளின் திறன்­க­ளைத் தொடர்ந்து மேம்­ப­டுத்­திக்­கொள்­வ­தில் கவ­னம் செலுத்த வேண்­டும் என்று வலி­யு­றுத்­தப்­ப­டு­கிறது.

சிங்­கப்­பூர் தேசிய பல்­கலைக்­க­ழ­கம், நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழ­கம், சிங்­கப்­பூர் நிர்­வா­கப் பல்­கலைக்­க­ழ­கம், சிங்­கப்­பூர் சமூக அறி­வி­யல் பல்­க­லைக்­க­ழ­கம் ஆகி­ய­வற்­றின் ஏறத்­தாழ 12,100 முழு­நே­ரப் பட்­ட­தா­ரி­கள் இந்த 2022 ஆய்­வில் பங்­கேற்­ற­னர்.

இவர்­கள் கடந்த ஆண்டு நவம்­பர் 1ஆம் தேதி­யன்று தங்­க­ளின் வேலை­நி­ய­ம­னத் தகு­தி­யைத் தெரி­வித்­த­தன் அடிப்­படை­யில் ஆய்வு மேற்­கொள்­ளப்­பட்­டது.

இந்­நி­லை­யில், வேலை­நி­ய­மனம் தொடர்­பாக வெளி­யான இப்­புள்­ளி­வி­வ­ரங்­கள் சிங்­கப்­பூரின் மீள்­தி­ற­னுக்­குச் சான்­றாக விளங்­கு­கிறது என்று வேலை­நி­ய­மன நிபு­ணர்­கள் கூறி­யுள்­ள­னர்.