திருவிழா களைகட்டினாலும் துயர் தொடர்கிறது

திருவிழா களைகட்டினாலும் துயர் தொடர்கிறது

1 mins read
89af6dc9-2139-40e6-ae95-59b8329f0b47
-

பிரே­சி­லின் தென்­கி­ழக்­குக் கரை­யோ­ரப் பகு­தி­களில் பெய்­து­வ­ரும் கன­மழை கார­ணத்­தால் வெள்­ளத்­து­டன் நிலச்­ச­ரி­வு­களும் ஏற்­பட்­டுள்­ளன.

இத­னால் அந்­நாட்­டில் 36 பேர் உயிர் இழந்­துள்­ள­னர். நூற்­றுக்­கணக்­கா­னோர் தங்­க­ளின் வீடு­களி­லி­ருந்து வெளி­யேற வேண்­டிய நிலைக்­குத் தள்­ளப்­பட்­ட­னர் என்று சாவ் பாலோ மாநில அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

மீட்­புப் பணி­யி­னர் தொடர்ந்து பாதிக்­கப்­பட்­டோ­ரைத் தேடி­வ­ரு­வ­து­டன் வெள்­ளத்­தால் தனி­மைப்­படுத்­தப்­பட்­டோ­ரைக் கண்­டு­பிடிக்­க­வும் சாலை­க­ளைத் திறக்­க­வும் முயன்று வரு­கின்­ற­னர்.

பிரே­சி­லின் கார்­னி­வல் திரு­வி­ழாக் கொண்­டாட்­டங்­க­ளைக் காண்­ப­தற்­காக சுற்­றுப்­ப­ய­ணி­கள் பலர் வந்து குவிந்­துள்ள இவ்­வேளை­யில் இது­போன்ற அசம்­பா­வி­தம் நடந்­துள்­ளது.

இதற்­கி­டையே, சாவ் பாலோ­வின் கரை­யோ­ரப் பகு­தி­யில் தொடர்ந்து கன­மழை பெய்­யும் என்று வானிலை முன்­னு­ரைப்­பு­கள் கூறு­கின்­றன.

இத­னால் குடி­மைத் தற்­காப்பு, தீய­ணைப்­புப் பிரி­வு­க­ளைச் சேர்ந்த மீட்­புப் பணிக்­கு­ழுக்­க­ளுக்­குப் பெரும் சோதனை காத்­திருக்­கிறது என்­றும் மரண எண்­ணிக்கை அதி­க­ரிக்­கும் என்­றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.