தடுப்புக் காவலில் 15 வயதுச் சிறுவன்

தடுப்புக் காவலில் 15 வயதுச் சிறுவன்

2 mins read
3b8906a1-e48b-4c8d-834b-86492ce638b2
-

உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் பதின்ம வயதினர் இருவர் மீது நடவடிக்கை

உள்­நாட்­டுப் பாது­காப்­புச் சட்­டத்­தின்­கீழ், பதின்ம வயது இளை­யர் இரு­வர் மீது நட­வடிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.

இருவரில் ஒரு­வ­ருக்கு வயது 15. சிங்­கப்­பூ­ரில் இவ்­வாறு தடுப்­புக் காவ­லில் வைக்­கப்­பட்­டோ­ரில் ஆக இளை­ய­வர் இவர்.

உயர்­நிலை மூன்­றாம் வகுப்­பில் பயின்ற இவ்­வி­ளை­யர் சுய­மாக தீவி­ர­வாத சித்­தாந்­தத்­தின்­பால் ஈர்க்­கப்­பட்­டார். சிங்­கப்­பூ­ரில் புகழ்­பெற்ற சுற்­றுப்­ப­ய­ணத் தலங்­களில் கத்­திக்­குத்து தாக்­கு­தல் நடத்த இவர் திட்­ட­மிட்­டி­ருந்­தார். முஸ்­லிம் அல்­லா­தோ­ரின் தலை­க­ளைத் துண்­டிப்­பது இவ­ரது திட்­டம்.

உள்­நாட்­டுப் பாது­காப்­புத் துறை, 16 வய­தா­கும் மற்­றோர் இளை­ய­ருக்­குக் கட்­டுப்­பாட்டு உத்­த­ர­வைப் பிறப்­பித்­துள்­ளது. இதன்­கீழ் இவ­ருக்கு நட­மாட்­டக் கட்­டுப்­பா­டும் பொது­வெளி­யில் கருத்­து­ரைக்­க­வும் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

இவ்­விரு இளை­யர்­க­ளை­யும் சேர்த்து கடந்த 2015ஆம் ஆண்டு முதல் உள்­நாட்­டுப் பாது­காப்­புச் சட்­டத்­தின்­கீழ் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்ட 21 வய­துக்­குக் குறை­வா­னோ­ரின் எண்­ணிக்கை 11 ஆனது. இந்­தப் போக்கு கவ­லை­ய­ளிப்­ப­தாக உள்­துறை அமைச்சு கூறி­யது. இந்த 11 பேரில் ஏழு பேர் தடுப்­புக் காவ­லில் வைக்­கப்­பட்­ட­னர். நான்கு பேருக்­குக் கட்­டுப்­பாட்டு உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டது.

அண்­மை­யில் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்ட இளை­யர் இரு­வ­ரும், சென்ற ஆண்டு டிசம்­ப­ரில் தடுத்து வைக்­கப்­பட்ட 18 வயது இளை­யர் முக­மது இர்­ஃபான் டேன்­யல் முக­மது நூரு­டன் தொடர்­பில் இருந்­த­தா­கக் கூறப்­பட்­டது.

15 வயது இளை­யர், சிங்­கப்­பூ­ரில் தடை­செய்­யப்­பட்ட ஸிம்­பாப்வே போத­கர் சலா­ஃபி­யின் உரை­க­ளைச் செவி­ம­டுத்­த­தா­கக் கூறப்­பட்­டது. வெளி­நாட்­டி­னர் சில­ரு­டன் தொடர்­பு­கொண்ட பிறகு இவ­ரது தீவி­ர­வாத நம்­பிக்­கை­கள் வலுத்­தன. ஷியா முஸ்­லிம்­கள், சூஃபி முஸ்­லிம்­கள், முஸ்­லிம் அல்­லா­தோர் ஆகி­யோர்­மீது ஆயு­த­மேந்­தித் தாக்­கு­தல் நடத்­த­வும் இஸ்­லா­மி­யச் சட்­டம் நடப்­பில் இருக்­கும் ஆஃப் கானிஸ்­தா­னுக்­குச் செல்­ல­வும் முடி­வெ­டுத்­தார்.

நண்­பர்­கள் சில­ரைத் தீவி­ர­வா­தத்­தின் பக்­கம் ஈர்க்க முயன்று தோல்­வி­யுற்­றார்.

16 வயது இளை­ய­ரின் நட­வடிக்­கை­களை 2020ஆம் ஆண்டு முதலே உள்­நாட்­டுப் பாது­காப்­புத் துறை கண்­காணித்து வரு­கிறது. எச்­சரிக்கை விடுக்­கப்­பட்ட பிற­கும் இவர் தீவி­ர­வா­தத்­தைப் பரப்­பும் முயற்­சி­யில் ஈடு­பட்­டார்.

தீவி­ர­வாத, பயங்­க­ர­வா­தக் குழுக்­கள் இளை­யர்­க­ளைக் குறி­வைத்து செயல்­ப­டு­வ­தாக உள்­துறை துணை­ய­மைச்­சர் ஃபைஷல் இப்­ரா­ஹிம் ஃபேஸ்புக்­கில் பதி­விட்­டுள்­ளார். கேடு விளை­விக்­கும் இத்­த­கைய இணை­யத் தக­வல்­களில் இருந்து நம் குழந்­தை­களைப் பாது­காக்க அனை­வரும் இணைந்து செயல்­ப­ட­வேண்­டும் என்­றார் அவர்.