பெர்சத்துவுக்கு சோதனை மேல் சோதனை

பெர்சத்துவுக்கு சோதனை மேல் சோதனை

2 mins read

முன்­னாள் மலே­சி­யப் பிர­த­ம­ரும் பெர்­சத்து கட்­சி­யின் தலை­வ­ரு­மான முகை­தீன் யாசி­னுக்­குச் சோதனை மேல் சோதனை ஏற்­பட்டு வரு­கிறது. திரு முகை­தீ­னு­டன் தொடர்­பில் இருக்­கும் மேலும் ஒரு­வர் மீது ஊழல் குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்­டுள்­ளது.

கொவிட்-19 நெருக்­க­டி

­நி­லையை எதிர்­கொள்ள திரு முகை­தீன் தொடங்­கி­வைத்த திட்­டம் தொடர்­பாக 4.1 மில்­லி­யன் ரிங்­கிட் (S$1.2 மில்­லி­யன்) லஞ்­சம் வாங்­கி­ய­தாக பெர்­சத்து கட்­சி­யின் முக்­கிய தலை­வர்­களில் ஒரு­வ­ரான ஆதம் ரட்­லான் ஆதம் முகம்­மது மீது குற்­றம் சாட்­டப்­பட்­டுள்­ளது. உள்­கட்­ட­மைப்பு நிறு­வ­னம் ஒன்­றி­ட­

மி­ருந்து 500,000 ரிங்­கிட் லஞ்­சம் வாங்­கி­ய­தா­க­வும் அவர் மீது ஏற்கெனவே குற்­றம் சுமத்­தப்­

பட்டுள்ளது.

இந்­நி­லை­யில், திரு முகை­

தீ­னு­டன் தொடர்­பு­டைய வர்த்­த­க­ரான 65 வயது டியோ வீ செங் மீதும் ஊழல் குற்­றச்­சாட்டு பதி­வா­னது. 12.8 மில்­லி­யன் ரிங்­கிட் லஞ்­சம் வாங்­கி­ய­தாக ஜோகூர் நீதி­மன்­றத்­தில் இவர் மீது குற்­றம் சுமத்­தப்­பட்­டது.

கடந்த ஆண்டு அம்னோ தலை­வர் அக­மது ஸாஹிட் ஹமி­டிக்கு எதி­ராக வழக்கு விசா­ர­ணை­யின்­போது திரு டியோ, திரு முகை­தீ­னின் மிக நெருங்­கிய நண்­பர் என சாட்­சி­கள் பலர் சாட்­சி­யம் அளித்­தது குறிப்­பி­டத்­தக்­கது.

திரு ஸாஹிட்­டுக்கு எதி­ராக ஊழல் குற்­றச்­சாட்­டு­கள் தள்­ளு­படி செய்­யப்­பட்­டன என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

பெர்­சத்து கட்­சி­யின் தக­வல் பிரி­வுத் தலை­வ­ராக இருந்த வான் சைஃபுல் வான் ஜான் மீதும் ஊழல் குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்­டுள்­ளது. கொவிட்-19 நெருக்­க­டி­நி­லை­யால் பாதிப்­

ப­டைந்த பூமி­புத்­தி­ரர்­க­ளுக்கு உதவத் தொடங்­கிய ஜனா விபாவா திட்­டத்­தின்­கீழ் நிறு­

வ­னங்­கள் ஒப்­பந்­தம் பெற அவற்­றி­ட­மி­ருந்து 6.9 மில்­லி­யன் ரிங்­கிட் லஞ்­சம் வாங்­கி­ய­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

குற்­றம் சுமத்­தப்­பட்­டதை அடுத்து, பெர்­சத்து கட்­சி­யின் தக­வல் பிரி­வுத் தலை­வர் பத­வி­யி­லி­ருந்து திரு சைஃபுல்

வில­கி­யுள்­ளார்.

அவ­ரது பதவி வில­கலை ஏற்­றுக்­கொள்­வ­தாக திரு முகை­தீன் நேற்று தெரி­வித்­தார்.

திரு சைஃபுதீ­னின் பதவி வில­கலை ஏற்­றுக்­கொள்­வ­தால் அவர் குற்­ற­வா­ளி­யா­கி­வி­ட­மாட்­டார் என்று திரு முகை­தீன் கூறி­னார். மாறாக, அவ­ரா­கவே முன்­வந்து பத­வி­யி­லி­ருந்து வில­கு­வது பாராட்­டுக்­கு­ரி­யது என்­றார் அவர்.

தமது கட்­சி­யு­டன் தொடர்­பா­ன­வர்­களை திரு அன்­வார் தலை­மை­யி­லான அர­சாங்­கம் குறி­வைத்து குற்­றச்­சாட்­டு­களை அடுக்­க­டுக்­கா­கச் சுமத்­து­வது நியா­ய­மற்­றது என்று திரு முகை­தீன் அதி­ருப்­திக் குரல் எழுப்­பி­உள்­ளார். எதிர்க்­கட்­சி­யி­ன­ருக்­குக் களங்­கம் விளை­விக்­கவே மலே­சிய அர­சாங்­கம் இத்­தைய நட­வ­டிக்­கை­களில் தீவி­ர­மாக இறங்­கி­யி­ருப்­ப­தாக அவர் கூறி­னார். அர­சாங்­கத் தலை­வர்­கள் பலர் ஏற்­கெ­னவே ஊழல் குற்­றச்­சாட்­டு­கள் எதிர்­நோக்­கு­வதை அவர் சுட்­டி­னார்.

ஊழல் குற்­றச்­சாட்­டு­களை எதிர்­கொள்­ளும் மூவ­ரும் தங்­க­ளுக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டு­களை மறுத்­துள்­ள­னர்.